search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவதானப்பட்டி அருகே பைக் விபத்தில் தச்சு தொழிலாளி பலி
    X

    கோப்பு படம்.

    தேவதானப்பட்டி அருகே பைக் விபத்தில் தச்சு தொழிலாளி பலி

    • காமக்காபட்டி மயான பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து தறி விழுந்து பின்னந்தலையில் படுகாயம் அடைந்தார்.
    • க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

    தேவதானப்பட்டி:

    கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது43). தச்சு தொழிலாளி. இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனது மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டி சென்றார். தேவதானப்பட்டி அருகே உள்ள காமக்காபட்டி மயான பகுதியில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து தறி விழுந்து பின்னந்தலையில் படுகாயம் அடைந்தார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து பாலமுருகனின் தம்பிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் குடும்பத்தாரிடம் விபத்து குறித்து கூறினார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது பாலமுருகன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×