என் மலர்
நீங்கள் தேடியது "Case filed against policeman"
- கடந்த 2019ம் ஆண்டு காவலருக்கான தேர்வில் வெற்றிபெற்று தற்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
- இதனிடையே வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவரது மனைவி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் ராசிங்காபுரம் அழகர்கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜ். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அழகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. காமராஜ் கடந்த 2019ம் ஆண்டு காவலருக்கான தேர்வில் வெற்றிபெற்று தற்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக அழகேஸ்வரி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காமராஜ், அவரது தந்தை கண்ணன், தாய் லெட்சுமி, சகோதரி சத்யா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






