search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomatoes at low price"

    • தற்போது தக்காளி வரத்து மிக குறைவாக உள்ளதால் சந்தைகளில் தக்காளி மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • வெளிச்சந்தை விலையை விட மிக குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையின் காரணமாக வெளி சந்தையில் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் தெரிவித்ததாவது:-

    வெளி சந்தைகளில் தற்போது தக்காளி வரத்து மிக குறைவாக உள்ளதால் சந்தைகளில் தக்காளி மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எனவே, தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளை வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உழவர் சந்தைகளான தேனி, கம்பம், சின்னமனூர், பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய உழவர் சந்தைகளிலும், தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் டான்ஹோடா விற்பனை மையத்திலும், நடமாடும் காய்கறி வண்டிகளிலும் நேரடியாக விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வெளிச்சந்தை விலையை விட மிக குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்படுத்திய இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குறைந்த விலைக்கு தக்காளி பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

    ×