சிறுமிக்கு பாலியல் தொல்லை - பனியன் தொழிலாளி போக்சோவில் கைது

பக்கத்து வீட்டில் இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் அடுத்த கணியூர்பூண்டி பகுதியை சேர்ந்தவர் மாறன் (வயது 58). இவர் அங்குள்ள தனியார் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டில் இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் பனியன் தொழிலாளி மாறனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

X

Maalai Malar
www.maalaimalar.com