search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people suicide"

    • வீட்டில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • திருமணமாகி கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் நோய் கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே அல்லி நகரத்தை சேர்ந்தவர் நடசேன் மகள் புவனேஸ்வரி (15). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே புவனேஸ்வரி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கூடலூரை சேர்ந்தவர் இளவரசன் (32). இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மனைவி கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டதால் அவர் விஷம் குடித்து மயங்கியவரை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது33). இவர் அபிராமி (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன் தேனி மாவட்ட கோர்ட்டில் சுகாதார தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடன் வாங்கி மது குடித்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் சம்பள பணத்தை வீட்டில் கொடுக்காததால் அபிராமி கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கார்த்திகேயன் விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சமயன் (26). இவர் வேலைக்கு செல்லாமல் ஆதரவின்றி சுற்றி திரிந்து ள்ளார். இந்த நிலையில் காஞ்சிமரத்துறை- வேளங்காடு வனத்துறை சாலையில் உள்ள தோட்ட த்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குமுளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜாக்கமங்கலம்:

    ராஜாக்கமங்கலத்தை அடுத்த மேல சங்கரன்குழி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 61) மரம் ஏறும் தொழிலாளி.

    இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்து உள்ளார். இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் அய்யம்பெருமாள் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளிச்சந்தை செதூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (45) தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் மணிகண்டனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு ஆஸ்பத்திரியில் சென்றும்சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த மணிகண்டன் வி‌ஷம் குடித்து மயங்கிக்கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்யப்பட்டது. ஏட்டு ராம ஜெயம், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    ×