search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pocso Arrest"

    • மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அழைத்துச் சென்ற செல்வம் பலவந்தமாக கற்பழிக்க முயன்றார்.
    • போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தகோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

    நேற்று மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அழைத்துச் சென்ற செல்வம் பலவந்தமாக கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

    சிறுமியின் தந்தை ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பக்கத்து வீட்டில் இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.
    • பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த கணியூர்பூண்டி பகுதியை சேர்ந்தவர் மாறன் (வயது 58). இவர் அங்குள்ள தனியார் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் பக்கத்து வீட்டில் இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் பனியன் தொழிலாளி மாறனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    ×