என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
ஹைவேவிஸ் பகுதியில் 10-ந் தேதி மின் தடை
- வண்ணாத்திபாறை துணைமின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே வண்ணாத்திபாறை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (10-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மேல்மணலாறு, கீழ்மணலாறு, ஹைவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் பகிர்மான செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story






