என் மலர்tooltip icon

    தேனி

    • ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வு பெற்ற மாதம் தெரியாத நிலையில் எந்த மாதத்திலும் இந்த ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம்.
    • ஆவணங்களு டன் உரிய மாதங்களில் அரசு வேலை நாட்களில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நேர்காணல் செய்யலாம்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் ஜூலை, ஆகஸ்ட், செப்ட ம்பர் ஆகிய 3 மாதங்கள் மட்டும் நேர்காணல் நடத்த ப்படுவதால் அதிகளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருப்பதை எளிமை யாக்கும் நோக்கத்தில் சிறப்பு நடைமுறை அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது.

    ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வு பெற்ற மாதம் தெரியாத நிலையில் எந்த மாதத்திலும் இந்த ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம். ஓய்வூதியர்கள் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும், இணையதள மூலமாக ஓய்வூதியர்கள் நேர்காணல் மாதம் குறித்து அறிந்து கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் இணையதள முகவரியில் இருந்தும் வாழ்வு சான்றிதழை பதிவிறக்கும் செய்து இந்திய தூதரக அலுவலர், மாஜிஸ்ட்ரேட், நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்மந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். கருவூலத்திற்கு நேரடியாக வரும் ஓய்வூதியர்கள் ஓய்வூதிய புத்தகம், ஆதார் அடையாள அட்டை, வங்கிக்க ணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களு டன் உரிய மாதங்களில் அரசு வேலை நாட்களில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நேர்காணல் செய்யலாம்.

    தமிழ்நாடு மின்வாரியம், உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாந கராட்சி ஓய்வூதியர்கள் மற்றும் இதர நிறுவனத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவ ர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் இன்று பிற்பகலில் தேனிக்கு கொண்டு வரப்படுகிறது.
    • டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    தேனி:

    கோவையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் சொந்த ஊர் தேனி மாவட்டம் அன்னஞ்சி அருகில் உள்ள ரத்தினம் நகராகும். விஜயகுமார் தனது பள்ளி படிப்பை போடி அணைக்கரைப்பட்டியில் உள்ள பள்ளியில் முடித்தார். இவரது தந்தை செல்லையா கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் ராஜாத்தி பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவருக்கு பிரேமலதா என்ற அக்காவும், நிர்மலா என்ற தங்கையும் உள்ளனர். நிர்மலா தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக உள்ளார். தேனி ரத்தினம் நகரில் விஜயகுமாரின் பெற்றோர் மட்டும் வசித்து வருகின்றனர். தனது மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து கதறி அழுதனர். தனது மகன் மிகவும் தைரியமானவன் என்றும், தற்கொலைக்கு யாரேனும் முயற்சித்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் அறிவுரைகள் வழங்கி தேற்றுவார் எனவும் தெரிவித்தனர்.

    அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது ஆச்சரியமாக உள்ளது எனவும் கூறினர். டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் இன்று பிற்பகலில் தேனிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

    டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவால், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு 600 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2755 கனஅடியாக அதிகரித்துள்ளது.
    • நீர்மட்டமும் கடந்த 3 நாட்களில் 4 அடிவரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் கடந்த 3 நாட்களாக சாரல்மழையே பெய்து வருகிறது. இருந்தபோதும் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான குமுளி, லோயர்கேம்ப், தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு 600 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2755 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டமும் கடந்த 3 நாட்களில் 4 அடிவரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 116.90 அடியாக இருந்த நிலையில் இன்றுகாலை 118.05 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 2605 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 2755 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 356 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2276 மி.கனஅடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 49.97 அடியாக உள்ளது. வரத்து 94 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1988 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.34 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 27.4, தேக்கடி 25.2, கூடலூர் 3, உத்தமபாளையம் 2.6, சண்முகாநதிஅணை 3.2, போடி 1.2, சோத்துப்பாறை 1, வீரபாண்டி 3, அரண்மனைபுதூர் 2.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • எழுத்துக்களை வாசித்ததில் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு என்பது தெரிய வந்தது.
    • முற்கால, பிற்கால பாண்டியர் காலத்தில் மன்னர்கள் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கினர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் கோட்டூர் பஸ் நிலையம் அருகே சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் பகுதியில் 2 கல்வெட்டுகள் வைகை தொல்லியல் பண்பாட்டு கழக நிறுவனர் பாவெல் பாரதி தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர்.

    இதில் உள்ள எழுத்துக்களை வாசித்ததில் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு என்பது தெரிய வந்தது. இதில் கோட்டூரின் பழைய பெயர் மாதேவநல்லூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு 31 அங்குலம் நீளமும், 17 அங்குலம் அகலமும், 9 அங்குலம் கனமும் கொண்டுள்ளது. இதில் அளநாட்டைச் சேர்ந்த மாதேவநல்லூரில் தென்னடை பிரானார் கோவில் அகம்படி முதலிகளில் வடுகன் திருவாலி சீவலப்பன் என்ற வாசகம் தொடர்ச்சியின்றி உள்ளது. கோவிலின் இடது புறம் உள்ள இன்னொரு கல்வெட்டில் கோட்டூரின் பெயர் கோட்டையூர் என்று இடம்பெற்றுள்ளது. இந்த கல்வெட்டின் தொடக்கப்பகுதி சிதிலமடைந்துள்ளது.

    இதில் மன்னரின் பெயரையோ, ஆட்சி குறித்தோ குறிப்பிட்டு இருக்கலாம். அதன்பின் பக்கமோ வடுவன் சீவலப்பன் நிலதானம் தொடர்பான செய்தி உள்ளது. இது குறித்து பாவெல் பாரதி கூறியதாவது:-

    முற்கால, பிற்கால பாண்டியர் காலத்தில் மன்னர்கள் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கினர். அதை மையப்படுத்தி ஊர்கள் உருவாக்கப்பட்டன.

    அத்தகைய ஊர்கள் நல்லூர் என அழைக்கப்பட்டன. இன்றைய கோட்டூரில் சிவன் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலம் தானம் வழங்கி மாதேவநல்லூர் என்று பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் கடவுள் சிவன் தென்னடை பிரானார் என்று அழைக்கப்பட்டுள்ளார். இந்த கல்வெட்டுகள் குறித்து தஞ்சாவூர் கல்வெட்டுக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுலா தொழில் நிறுவனங்கள் சுற்றுலா துறையின் இணையதளத்தில் கேட்டுள்ள விபரங்கள், உரிய ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
    • முறையாக பதிவு செய்யாமல் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்களை சுற்றுலா துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மற்றும் பதிவு செய்யாமல் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் சுற்றுலா துறையின் இணையதளத்தில் கேட்டுள்ள விபரங்கள், உரிய ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    முறையாக பதிவு செய்யாமல் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா தொழில் நிறுவனங்களில் பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்து தேனி கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பஸ்நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை நேரிலோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேலச்சிந்தலைச்சேரி கிராமத்தில் வருகிற 12ஆம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
    • உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் இதர துறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தேவாரம் உள்வட்டம் பண்ணைப்புரம் வருவாய் கிராமம் உட்கடை மேலச்சிந்தலைச்சேரி கிராமத்தில் வருகிற 12ஆம் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.

    உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேசன் அட்டை, ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவத்துத்துறை மற்றும் இதர துறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • போலீசார் விசாரணையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீமான் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சீமான் தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் வடக்குத்தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் சீமான் (22). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கண்டமனூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அப்போது சக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சுத்தியலால் தாக்கியதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார்.

    அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    ஆனால் சீமான் கிடைக்காததால் அவருடன் சுற்றித்திரிந்த நண்பர்களுடன் விசாரிக்குமாறு பெற்றோர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமானந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    போலீசார் விசாரணையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீமான் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சீமான் தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பீர்பாட்டிலால் தலையில் சீமானை தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அவர் உயிரோடு உள்ளாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதுகூட தெரியவில்லை. உயிரோடு வந்துவிட்டால் தங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் ஒரு துணியில் சுற்றி வேலாயுதபுரம் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு எப்போதும் போல் அவர்கள் வேலைக்குச் சென்று சீமானின் குடும்பத்தினருடனும் அடிக்கடி பேசி அவன் வந்துவிட்டானா என கேட்டுள்ளனர்.

    ஆனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் இருந்ததால் மறைமுகமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சஞ்சீவ்குமார், சந்தனகுமார், பிரகாஷ், லோகநாதன் ஆகியோரை விசாரித்த போது அவர்கள் குடிபோதையில் தாங்கள் கொலை செய்ததாக தெரிவித்தனர். போதையில் கொலை செய்ததை போலீசார் விசாரணை நடத்திய போது போதையிலேயே உளறிக் கொட்டியதால் 4 பேரையும் கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து சீமான் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட கிணற்றிலிருந்து அவரது எலும்புக்கூடுகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவற்றை டி.என்.ஏ. பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சூர்யாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
    • அங்கு வந்த கும்பல் காசிமாயன் மற்றும் சூர்யா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்ற னர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை யைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 21). இவரது உறவினர் காசிமாயன் (24). இவர் சென்னையில் உள்ள கல்லூ ரியில் படித்து வருகிறார். மேலும் கபடி அணியிலும் விளையாடி வருகிறார். சூர்யாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி, நாகராஜ், இமானுவேல், முருகன், பிரகாஷ் ஆகியோருக்கும்இடையே தகராறு ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் சூர்யா மற்றும் காசிமாயன் ஆகியோர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் காசிமாயன் மற்றும் சூர்யா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்ற னர்.

    காயமடைந்த 2 பேரையும் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • திருமணத்தின் போது 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
    • தான் புதிதாக கட்டிவரும் வீட்டிற்காக கூடுதல் வரதட்சணை வாங்கி ஜெயந்தி ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ராமலிங்கபுரம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் லதா (28). இவருக்கும் ராமச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    திருமணமான சில வருடங்களிலேயே மனைவியின் நகைகள் அனைத்தையும் கணவர் வாங்கி அடகு வைத்துவிட்டார். மேலும் தான் புதிதாக கட்டிவரும் வீட்டிற்காக கூடுதல் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கணவர் மற்றும் மாமனார் செல்லம், உறவினர் ஜெயந்தி ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வரதட்சணை வாங்கி வராததால் லதாவை வீட்டைவிட்டு விரட்டி விட்டனர்.

    இதுகுறித்து தேனி மாவட்ட எஸ்.பி.யிடம் லதா புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய ராமச்சந்திரன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருசநாடு அருகில் உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது உறவினரை கொலைசெய்து விட்டு சிறைக்கு சென்றவர்.
    • பின்னர் விடுதலையாகி ஊருக்குள் சுற்றி வந்ததால் அவருக்கு யாரும் பெண் தரவில்லை. இதனால் சைக்கோ வாலிபர் போல பெண்களை கேலி செய்து வந்துள்ளார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் சொக்கர் (வயது 35). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது உறவினரை கொலைசெய்து விட்டு சிறைக்கு சென்றவர். பின்னர் விடுதலையாகி ஊருக்குள் சுற்றி வந்ததால் அவருக்கு யாரும் பெண் தரவில்லை. இதனால் சைக்கோ வாலிபர் போல பெண்களை கேலி செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 2ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சமுத்திரம் (53) என்பவரை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்கொலை சம்பவங்களில் ஈடுபட்ட அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து சொக்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் சொக்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கிட்டத்தட்ட 2 நாட்களில் அணையின் நீர் மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் நேற்று 2113 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 2605 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்கு கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாக 600, 1200, 2123 என நீர் வரத்து படிப்படியாக உயர்ந்த நிலையில் இன்று காலை அணைக்கு 2605 கன அடி நீர் வருகிறது. நேற்று காலை 115.80 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று காலை 116.90 அடியாக உயர்ந்துள்ளது.

    கிட்டத்தட்ட 2 நாட்களில் அணையின் நீர் மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் நேற்று 2113 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 2605 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து 356 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 2069 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. இடுக்கி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை குடிநீருக்கு மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மழை நின்றதாலும், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததாலும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது.

    கடந்த 1 மாதமாக அணைக்கு நீர் வரத்து இல்லாத நிலையில் இன்று காலை முதல் வைகை அணைக்கு 94 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 49.97 அடியாக உள்ளது. அணையில் இருந்து 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1988 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடி. வரத்து 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 86.60 அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 53, தேக்கடி 40, கூடலூர் 3.5, உத்தமபாளையம் 2.2, சண்முகாநதி அணை 4, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 2, வீரபாண்டி 7.2, அரண்மனைபுதூர் 2.4, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • முருகனை தாக்கி ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார்.
    • ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி வடக்குத்தெரு காலனியை சேர்ந்தவர் முருகன் (43). விவசாய கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பட்டாளம்மன் கோவில் அருகே தனது மனைவி சித்ரா (40) உடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காலனி தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் (28) என்பவர் சித்ராவை தனது செல்போனில் படம் பிடித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த முருகன் அவரிடம் இருந்த செல்போனை பறித்து பார்த்த போது அதில் தனது மனைவியின் புகைப்படம் பதிவாகி இருந்தது குறித்து கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. முருகனை தாக்கி ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனின் செல்போனை வாங்கி சோதனை செய்தார்.

    தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரியும் ஜெயச்சந்திரன் பள்ளி, கல்லூரி மாணவிகள் புகைப்படம் உள்பட தெருக்களில் நடந்து செல்லும் பெண்களின் புகைப்படம் என மொத்தம் 1500 போட்டோக்களை பதிவு செய்து வைத்திருந்தார். இதனை அவர் எதற்காக பதிவு செய்து வைத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

    ×