என் மலர்tooltip icon

    தேனி

    • இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்த கார்த்திக் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
    • 2 மர்ம நபர்கள் கார்த்திக்கை தகாத வார்த்தைகளால் திட்டி கையை கடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது36). இவரது மனைவி சங்கீதா. கார்த்திக் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்த கார்த்திக் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    ஆனால் சங்கீதா கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு வழக்கு தொடர்ந்து நீதிமன்ற த்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் வாய்தாவிற்காக மனுத்தாக்கல் செய்து விட்டு சின்னமனூர் தேரடி பகுதிக்கு வந்தார். அப்போது சங்கீதா, அருண்குமார் ஆகியோரின் தூண்டுதலின்பேரில் 2 மர்ம நபர்கள் கார்த்திக்கை தகாத வார்த்தைகளால் திட்டி கையை கடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மறு விசாரணைக்கு ஆஜரா கும்படி தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வராததால் கார்த்திக் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுபடி சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கூடலூரில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் பளியன்குடி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகள் ரஞ்சனி (வயது 14). இவர் ஆதிவாசி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். இவரை அவரது தாயார் பள்ளிக்குச் செல்லுமாறு கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

    கண்டிப்புடன் தனது மகளை பள்ளியில் சென்று மாணவியின் தாய் விட்டுள்ளார். மாலையில் வீடு திரும்பிய மாணவி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கூடலூர் கன்னிகாளி புரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 53). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். குடி ப்பழக்கத்துக்கு அடிமை யானதால் இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வேதனையடைந்த தெய்வேந்திரன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர் 3-வது வார்டு மூணுசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 43). கூலித் தொழிலாளி. இவரது மாமனார் கடந்த 10-ந் தேதி இறந்து விட்டார். அந்த இறப்புக்கு இவரது மனைவி மற்றும் மகன்கள் சொல்லா மல் சென்று விட்டனர்.

    இதனால் வேதனை யடைந்த சுதாகரன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    • இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடங்கியது.
    • பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்தது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த வாரம் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடங்கியது. 115 அடியில் இருந்த அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 120 அடியை எட்டியது.

    ஆனால் தற்போது மழையின் தாக்கம் குறைந்து ள்ளதால் அணையின் நீர் மட்டம் மேலும் உயருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதே போல் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 50.13 அடியாக உள்ளது.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. வரத்து 778 கன அடி. திறப்பு 356 கன அடி. இருப்பு 2628 மி.கன அடி. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 50.13 அடியாக உள்ளது. வரத்து 94 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 2010 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.95 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 80.36 அடியாக உள்ளது. வரத்து 1 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 1.2, தேக்கடி 1.6, கூடலூர் 1.6, உத்தம பாளையம் 1.2, சண்முகாநதி அணை 1.8, போடி 2.6 வைகை அணை 4, சோத்து ப்பாறை 3.5, மஞ்சளாறு 9.8, பெரியகுளம் 9, வீரபாண்டி 3.4, அரண்மனைபுதூர் 8, ஆண்டிபட்டி 7.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • காந்திகிராம பொதுமக்கள் இன்றளவும் கரடு முரடான மலைப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.
    • பள்ளிக்கு குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. காந்திகிராமம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.

    காந்திகிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் பள்ளி அமைந்துள்ளது. வனத்துறையினர் தடை காரணமாக தும்மக்குண்டுவில் இருந்து காந்திகிராமத்திற்கு அமைக்கப்பட்ட தார் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் காந்திகிராம பொதுமக்கள் இன்றளவும் கரடு முரடான மலைப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். கரடு முரடான பாதை என்பதால் மோட்டார் சைக்கிள்களையும் இயக்க முடியாது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகள் 2 கி.மீ. தூரம் கரடு முரடான பாதையில் சிரமப்பட்டு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்த பகுதியில் கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் உள்ளது. எனவே பள்ளிக்கு நடந்து செல்லும் குழந்தைகளுக்கு வனவிலங்குகளால் ஆபத்து ஏற்பட கூடும் என்பதால் பெற்றோர்களும் அவர்களுடன் பள்ளி வரை நடந்து சென்று வருகின்றனர். இதே போல பள்ளிக்கு குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி விடுவதாலும் மாலையில் பள்ளி முடிந்து வரும்போது இருட்டி விடுவதாலும் குழந்தைகள் அச்சத்துடனே வரும் நிலை உள்ளது.

    பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளி குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தை மர்மநபர்கள் சிலர் சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மலைக்கிராம குழந்தைகளின் நலனுக்காக தும்மக்குண்டுவில் இருந்து காந்திகிராமம் வரை முழுமையாக தார் சாலை அமைக்க வேண்டும். மேலும் பள்ளியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேனி அருகே பள்ளி மாணவிகள் உள்பட 3 பெண்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் பண்ணைப்புரம் செல்வ நாயகபுரத்தை சேர்ந்த செந்தில் மகள் பிரதீபா (வயது17). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளிேய சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம் தென்நகர் காலனியை சேர்ந்த செல்வம் மகள் பாவனா (16). பிளஸ்-1 படித்து வருகிறார். செல்வத்திற்கும் அவரது மனைவி காஞ்சனாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட தால் பிரிந்து விட்டனர். செல்வம் மதுரையை சேர்ந்த பிரவீனா என்பவரையும், காஞ்சனா ஊத்துப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர்.

    பாவனா தனது பாட்டி வீட்டில் வளர்ந்த நிலையில் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். சம்பவ த்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார் . இது குறித்து அவரது தாத்தா சந்திரன் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    லோயர்கேம்ப் நாரா யணன் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி இலக்கியா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஈஸ்வரன் தனது மாமியா ருக்கு ரூ.3 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்கு ம்போது ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் மாயமானார். இது குறித்து குமுளி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு மீட்டர் கேஜ் ஆக இருந்த போது தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரயில் நிறுத்தம் இருந்த நிலையில் அகல ரயில் பாதையாக மாற்றிய பின் அந்த ரயில் நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.
    • தேனி மாவட்ட மக்கள் மதுரைக்கு செல்லவும், மீண்டும் மதுரையில் இருந்து தேனிக்கு வருவதற்கு ஏதுவாக ரயில் புதிதாக இயக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை.

    தேனி:

    தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு செயலாளர் ராஜன் மத்திய ரயில்வே துறைக்கும், சென்னையில் உள்ள ரயில்வே டிவிஷனல் மேலாளருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, மதுரை-போடி ரயில் பாதையில் கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு மீட்டர் கேஜ் ஆக இருந்த போது தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரயில் நிறுத்தம் இருந்தது. தற்போது அகல ரயில் பாதையாக மாற்றிய பின் அந்த ரயில் நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.

    இதனால் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஐ.டி.ஐ மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் தேனி புதிய பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வெளியூர் செல்ல வேண்டி இருப்பதால் பலர் பாதிப்பு அடைகிறார்கள். மேலும் தற்போது உள்ள ரயில் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையம் வரவும், கலெக்டர் அலுவலகம் மற்றும் மற்ற அலுவலகங்களுக்கு வரவும் கூடுதல் நேரமாகிறது. அதுபோல ஆட்டோ கட்டணமும் கூடுதலாக செலவாகிறது.

    எனவே மீண்டும் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரயில் நிறுத்தம் கொண்டு வர வேண்டும். அங்கு ரயில் டிக்கெட் புக்கிங் அலுவலகமும் திறக்க வேண்டும். மேலும் தற்போது மதுரை-போடி இடையேயான முன்பதிவு இல்லாத பேசஞ்சர் ரயில் மதுரையில் இருந்து வரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

    ஆனால் தேனி மாவட்ட மக்கள் பல்வேறு வேலைகளுக்காக மதுரைக்கு செல்லவும், மீண்டும் மதுரையில் இருந்து தேனிக்கு வருவதற்கு ஏதுவாக காலையில் போடியில் இருந்து 7.30 மணிக்கும், மாலையில் மதுரையில் இருந்து போடிக்கு வருவதற்கு 6 மணிக்கும் பேசஞ்சர் ரயில் புதிதாக இயக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • சின்னமனூர் பூலானந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
    • காலபைரவர் சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் பூலானந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.

    பூஜையில் பல்குதர்கள் குடும்பம் செழிப்படைந்து, கஷ்டங்கள் தீர பஜனை பாடி பைரவருக்கு வழிபாடுகள் செய்து பாலபிஷேகம் உட்பட 16 சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.

    காலபைரவர் சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மூணாறு மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல்மழையால் கடந்த 7ம் தேதி மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது.
    • மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாறை, மண் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு-போடிமெட்டு இடையே 42 கி.மீ. தூரம் உள்ள சாலை ரூ.381 கோடி செலவில் இருவழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி முடிவடைந்த நிலையில் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் மூணாறு அருகே உள்ள கேப் ரோட்டில் விதிமுறைகளை மீறி பாறைகள் உடைக்கப்பட்டன. அவ்வாறு 6,28,00 மெட்ரிக் டன் பாறைகள் உடைக்கப்பட்டதாக வருவாய்த்துறையினர் அரசுக்கு தாக்கல் செய்தனர். இதற்காக ரூ.6 கோடியே 28 லட்சத்தி 22 ஆயிரத்தி 480 செலுத்துமாறு ஒப்பந்தகாரருக்கு அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஒப்பந்தகாரர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் 2017ல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் கேப் ரோட்டில் 5 முறை மண்சரிவுகள் ஏற்பட்டன. 2019ம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மூணாறு மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல்மழையால் கடந்த 7ம் தேதி மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    எனவே இந்த சாலை மண் சரிவுக்கு வாய்ப்புள்ள பகுதியாக கருதி தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு நடத்த பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மூணாறிலிருந்து பள்ளிவாசல், ராஜாகாடு, ராஜகுமாரி, பூப்பாறை வழியாக மாற்றுப்பாதையில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தேனிக்கு வந்து செல்கின்றன. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாறை, மண் அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அருவியை யொட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது.
    • சுருளி அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி மிக சிறந்த சுற்றுலா தலமாக மட்டுமின்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் இருந்து வருகிறது.

    கடந்த மாதம் வரை வறண்டு கிடந்த சுருளி அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் அருவியை யொட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது.

    இதனால் நேற்று பிற்பகல் முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், சுருளி அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

    அமாவாசை நாட்களில் மேலும் அதிக அளவு பக்தர்கள் வருகை தந்து இங்குள்ள அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வேலப்பர், நாராயணன் கோவிலில் வழிபாடு செய்து செல்கின்றனர். யானைகள் நடமாட்டம் என்பது அருவியையொட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் விரட்டுவதில் வனத்துறையினர் ஆர்வம் காட்டாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அடிக்கடி தடை விதிக்கப்படுவதால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். வருகிற 17ந் தேதி ஆடி அமாவாசை தினம் என்பதால் அன்று அதிக அளவு பக்தர்கள் வருகை தர வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பாக யானைகள், காட்டெருமைகளை விரட்டி பக்தர்கள் நீராட அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • வீட்டில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • திருமணமாகி கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் நோய் கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே அல்லி நகரத்தை சேர்ந்தவர் நடசேன் மகள் புவனேஸ்வரி (15). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே புவனேஸ்வரி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கூடலூரை சேர்ந்தவர் இளவரசன் (32). இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 2019ம் ஆண்டு காவலருக்கான தேர்வில் வெற்றிபெற்று தற்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
    • இதனிடையே வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் ராசிங்காபுரம் அழகர்கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜ். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அழகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. காமராஜ் கடந்த 2019ம் ஆண்டு காவலருக்கான தேர்வில் வெற்றிபெற்று தற்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

    இதனிடையே வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக அழகேஸ்வரி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காமராஜ், அவரது தந்தை கண்ணன், தாய் லெட்சுமி, சகோதரி சத்யா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவ-மாணவிகள் தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரே பஸ்ஸில் படிக்கட்டுகளில் தொங்கியவரே கல்லூரிக்கு பயணம் செய்து வருகின்றனர்.
    • எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனிமாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வீரபாண்டி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். கல்லூரி மாணவ-மாணவிகளின் வசதிக்காக கடந்த ஆண்டு மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டி கல்லூரி வரை அரசு டவுன் பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்கள் எளிதாக பஸ்களில் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் இருந்து கூடுதலாக மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

    எனவே அரசு சார்பில் இயக்கப்பட்டு வரும் ஒரே ஒரு பஸ் மாணவ-மாணவிகளுக்கு போதுமானதாக இல்லை. மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு வேறு பஸ் சேவைகள் எதுவும் இல்லை. வீரபாண்டி கல்லூரிக்கு செல்ல வேண்டும் எனில் தேனிக்கு சென்று அதன் பின்னர் வேறு ஒரு பஸ்ஸில் வீரபாண்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் மாணவ-மாணவிகள் தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரே பஸ்ஸில் படிக்கட்டுகளில் தொங்கியவரே கல்லூரிக்கு பயணம் செய்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் மாணவிகளும் படிகளில் நின்றவரே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    மாணவ-மாணவிகளின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் மயிலாடும்பாறையில் இருந்து வீரபாண்டிக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    ×