என் மலர்tooltip icon

    தேனி

    • வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.81 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    தற்போது முதல் போகத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது.

    இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று 2349 கன அடி நீர் வந்தது. தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது. எனவே இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1505 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.55 அடியாக உள்ளது. 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. 244 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.45 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.81 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 12, தேக்கடி 8.6, சண்முகநதி அணை 0.6, மஞ்சளாறு 9 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

    • மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டதன் பேரில் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.75 லட்சத்திற்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்திரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.

    தேனி:

    2023-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த வேண்டும் என மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டதன் பேரில் தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    தேனி மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தலைமையிலும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 5 நில ஆர்ஜித வழக்குகள், 4 மோட்டார் வாகன வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 4 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ.75 லட்சத்திற்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்திரவிட்டு வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது.

    இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு வக்கீல் கருணாநிதி, சட்டப்பணிகள் ஆணையக்குழு அலுவலர்கள், வக்கீல்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600ம், மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகள் எனில் ரூ.1000-ம், 10 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.
    • மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தேனி:

    தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30.06.2023 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1200ம், பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1800ம், 3 வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவு செய்திருத்திலே போதுமானது. இவ்வாறான மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600ம், மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகள் எனில் ரூ.1000-ம், 10 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.

    30.06.2023-ம் தேதி அன்று நிலவரப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், ஏனையோரைப் பொறுத்த மட்டில் 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் குடும்ப ஆண்டு வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது.

    பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித் தொகை பெற தகுதியில்லாதவர்கள்.

    இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்புகொண்டு விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • 2ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி ஆகிய கல்வித் தகுதி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
    • தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் கடனை திருப்பி செலுத்தும் மொத்த காலத்திற்கும் வழங்கப்படும்.

    தேனி:

    தமிழக அரசால் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் 2012-ம் ஆண்டிலிருந்து முதல் தலைமுறை தொழில் முனைவோருக்காக மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி ஆகிய கல்வித் தகுதி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    பொதுப் பிரிவினர் 21 முதல் 45 வயது வரையிலும் மற்றும் சிறப்பு பிரிவினருக்கு பெண்கள், மாற்று பாலினத்தவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 21 முதல் 55 வயது வரையிலும் விண்ணப்பிக்க வயது வரம்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

    மேலும் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த பொருளாதார ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில்கள் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்படும். கடனுதவி பெற்று தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மானியம் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் கடனை திருப்பி செலுத்தும் மொத்த காலத்திற்கும் வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள தொழில் முனைவோர்கள் இணைய முகவரியில் விண்ணப்பித்து தொழிற்கடன் பெற்று பயன் பெறலாம்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது.
    • மூணாறிலிருந்து சின்னக்கானல், பூப்பாறை மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் குஞ்சித்த ண்ணி, ராஜாக்காடு திருப்பி விடப்படுகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மூணாறு பகுதி யில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

    கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மூணாறிலிருந்து சின்னக்கானல், பூப்பாறை மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் குஞ்சித்த ண்ணி, ராஜாக்காடு திருப்பி விடப்படுகிறது. கேப்ரோ ட்டில் பாதுகாப்பற்ற சாலை நிர்மாணம் காரணமாகவே அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனை தொடர்ந்து கேப்ரோடு பகுதியில் உருண்டு விழுந்த பாறைகள் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கனமழை காரணமாக அப்பகுதியை சேர்ந்த அன்னக்கிளி என்பவரின் வீடு இடிந்தது. ராஜாக்காடு ஊராட்சிக்குட்பட்ட மம்பட்டிகானம் பகுதியில் சுரேஷ் என்பவரின் வீடு மீது மரம் முறிந்து விழுந்த தில் சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர் மழை காரணமாக போடிமெட்டு-மூணாறு சாலையில் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.

    வாகன ங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


    • கதவு, பூட்டை நெம்பித்திறந்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ஜவுளிகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் குழந்தைவேல் மகள் கவிதபிரியா (43). இவர் வடகரை புதிய பஸ்நிலையம் அருகே ஜவுளி மற்றும் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றனர். மறுநாள் காலை பார்த்த போது கடையின் வெளிப்பக்க ஷோ கேஸ் கண்ணாடி உடைக்கப்பட்டி ருந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த கவிதபிரியா உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது ஷட்டர் கதவு பூட்டை நெம்பித்திறந்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது. கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் ஜவுளிகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பெரியகுளம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து சீராக உயர்ந்தது.
    • அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்து 119 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பேரிடர் மீட்பு படையினர் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து சீராக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 2349 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி உயர்ந்து 119 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 356 கனஅடி நீர் வருகிறது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மூல வைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதி யில் தொடர்ந்து சாரல்மழை பெய்து வருகிறது.

    இதனால் வறண்டு கிடந்த மூல வைகையாற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை அணைக்கு நீர்வரத்து 140 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. நீர் வரத்தும், திறப்பும் இல்லை

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மழையளவு

    பெரியாறு 19.8, தேக்கடி 15.2, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 1, போடி 1.8, வீரபாண்டி 3.2, சண்முகாநதி அணை 2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரானதால் அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக சுருளி அருவியில் கடந்த 2 நாட்களாக நீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் வரத்து சீரானதால் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    • தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலாவது மாநில அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி திருவிழாவை முன்னிட்டு தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலாவது மாநில அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறவின்முறை விளையாட்டுத்துறை செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார்.

    இந்த மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி விடுதியின் முன்னாள் மாணவர் மற்றும் பழனி எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடையே விளையாடிய போட்டியினை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்த விளையாட்டு போட்டியானது தமிழகத்தில் உள்ள சிறந்த கூடைப்பந்தாட்ட அணியினை தேர்வு செய்து 7.7.2023 முதல் 9.7.2023 வரை நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் பிரிவு அணியினருக்கும், நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர் பிரிவு அணியினருக்கும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 16 அணிகளும், மாணவியர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 6 அணிகளும் பங்கேற்கின்றனர். இந்த விளையாட்டு போட்டியானது லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறுகிறது.

    இதேபோன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அணிகள் விளையாடிய போட்டியினை தேனி எல்.எஸ்.மில் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், கோவிலூர் சி.எஸ்.எம்.எஸ். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சேலம் லிட்டில் ப்ளவர் மேல்நிலைப்பள்ளி விளையாடிய போட்டியினை தேனி வேல்முருகன் ஆஸ்பத்திரி டாக்டர் பிரபு மற்றும் தூத்துக்குடி செயின் லாசல் மேல்நிலைப்பள்ளியும், திண்டுக்கல் எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி விளையாடிய போட்டியினை திண்டுக்கல் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் செண்பகமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மகன் கைது செய்யப்பட்டதால் விரக்தியில் இருந்த ஆசைத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
    • மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரம் காந்தாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 45). இவருக்கு வைரமணி என்ற மனைவியும், கவுதம் என்ற மகனும் தாரணி என்ற மகளும் உள்ளனர். ஆசைத்தம்பி ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுதம் திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனால் மன வேதனையில் இருந்த ஆசைத்தம்பி 3 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். அவரது மனைவி தேடிப்பார்த்தபோது எங்கே உள்ளார்? என தெரியவில்லை. இந்நிலையில் அன்னஞ்சி விலக்கு பகுதியில் ஆட்டோவுக்குள் ஆசைத்தம்பி இறந்து கிடப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது.

    இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகன் கைது செய்யப்பட்டதால் விரக்தியில் இருந்த ஆசைத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையில் மனவேதனையடைந்த சபீனா விஷம் குடித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
    • போலீசாரிடம் புகார் தெரிவிக்கும்போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் 1-வது வார்டு கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சபீனா (வயது 23). இவருக்கு வீரபத்திரன் என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு தர்ஷன் என்ற மகனும், தாரணி என்ற மகளும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதால் சபீனா கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை வீரபத்திரன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சபீனா தனது கணவர் வீட்டுக்கு சென்று குழந்தைகளை தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாமியார் சிட்டம்மாள் மற்றும் முருகேஸ்வரி, ரஞ்சிதம் ஆகியோர் சபீனாவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதனால் வேதனையடைந்த சபீனா விஷம் குடித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

    போலீசாரிடம் புகார் தெரிவித்தபோது மயங்கி விழுந்தார். உடனடியாக போலீசார் அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அழைத்துச் சென்ற செல்வம் பலவந்தமாக கற்பழிக்க முயன்றார்.
    • போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தகோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

    நேற்று மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரை அழைத்துச் சென்ற செல்வம் பலவந்தமாக கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

    சிறுமியின் தந்தை ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×