என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "State level basketball"
- தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலாவது மாநில அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
- அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தேனி:
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி திருவிழாவை முன்னிட்டு தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலாவது மாநில அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறவின்முறை விளையாட்டுத்துறை செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
இந்த மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி விடுதியின் முன்னாள் மாணவர் மற்றும் பழனி எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடையே விளையாடிய போட்டியினை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த விளையாட்டு போட்டியானது தமிழகத்தில் உள்ள சிறந்த கூடைப்பந்தாட்ட அணியினை தேர்வு செய்து 7.7.2023 முதல் 9.7.2023 வரை நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் பிரிவு அணியினருக்கும், நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர் பிரிவு அணியினருக்கும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 16 அணிகளும், மாணவியர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 6 அணிகளும் பங்கேற்கின்றனர். இந்த விளையாட்டு போட்டியானது லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறுகிறது.
இதேபோன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அணிகள் விளையாடிய போட்டியினை தேனி எல்.எஸ்.மில் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், கோவிலூர் சி.எஸ்.எம்.எஸ். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சேலம் லிட்டில் ப்ளவர் மேல்நிலைப்பள்ளி விளையாடிய போட்டியினை தேனி வேல்முருகன் ஆஸ்பத்திரி டாக்டர் பிரபு மற்றும் தூத்துக்குடி செயின் லாசல் மேல்நிலைப்பள்ளியும், திண்டுக்கல் எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி விளையாடிய போட்டியினை திண்டுக்கல் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் செண்பகமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
- 13 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர்:
மாநில அளவில் 13 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி விருதுநகரில் வருகிற 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இதற்கு மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் விஜய சுந்தரம் தலைமை தாங்கினார். தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை, மூத்த விளையாட்டு வீரர்கள் நெடுஞ்செழியன், அமீர்ஜான், நடராஜன், அப்துல்லா, தயாளன், தமிழ்வாணன், முகமது கனி, பொன்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா கலந்து கொண்டு வீரர்கள் தேர்வை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதாவது 1.1.2010 -ந்தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி க்கப்பட்டனர். தொடர்ந்து தேர்வுக்கு வந்திருந்த மாணவ- மாணவிகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் சரிபார்க்க ப்பட்டதும் வீரர்கள் தேர்வு செய்ய ப்பட்டனர். இதில் ஆண்கள் அணிக்கு 15 பேரும், பெண்கள் அணிக்கு 15 பேரும் என மொத்தம் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாணவர்கள் விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
நிகழ்ச்சியில் கடலூர் அசோசியேசன் பொருளாளர் பாலமுரளி, இணைச் செயலாளர் சகாய செல்வம், விளையாட்டு பயிற்சியாளர்கள் மோகனசந்திரன், வினோ த்குமார், செங்குட்டுவன், முத்துராமன், மணிகண்டன், பாலமுருகன், பிரபு, பாலாஜி, விவேக், பழனி, மணிவாசகம், இளவரசன், சிவரஞ்சனி, யுவஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச் செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்