என் மலர்
தேனி
- பொது சிவில் சட்டத்தால் எந்த நன்மையும் ஏற்பட போவது இல்லை.
- தி.மு.க. மாநில சுயாட்சி பேசிய கட்சி.
தேனி :
தேனி மாவட்டம் போடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. முன்னதாக நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொது சிவில் சட்டத்தால் எந்த நன்மையும் ஏற்பட போவது இல்லை. மணிப்பூரில் பிரதமர், முதல்-அமைச்சருக்கு தெரியாமல் கலவரம் நடக்கிறதா? காஷ்மீர், ஈழத்தில் என்ன நடந்ததோ, அதுதான் மணிப்பூரிலும் நடக்கிறது. மணிப்பூரில் நடக்கும் கலவரம் என்பது அங்குள்ள காடுகளில் வாழும் பழங்குடி மக்களை வெளியேற்றிவிட்டு அங்குள்ள கனிம வளங்களை எடுப்பதற்காக நடத்தப்படுகிறது. என்னிடம் நாட்டை கொடுங்கள். அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துகிறேன்.
தி.மு.க. மாநில சுயாட்சி பேசிய கட்சி. ஆனால், இப்போது உயர் போலீஸ் அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர் என யாராவது ஒருவர் தமிழர் இருக்கிறாரா? இந்த பதவிகளை பொறுப்போடு நிர்வகிக்க ஒரு தகுதியுள்ள தமிழர் கூட இல்லையா? இனி நேரடியாக பா.ஜ.க. தான் ஆட்சி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேனி மாவட்டம் சின்னமனூர், ஓடைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் பாகற்காய் விளைச்சல் அதிக அளவு காணப்படுகிறது.
- மற்ற காய்களின் விலை அதிக விலையேற்றத்தால், பாகற்காயின் சுவை கசப்பு என்றாலும் அதன் விலை குறைவாக இருப்பதால் அதனை பெண்கள் வாங்கிச் செல்கின்றனர்.
சின்னமனூர்:
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தக்காளி, சின்னவெங்காயம் மற்றும் பெரும்பாலான காய்கறி கள் விலை அதிகரித்து விற்கப்படு கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மார்க்கெட்டில் எந்த காய் விலை குறைவு என பார்த்து அது பிடிக்க வில்லை என்றாலும் வீட்டுக்கு வாங்கிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது புடலங்காய், கொத்தவரை, சவ்சவ், பல்லாரி போன்ற காய்கறி களே விலை குறைவாக உள்ளது.
மற்ற காய்கறிகள் அனைத்தும் ரூ.80க்கு மேல் விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ.100க்கு மேல் கிடைப்பதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்து வரு கின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர், ஓடைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் பாகற்காய் விளைச்சல் அதிக அளவு காணப்படுகிறது.
1 கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை வியாபாரிகள் நேரடியாகவே வாங்கிச் செல்கின்றனர். விவசாயி களும் சந்தைக்கு கொண்டு விற்பனை செய்து வரு கின்றனர். பாகற்காயின் சுவை கசப்பு என்றாலும் அதன் விலை குறைவாக இருப்பதால் அதனை பெண்கள் வாங்கிச் செல்கின்றனர். இதே போல பாகற்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைப்பதால் அவர்களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
- மாணவிகளுக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் தரும் வகையில் கல்வி ஒன்றே குறிக்கோள் என்பதை பல்வேறு சான்றுகளுடன் சுட்டிக் காட்டி பேசினார்.
- கடந்த ஆண்டு கல்வி முடித்த மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு ஆணையினை வழங்கினார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள திரவியம் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளின் வரவேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் டாக்டர் பாண்டியராஜ், செயலாளர் ஹேமலதா ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் விசும்பி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பேச்சாளர் டாக்டர் ஜெகன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் தரும் வகையில் கல்வி ஒன்றே குறிக்கோள் என்பதை பல்வேறு சான்றுகளுடன் சுட்டிக் காட்டி பேசினார். மேலும் கடந்த ஆண்டு கல்வி முடித்த மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு ஆணையினை வழங்கினார்.
- தனது மோட்டார் சைக்கிளை தாடிச்சேரி ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவில் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் அதனை எடுத்துச் செல்ல முயன்றனர்.
- எதற்காக எனது பைக்கை எடுக்கிறீர்கள்? என கேட்டபோது அவரை தரக்குறைவான வார்த்தை களால் திட்டி, தாக்கி அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரம் பணம் மற்றும் ெசல்போனை பறித்துச் சென்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மல்லிங்காபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 36). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தாடிச்சேரி ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவில் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் அ தனை எடுத்துச் செல்ல முயன்றனர்.
உடனே அங்கு வந்த குமார் எதற்காக எனது பைக்கை எடுக்கிறீர்கள்? என கேட்டபோது அவரை தரக்குறைவான வார்த்தை களால் திட்டினர். மேலும் குமாரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரம் பணம் மற்றும் ெசல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரிடம் பணம் பறித்தது வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த அஜய் (வயது 19). ஜெகதீ ஸ்வரன் (20), செல்வன் (19), அமர் (25) ஆகியோர் என தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தொகுதி தேர்தல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- இந்திய தேர்தல் ஆணைய நேரடி பார்வையில் இப்பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு அறையில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி பாராளுமன்ற தொகுதி வாக்கு பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்கள், ஆகியவற்றை வாக்குப்பதிவு எந்திர கிட்டங்கியில் இந்திய தேர்தல் ஆணைய ஆணை மற்றும் நடைமுறைகளை பின்பற்றி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இப்பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் 10ந் தேதி வரை நடைபெறும். இப்பணி களை மேற்கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணை யத்தால் நியமிக்கப்பட்ட பெங்களூரு பெல் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 8 பொறியாளர்கள் மூலம் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய நேரடி பார்வையில் இப்பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கருக்கு மேல் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
- கடந்த 2 ஆண்டுகளாகவே கொள்முதல் விலை குறைந்து கொண்டே வருவதன் காரணமாக உற்பத்தி செலவை கூட ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கருக்கு மேல் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் விளையும் தேங்காய்க்கு பிறகு மிகுந்த நீர் பிடிப்பும் சுவையும் கொண்டதாக இப்பகுதி தேங்காய் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் விவசாயம் காரணமாக இப்பகுதியில் விளையும் தேங்காய் நன்கு நீர் பிடிப்பும் சதைப்பிடிப்பும் கொண்டு விளங்குவது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் தற்போது தேங்காய் கொள்முதல் விலை கடும் சரிவை சந்தித்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாகவே கொள்முதல் விலை குறைந்து கொண்டே வருவதன் காரணமாக உற்பத்தி செலவை கூட ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உறிக்கப்பட்ட தேங்காய் டன் ஒன்றிற்கு ரூ.26,000 விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.18,000 முதல் ரூ.19,000 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
கிலோ ஒன்றுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வியாபாரிகளுக்கு கிலோ ரூ.26க்கு விற்கப்பட்ட தேங்காய் இந்த ஆண்டு ரூ.16 முதல் ரூ.17 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இளநீர் காய் ஒன்றிற்கு ரூ.16க்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தேங்காய் ஒன்று ரூ.7க்கு மட்டுமே வியாபாரிகளால் வாங்கப்படுகிறது.
மேலும் தற்போது இப்பகுதியில் திருவிழாக்கள், விசேஷங்கள் அனைத்தும் முடிந்து விட்டதால் தேவையும் குறைந்து விட்டது.
இதனால் போதிய விலை நிர்ணயம் இல்லாததால் தேங்காய் வெட்டுபவர்கள் இறக்குபவர்கள் கூலிக்கு கூட கட்டு படியாக வில்லை என்று பல தோப்புகளில் தேங்காய்களை மரங்களிலேயே வெட்டாமல் விட்டுள்ளனர்.
முறையாக 48 நாட்களில் இருந்து 54 நாட்களுக்குள்
தேங்காய் மரத்திலிருந்து இறக்கப்பட்டால் தான் அடுத்து புதிய தேங்காய் உற்பத்தி ஏற்படும். தற்போது மரத்திலேயே விவசாயிகள் தேங்காயை வெட்டாமல் உள்ளதால் நாளடைவில் உற்பத்தி குறையும்.
மேலும் உரிக்கப்படும் மட்டைகள் விலைக்குக் கூட கேட்க ஆளில்லாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தேனி மாவட்டத்தில் போடி சுற்றுப்பகுதிகளில் தேங்காய் உற்பத்தி, விவசாயம் செய்துள்ளவர்கள் வேதனையடைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தென்னை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கேரளாவில் பல்வேறு மாட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும்.
கூடலூர்:
தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தது.
மேலும் கேரளாவில் பல்வேறு மாட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதன்படி இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த பல மாதங்களாக நீர்வரத்து குறைவாக இருந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்த நிலையில் இடுக்கி பகுதியிலும் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் 112 கன அடியாக இருந்த நீர்வரத்து 602 கன அடியாகவும் மாலையில் 1200 கன அடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 2113 கன அடிநீர் வருகிறது. இதனால் நேற்று 114.95 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 115.80 அடியாக உள்ளது. 256 கன அடி நீர் வருகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 49.97 அடியாக உள்ளது. 48 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.90 அடியாக உள்ளது. 19 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.86 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 87.2, தேக்கடி 60, கூடலூர் 5.4, உத்தமபாளையம் 4.4. சண்முகாநதி 3.8, போடி 4.6, வைகை அணை 6.4, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 1, பெரியகுளம் 1.2, வீரபாண்டி 21.6, அரண்மனைபுதூர் 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்தது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீர்மட்டம் குறைவாக உள்ளதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே மழை கைகொடுக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 2 பெண்களும் அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும், பலருக்கு ெவளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
- அதனை நம்பி அவர்களிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை பெண்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்த நிலையில் நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்து போடி ஜீவா நகரைச் சேர்ந்த ரமேஷ் மனைவி சுமங்கலி, தங்கராஜ் மனைவி சித்ரலேகா ஆகியோரை சந்தித்தார்.
இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும், பலருக்கு ெவளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதனை நம்பி அவர்களிடம் குமரவேல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை சுமங்கலி பிரியாவின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
மேலும் அவர்கள் மோசடி பேர்வழி என தெரிய வரவே தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தையும் திருப்பித் தராமல் இருந்தனர். இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் குமரவேல் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- 21 விவசாயிகள் அங்கு குடில் அமைத்து நீதிமன்ற உத்தரவு இருக்கிறது எனக்கூறி அங்கிருந்து வெளியேற மறுத்து இரவு முழுவதும் விவசாயிகள் அங்கு தங்கினர்.
- கோர்ட்டு உத்தரவை நடைமுறைபடுத்தும் வகையில் அதிகாரிகள் தங்களுக்கு விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் தமிழக - கேரள எல்லை கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள அமராவதிபுரம் ஆசாரிபள்ளம் பகுதிகளில் விவசாயம் செய்து வந்தவர்களை வனத்துறையினர் கடந்த 1994ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றினர்.
70 ஆண்டு காலமாக விவசாயம் செய்த எங்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது எனக் கூறி வன உரிமைக்குழு அமைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வக்கீல் சுரேந்திரன் மூலம் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கில் அவர்கள் குமுளி வனப்பகுதியில் விவசாயம் செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வனப்பகுதிக்கு சென்ற ராமர், பாண்டியன், நல்லா, சாமித்தேவன், விஜயராணி உள்பட 21 விவசாயிகள் அங்கு குடில் அமைத்து தங்கினர்.
அவர்கள் அங்கே தங்க கூடாது என கம்பம் மேற்கு வனத்துறையினர் தடுத்தனர். நீதிமன்ற உத்தரவு இருக்கிறது எனக்கூறி அங்கிருந்து வெளியேற மறுத்து இரவு முழுவதும் விவசாயிகள் அங்கு தங்கினர்.
அமராவதிபுரம், ஆசாரிபள்ளம் ஆகிய பகுதிகளில் தங்களை விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி 2ம் நாளாக நேற்று 25க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வனப்பகுதியில் அனுமதியின்றி தங்குபவர்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது.
இது பற்றி முதன்மை வனப்பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து கொட்டும் மழையில் இன்று 3ம் நாளாக குமுளி வனப்பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோர்ட்டு உத்தரவை நடைமுறைபடுத்தும் வகையில் அதிகாரிகள் தங்களுக்கு விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இன்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
- நிலக்கோட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிற. இவருக்கும் இவரது சித்தப்பாவுக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
- ஊர் திரும்பிக்கொண்டிருந்தவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவரது கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
தேவதானப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையைச் சேர்ந்தவர் புரட்சி மணி (வயது 34). இவர் நிலக்கோட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது சித்தப்பாவுக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று புரட்சிமணி கெங்குவார்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு காரில் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த விஜய், புவனேஸ், திவாகர், முத்துராஜ், அருண், கண்ணன் ஆகியோர் புரட்சிமணியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவரது கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
மேலும் புரட்சி மணியை தாக்கியதில் அவரும் காயமடைந்தார். இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வனப்பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்ட பிறகு அங்கு விவசாயம் செய்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்ற ப்பட்டனர்.
- காலம் காலமாக வனப்பகுதியில் வசித்து வருகிறோம். தற்போது கோர்ட்டு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து ள்ளதால் மீண்டும் அனைத்து மக்களும் இங்கு குடியேறுவோம் என அவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வன சரகத்திற்குட்பட்ட தமிழக வனப்பகுதியில் ஆசாரி பள்ளம் பகுதி உள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுபடி வனப்பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டன. அப்போது அங்கு விவசாயம் செய்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்ற ப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் வன உரிமையை அங்கீகரித்தல் 2006 சட்டத்தின்கீழ் பாரம்பரிய வாசிகள் வாழ்வதற்காக சுய சாகுபடி செய்ய வன நிலத்தை வைத்திருக்க உரிமை கோரி வனத்துறைக்கு மனு கொடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட வன அலுவலர் சமர்தா பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வன வாசிகள் சட்டம் 2006ன்படி விண்ணப்பம் பரிசீலனைக்காக கிராம சபை கூட்டம் கூட்டி அல்லது வனக்குழு ஏற்பாடு செய்து அதன்மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில் வழக்கு தொடர்ந்த 18 குடும்பங்க ளுக்கு சாதகமாக கோர்ட்டில் தீர்ப்பு வந்தது. இதனால் 20க்கும் மேற்பட்டவர்கள் ஆசாரி பள்ளம் வனப்ப குதியில் டெண்ட் அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கம்பம் மேற்கு வனத்துறையினர் விரைந்து வந்து அவர்களை வெளியேற வற்புத்தினர். ஆனால் இன்று 2-வது நாளாக அவர்கள் வன ப்பகுதியிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். காலம் காலமாக வனப்பகுதியில் வசித்து வருகிறோம். தற்போது கோர்ட்டு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து ள்ளது. எனவே மீண்டும் அனைத்து மக்களும் இங்கு குடியேறுவோம் என அவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- பைக் ஓட்ட பழகிக் கொண்டு இருந்த போது அவ்வழியே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது.
- தந்தை, மகள் இருவரும் படுகாய மடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்த தந்தை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தென்னகர் காலனியைச் சேர்ந்தவர் சையது ஷேக் இப்ராஹிம் (வயது 45). டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவரது மகள் லைகாஇர்ஸத் (19). இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். தனது மகளுக்கு பைக் ஓட்ட சையது ஷேக் இப்ராஹிம் கற்றுக் கொடுத்து வந்தார்.
உத்தமபாளையம் - கம்பம் மெயின் ரோட்டில் பி.டி.ஆர். காலனி பஸ் நிறுத்தம் அருகே பைக் ஓட்ட பழகிக் கொண்டு இருந்த போது அவ்வழியே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் தந்தை, மகள் இருவரும் படுகாய மடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த சையது ஷேக் இப்ராஹிம் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






