search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suruli Aruvi"

    • அருவியை யொட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது.
    • சுருளி அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி மிக சிறந்த சுற்றுலா தலமாக மட்டுமின்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் இருந்து வருகிறது.

    கடந்த மாதம் வரை வறண்டு கிடந்த சுருளி அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் அருவியை யொட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது.

    இதனால் நேற்று பிற்பகல் முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், சுருளி அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

    அமாவாசை நாட்களில் மேலும் அதிக அளவு பக்தர்கள் வருகை தந்து இங்குள்ள அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வேலப்பர், நாராயணன் கோவிலில் வழிபாடு செய்து செல்கின்றனர். யானைகள் நடமாட்டம் என்பது அருவியையொட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் விரட்டுவதில் வனத்துறையினர் ஆர்வம் காட்டாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அடிக்கடி தடை விதிக்கப்படுவதால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். வருகிற 17ந் தேதி ஆடி அமாவாசை தினம் என்பதால் அன்று அதிக அளவு பக்தர்கள் வருகை தர வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பாக யானைகள், காட்டெருமைகளை விரட்டி பக்தர்கள் நீராட அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    ×