என் மலர்
தேனி
- போலீசார் விசாரணையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீமான் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சீமான் தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கண்டமனூர் வடக்குத்தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் சீமான் (22). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கண்டமனூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அப்போது சக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சுத்தியலால் தாக்கியதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார்.
அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
ஆனால் சீமான் கிடைக்காததால் அவருடன் சுற்றித்திரிந்த நண்பர்களுடன் விசாரிக்குமாறு பெற்றோர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமானந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
போலீசார் விசாரணையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீமான் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சீமான் தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பீர்பாட்டிலால் தலையில் சீமானை தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அவர் உயிரோடு உள்ளாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதுகூட தெரியவில்லை. உயிரோடு வந்துவிட்டால் தங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் ஒரு துணியில் சுற்றி வேலாயுதபுரம் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு எப்போதும் போல் அவர்கள் வேலைக்குச் சென்று சீமானின் குடும்பத்தினருடனும் அடிக்கடி பேசி அவன் வந்துவிட்டானா என கேட்டுள்ளனர்.
ஆனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் இருந்ததால் மறைமுகமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சஞ்சீவ்குமார், சந்தனகுமார், பிரகாஷ், லோகநாதன் ஆகியோரை விசாரித்த போது அவர்கள் குடிபோதையில் தாங்கள் கொலை செய்ததாக தெரிவித்தனர். போதையில் கொலை செய்ததை போலீசார் விசாரணை நடத்திய போது போதையிலேயே உளறிக் கொட்டியதால் 4 பேரையும் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து சீமான் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட கிணற்றிலிருந்து அவரது எலும்புக்கூடுகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவற்றை டி.என்.ஏ. பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சூர்யாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
- அங்கு வந்த கும்பல் காசிமாயன் மற்றும் சூர்யா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்ற னர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை யைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 21). இவரது உறவினர் காசிமாயன் (24). இவர் சென்னையில் உள்ள கல்லூ ரியில் படித்து வருகிறார். மேலும் கபடி அணியிலும் விளையாடி வருகிறார். சூர்யாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி, நாகராஜ், இமானுவேல், முருகன், பிரகாஷ் ஆகியோருக்கும்இடையே தகராறு ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் சூர்யா மற்றும் காசிமாயன் ஆகியோர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் காசிமாயன் மற்றும் சூர்யா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்ற னர்.
காயமடைந்த 2 பேரையும் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- திருமணத்தின் போது 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
- தான் புதிதாக கட்டிவரும் வீட்டிற்காக கூடுதல் வரதட்சணை வாங்கி ஜெயந்தி ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ராமலிங்கபுரம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் லதா (28). இவருக்கும் ராமச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
திருமணமான சில வருடங்களிலேயே மனைவியின் நகைகள் அனைத்தையும் கணவர் வாங்கி அடகு வைத்துவிட்டார். மேலும் தான் புதிதாக கட்டிவரும் வீட்டிற்காக கூடுதல் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கணவர் மற்றும் மாமனார் செல்லம், உறவினர் ஜெயந்தி ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வரதட்சணை வாங்கி வராததால் லதாவை வீட்டைவிட்டு விரட்டி விட்டனர்.
இதுகுறித்து தேனி மாவட்ட எஸ்.பி.யிடம் லதா புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய ராமச்சந்திரன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருசநாடு அருகில் உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது உறவினரை கொலைசெய்து விட்டு சிறைக்கு சென்றவர்.
- பின்னர் விடுதலையாகி ஊருக்குள் சுற்றி வந்ததால் அவருக்கு யாரும் பெண் தரவில்லை. இதனால் சைக்கோ வாலிபர் போல பெண்களை கேலி செய்து வந்துள்ளார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள காந்திபுரத்தை சேர்ந்தவர் சொக்கர் (வயது 35). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது உறவினரை கொலைசெய்து விட்டு சிறைக்கு சென்றவர். பின்னர் விடுதலையாகி ஊருக்குள் சுற்றி வந்ததால் அவருக்கு யாரும் பெண் தரவில்லை. இதனால் சைக்கோ வாலிபர் போல பெண்களை கேலி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 2ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சமுத்திரம் (53) என்பவரை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்கொலை சம்பவங்களில் ஈடுபட்ட அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து சொக்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷஜீவனா உத்தரவின் பேரில் சொக்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- கிட்டத்தட்ட 2 நாட்களில் அணையின் நீர் மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் நேற்று 2113 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 2605 கன அடியாக அதிகரித்துள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்கு கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக 600, 1200, 2123 என நீர் வரத்து படிப்படியாக உயர்ந்த நிலையில் இன்று காலை அணைக்கு 2605 கன அடி நீர் வருகிறது. நேற்று காலை 115.80 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று காலை 116.90 அடியாக உயர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட 2 நாட்களில் அணையின் நீர் மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் நேற்று 2113 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 2605 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து 356 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 2069 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. இடுக்கி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை குடிநீருக்கு மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மழை நின்றதாலும், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததாலும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது.
கடந்த 1 மாதமாக அணைக்கு நீர் வரத்து இல்லாத நிலையில் இன்று காலை முதல் வைகை அணைக்கு 94 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 49.97 அடியாக உள்ளது. அணையில் இருந்து 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1988 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடி. வரத்து 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 86.60 அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 53, தேக்கடி 40, கூடலூர் 3.5, உத்தமபாளையம் 2.2, சண்முகாநதி அணை 4, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 2, வீரபாண்டி 7.2, அரண்மனைபுதூர் 2.4, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- முருகனை தாக்கி ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார்.
- ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி வடக்குத்தெரு காலனியை சேர்ந்தவர் முருகன் (43). விவசாய கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பட்டாளம்மன் கோவில் அருகே தனது மனைவி சித்ரா (40) உடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காலனி தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் (28) என்பவர் சித்ராவை தனது செல்போனில் படம் பிடித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகன் அவரிடம் இருந்த செல்போனை பறித்து பார்த்த போது அதில் தனது மனைவியின் புகைப்படம் பதிவாகி இருந்தது குறித்து கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. முருகனை தாக்கி ஜெயச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனின் செல்போனை வாங்கி சோதனை செய்தார்.
தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரியும் ஜெயச்சந்திரன் பள்ளி, கல்லூரி மாணவிகள் புகைப்படம் உள்பட தெருக்களில் நடந்து செல்லும் பெண்களின் புகைப்படம் என மொத்தம் 1500 போட்டோக்களை பதிவு செய்து வைத்திருந்தார். இதனை அவர் எதற்காக பதிவு செய்து வைத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
- பொது சிவில் சட்டத்தால் எந்த நன்மையும் ஏற்பட போவது இல்லை.
- தி.மு.க. மாநில சுயாட்சி பேசிய கட்சி.
தேனி :
தேனி மாவட்டம் போடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. முன்னதாக நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொது சிவில் சட்டத்தால் எந்த நன்மையும் ஏற்பட போவது இல்லை. மணிப்பூரில் பிரதமர், முதல்-அமைச்சருக்கு தெரியாமல் கலவரம் நடக்கிறதா? காஷ்மீர், ஈழத்தில் என்ன நடந்ததோ, அதுதான் மணிப்பூரிலும் நடக்கிறது. மணிப்பூரில் நடக்கும் கலவரம் என்பது அங்குள்ள காடுகளில் வாழும் பழங்குடி மக்களை வெளியேற்றிவிட்டு அங்குள்ள கனிம வளங்களை எடுப்பதற்காக நடத்தப்படுகிறது. என்னிடம் நாட்டை கொடுங்கள். அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துகிறேன்.
தி.மு.க. மாநில சுயாட்சி பேசிய கட்சி. ஆனால், இப்போது உயர் போலீஸ் அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர் என யாராவது ஒருவர் தமிழர் இருக்கிறாரா? இந்த பதவிகளை பொறுப்போடு நிர்வகிக்க ஒரு தகுதியுள்ள தமிழர் கூட இல்லையா? இனி நேரடியாக பா.ஜ.க. தான் ஆட்சி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேனி மாவட்டம் சின்னமனூர், ஓடைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் பாகற்காய் விளைச்சல் அதிக அளவு காணப்படுகிறது.
- மற்ற காய்களின் விலை அதிக விலையேற்றத்தால், பாகற்காயின் சுவை கசப்பு என்றாலும் அதன் விலை குறைவாக இருப்பதால் அதனை பெண்கள் வாங்கிச் செல்கின்றனர்.
சின்னமனூர்:
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தக்காளி, சின்னவெங்காயம் மற்றும் பெரும்பாலான காய்கறி கள் விலை அதிகரித்து விற்கப்படு கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மார்க்கெட்டில் எந்த காய் விலை குறைவு என பார்த்து அது பிடிக்க வில்லை என்றாலும் வீட்டுக்கு வாங்கிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது புடலங்காய், கொத்தவரை, சவ்சவ், பல்லாரி போன்ற காய்கறி களே விலை குறைவாக உள்ளது.
மற்ற காய்கறிகள் அனைத்தும் ரூ.80க்கு மேல் விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ.100க்கு மேல் கிடைப்பதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்து வரு கின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர், ஓடைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் பாகற்காய் விளைச்சல் அதிக அளவு காணப்படுகிறது.
1 கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை வியாபாரிகள் நேரடியாகவே வாங்கிச் செல்கின்றனர். விவசாயி களும் சந்தைக்கு கொண்டு விற்பனை செய்து வரு கின்றனர். பாகற்காயின் சுவை கசப்பு என்றாலும் அதன் விலை குறைவாக இருப்பதால் அதனை பெண்கள் வாங்கிச் செல்கின்றனர். இதே போல பாகற்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைப்பதால் அவர்களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
- மாணவிகளுக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் தரும் வகையில் கல்வி ஒன்றே குறிக்கோள் என்பதை பல்வேறு சான்றுகளுடன் சுட்டிக் காட்டி பேசினார்.
- கடந்த ஆண்டு கல்வி முடித்த மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு ஆணையினை வழங்கினார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள திரவியம் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளின் வரவேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் டாக்டர் பாண்டியராஜ், செயலாளர் ஹேமலதா ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் விசும்பி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பேச்சாளர் டாக்டர் ஜெகன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் தரும் வகையில் கல்வி ஒன்றே குறிக்கோள் என்பதை பல்வேறு சான்றுகளுடன் சுட்டிக் காட்டி பேசினார். மேலும் கடந்த ஆண்டு கல்வி முடித்த மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு ஆணையினை வழங்கினார்.
- தனது மோட்டார் சைக்கிளை தாடிச்சேரி ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவில் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் அதனை எடுத்துச் செல்ல முயன்றனர்.
- எதற்காக எனது பைக்கை எடுக்கிறீர்கள்? என கேட்டபோது அவரை தரக்குறைவான வார்த்தை களால் திட்டி, தாக்கி அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரம் பணம் மற்றும் ெசல்போனை பறித்துச் சென்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மல்லிங்காபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 36). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தாடிச்சேரி ரோட்டில் உள்ள நாகம்மாள் கோவில் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் அ தனை எடுத்துச் செல்ல முயன்றனர்.
உடனே அங்கு வந்த குமார் எதற்காக எனது பைக்கை எடுக்கிறீர்கள்? என கேட்டபோது அவரை தரக்குறைவான வார்த்தை களால் திட்டினர். மேலும் குமாரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரம் பணம் மற்றும் ெசல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரிடம் பணம் பறித்தது வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த அஜய் (வயது 19). ஜெகதீ ஸ்வரன் (20), செல்வன் (19), அமர் (25) ஆகியோர் என தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தொகுதி தேர்தல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- இந்திய தேர்தல் ஆணைய நேரடி பார்வையில் இப்பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு அறையில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி பாராளுமன்ற தொகுதி வாக்கு பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்கள், ஆகியவற்றை வாக்குப்பதிவு எந்திர கிட்டங்கியில் இந்திய தேர்தல் ஆணைய ஆணை மற்றும் நடைமுறைகளை பின்பற்றி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இப்பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் 10ந் தேதி வரை நடைபெறும். இப்பணி களை மேற்கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணை யத்தால் நியமிக்கப்பட்ட பெங்களூரு பெல் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 8 பொறியாளர்கள் மூலம் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய நேரடி பார்வையில் இப்பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கருக்கு மேல் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
- கடந்த 2 ஆண்டுகளாகவே கொள்முதல் விலை குறைந்து கொண்டே வருவதன் காரணமாக உற்பத்தி செலவை கூட ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கருக்கு மேல் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் விளையும் தேங்காய்க்கு பிறகு மிகுந்த நீர் பிடிப்பும் சுவையும் கொண்டதாக இப்பகுதி தேங்காய் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் விவசாயம் காரணமாக இப்பகுதியில் விளையும் தேங்காய் நன்கு நீர் பிடிப்பும் சதைப்பிடிப்பும் கொண்டு விளங்குவது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் தற்போது தேங்காய் கொள்முதல் விலை கடும் சரிவை சந்தித்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாகவே கொள்முதல் விலை குறைந்து கொண்டே வருவதன் காரணமாக உற்பத்தி செலவை கூட ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உறிக்கப்பட்ட தேங்காய் டன் ஒன்றிற்கு ரூ.26,000 விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.18,000 முதல் ரூ.19,000 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
கிலோ ஒன்றுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வியாபாரிகளுக்கு கிலோ ரூ.26க்கு விற்கப்பட்ட தேங்காய் இந்த ஆண்டு ரூ.16 முதல் ரூ.17 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இளநீர் காய் ஒன்றிற்கு ரூ.16க்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தேங்காய் ஒன்று ரூ.7க்கு மட்டுமே வியாபாரிகளால் வாங்கப்படுகிறது.
மேலும் தற்போது இப்பகுதியில் திருவிழாக்கள், விசேஷங்கள் அனைத்தும் முடிந்து விட்டதால் தேவையும் குறைந்து விட்டது.
இதனால் போதிய விலை நிர்ணயம் இல்லாததால் தேங்காய் வெட்டுபவர்கள் இறக்குபவர்கள் கூலிக்கு கூட கட்டு படியாக வில்லை என்று பல தோப்புகளில் தேங்காய்களை மரங்களிலேயே வெட்டாமல் விட்டுள்ளனர்.
முறையாக 48 நாட்களில் இருந்து 54 நாட்களுக்குள்
தேங்காய் மரத்திலிருந்து இறக்கப்பட்டால் தான் அடுத்து புதிய தேங்காய் உற்பத்தி ஏற்படும். தற்போது மரத்திலேயே விவசாயிகள் தேங்காயை வெட்டாமல் உள்ளதால் நாளடைவில் உற்பத்தி குறையும்.
மேலும் உரிக்கப்படும் மட்டைகள் விலைக்குக் கூட கேட்க ஆளில்லாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தேனி மாவட்டத்தில் போடி சுற்றுப்பகுதிகளில் தேங்காய் உற்பத்தி, விவசாயம் செய்துள்ளவர்கள் வேதனையடைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தென்னை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






