என் மலர்tooltip icon

    தேனி

    • தற்போது தக்காளி வரத்து மிக குறைவாக உள்ளதால் சந்தைகளில் தக்காளி மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • வெளிச்சந்தை விலையை விட மிக குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையின் காரணமாக வெளி சந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் தெரிவித்ததாவது:-

    வெளி சந்தைகளில் தற்போது தக்காளி வரத்து மிக குறைவாக உள்ளதால் சந்தைகளில் தக்காளி மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே, தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளை வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உழவர் சந்தைகளான தேனி, கம்பம், சின்னமனூர், பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய உழவர் சந்தைகளிலும், தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் டான்ஹோடா விற்பனை மையத்திலும், நடமாடும் காய்கறி வண்டிகளிலும் நேரடியாக விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வெளிச்சந்தை விலையை விட மிக குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்படுத்திய இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குறைந்த விலைக்கு தக்காளி பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

    • ஆண்டிபட்டி ஒன்றியத்தில் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து டி. சுப்புலாபுரம் வரை கிராம இணைப்பு தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
    • திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளை முகம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் டி.சுப்புலாபுரம் எளிதாக சென்று வர இந்த சாலை ஏதுவாக இருக்கும்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி ஒன்றியத்தில் திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து டி. சுப்புலாபுரம் வரை கிராம இணைப்பு தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. சுப்புலாபுரம், பொம்மிநாயக்கன்பட்டி பொதுமக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான கிராம இணைப்பு சாலை கோரிக்கைக்கு தற்பொழுது ரூ.2.29 கோடி மதிப்பில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளை முகம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் டி.சுப்புலாபுரம் எளிதாக சென்று வர இந்த சாலை ஏதுவாக இருக்கும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் மெயின் ரோடு வழியாக 6 கிலோமீட்டர் சுற்றி வந்து செல்லும் நிலை இருந்தது.

    தற்பொழுது விவசாயம் மற்றும் ஜவுளி பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல சிறு பாலங்கள் கட்டுவதற்கும் இத்திட்டப் பணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் கிராம சாலை திட்டத்தில் 2½ கி.மீ. தொலைவிற்கு 5 பாலங்களுடன் நடைபெறும் இத்திட்டத்திற்கு சுப்புலாபுரம் ஊராட்சி தலைவர் அழகுமணி, திம்மரச நாயக்கனூர் ஊராட்சி தலைவர் அக்க்ஷயா தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 868 கன அடியாக குறைந்துள்ளது.
    • இதனால் அணையின் நீர்மட்டம் 130 அடி வரை உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணைமூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் போகத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 2349 கன அடி நீர் வரை தண்ணீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது.

    இதனால் அணைக்கு நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 868 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உள்ளது. 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மழைப்பொழிவு குறைந்ததால் வேகமாக உயர்ந்து வந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது குறைந்த அளவு நீர்வரத்தால் பெரிய அளவில் உயரவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 130 அடி வரை உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.13 அடியாக உள்ளது. 152 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.55 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 0.2, தேக்கடி 0.8 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    • நேற்று இரவு லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்
    • அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது 200 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    கூடலூர்:

    தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியை கேரளாவிற்கு விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டம், கம்பம், கூடலூர், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று இரவு லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். அவர் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது 200 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனை கடத்தி வந்த லோயர்கேம்ப் எல்.எப். ரோடு பகுதியை சேர்ந்த ராஜா (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ரேசன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸபெக்டர் சுப்புலட்சுமியிடம் தகவல் தெரிவித்து ரேசன் அரிசி கடத்திய நபரையும் ஒப்படைத்தனர்.

    • ரூ.15 லட்சம் மதிப்பில் 14 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி உள்ளது.
    • வணிக வளாகத்தை சீமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் கடந்த 2008-2009ம் ஆண்டு ரூ.15 லட்சம் மதிப்பில் 14 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர் தற்போது வரை அந்த வணிக வளாகம் திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி உள்ளது.

    இதனால் வணிக வளாகம் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே சிதிலமடைந்துள்ளது. இதனால் அரசு பணம் வீணாகியுள்ளது. எனவே இந்த வணிக வளாகத்தை சீமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

    எனவே அதிகாரிகள் இந்த வணிக வளாகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமணத்தின்போது 40 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
    • இந்த நிலையில் கணவரின் தந்தை, தாய், சகோதரர் ஆகியோர் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் சோனியாகாந்தி (வயது34) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 40 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவரின் தந்தை செல்வம், தாய் விஜயா, சகோதரர் மகாராஜன் ஆகியோர் சோனியா காந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.81 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    தற்போது முதல் போகத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது.

    இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று 2349 கன அடி நீர் வந்தது. தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது. எனவே இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1505 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.55 அடியாக உள்ளது. 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. 244 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.81 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 12, தேக்கடி 8.6, சண்முகநதி அணை 0.6, மஞ்சளாறு 9 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    • மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டதன் பேரில் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.75 லட்சத்திற்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்திரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.

    தேனி:

    2023-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த வேண்டும் என மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டதன் பேரில் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    தேனி மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தலைமையிலும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 5 நில ஆர்ஜித வழக்குகள், 4 மோட்டார் வாகன வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 4 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ.75 லட்சத்திற்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்திரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.

    இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு வக்கீல் கருணாநிதி, சட்டப்பணிகள் ஆணையக்குழு அலுவலர்கள், வக்கீல்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600ம், மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகள் எனில் ரூ.1000-ம், 10 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.
    • மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தேனி:

    தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30.06.2023 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1200ம், பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1800ம், 3 வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவு செய்திருத்திலே போதுமானது. இவ்வாறான மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600ம், மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகள் எனில் ரூ.1000-ம், 10 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.

    30.06.2023-ம் தேதி அன்று நிலவரப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், ஏனையோரைப் பொறுத்த மட்டில் 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் குடும்ப ஆண்டு வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது.

    பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித் தொகை பெற தகுதியில்லாதவர்கள்.

    இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்புகொண்டு விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • 2ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி ஆகிய கல்வித் தகுதி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
    • தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் கடனை திருப்பி செலுத்தும் மொத்த காலத்திற்கும் வழங்கப்படும்.

    தேனி:

    தமிழக அரசால் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் 2012-ம் ஆண்டிலிருந்து முதல் தலைமுறை தொழில் முனைவோருக்காக மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி ஆகிய கல்வித் தகுதி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    பொதுப் பிரிவினர் 21 முதல் 45 வயது வரையிலும் மற்றும் சிறப்பு பிரிவினருக்கு பெண்கள், மாற்று பாலினத்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 21 முதல் 55 வயது வரையிலும் விண்ணப்பிக்க வயது வரம்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

    மேலும் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த பொருளாதார ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில்கள் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்படும். கடனுதவி பெற்று தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மானியம் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் கடனை திருப்பி செலுத்தும் மொத்த காலத்திற்கும் வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள தொழில் முனைவோர்கள் இணைய முகவரியில் விண்ணப்பித்து தொழிற்கடன் பெற்று பயன் பெறலாம்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது.
    • மூணாறிலிருந்து சின்னக்கானல், பூப்பாறை மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் குஞ்சித்த ண்ணி, ராஜாக்காடு திருப்பி விடப்படுகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மூணாறு பகுதி யில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

    கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மூணாறிலிருந்து சின்னக்கானல், பூப்பாறை மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் குஞ்சித்த ண்ணி, ராஜாக்காடு திருப்பி விடப்படுகிறது. கேப்ரோ ட்டில் பாதுகாப்பற்ற சாலை நிர்மாணம் காரணமாகவே அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனை தொடர்ந்து கேப்ரோடு பகுதியில் உருண்டு விழுந்த பாறைகள் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கனமழை காரணமாக அப்பகுதியை சேர்ந்த அன்னக்கிளி என்பவரின் வீடு இடிந்தது. ராஜாக்காடு ஊராட்சிக்குட்பட்ட மம்பட்டிகானம் பகுதியில் சுரேஷ் என்பவரின் வீடு மீது மரம் முறிந்து விழுந்த தில் சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர் மழை காரணமாக போடிமெட்டு-மூணாறு சாலையில் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.

    வாகன ங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


    • கதவு, பூட்டை நெம்பித்திறந்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ஜவுளிகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் குழந்தைவேல் மகள் கவிதபிரியா (43). இவர் வடகரை புதிய பஸ்நிலையம் அருகே ஜவுளி மற்றும் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றனர். மறுநாள் காலை பார்த்த போது கடையின் வெளிப்பக்க ஷோ கேஸ் கண்ணாடி உடைக்கப்பட்டி ருந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த கவிதபிரியா உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது ஷட்டர் கதவு பூட்டை நெம்பித்திறந்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது. கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ஜவுளிகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பெரியகுளம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×