search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband who threatened to kill"

    • திருமணத்தின்போது 40 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
    • இந்த நிலையில் கணவரின் தந்தை, தாய், சகோதரர் ஆகியோர் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் சோனியாகாந்தி (வயது34) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 40 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவரின் தந்தை செல்வம், தாய் விஜயா, சகோதரர் மகாராஜன் ஆகியோர் சோனியா காந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×