என் மலர்
உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் டெண்ட் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
கூடலூர் அருகே வனப்பகுதியில் டெண்ட் அமைத்து மலைவாழ் மக்கள் போராட்டம்
- வனப்பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்ட பிறகு அங்கு விவசாயம் செய்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்ற ப்பட்டனர்.
- காலம் காலமாக வனப்பகுதியில் வசித்து வருகிறோம். தற்போது கோர்ட்டு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து ள்ளதால் மீண்டும் அனைத்து மக்களும் இங்கு குடியேறுவோம் என அவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வன சரகத்திற்குட்பட்ட தமிழக வனப்பகுதியில் ஆசாரி பள்ளம் பகுதி உள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுபடி வனப்பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டன. அப்போது அங்கு விவசாயம் செய்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்ற ப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் வன உரிமையை அங்கீகரித்தல் 2006 சட்டத்தின்கீழ் பாரம்பரிய வாசிகள் வாழ்வதற்காக சுய சாகுபடி செய்ய வன நிலத்தை வைத்திருக்க உரிமை கோரி வனத்துறைக்கு மனு கொடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட வன அலுவலர் சமர்தா பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வன வாசிகள் சட்டம் 2006ன்படி விண்ணப்பம் பரிசீலனைக்காக கிராம சபை கூட்டம் கூட்டி அல்லது வனக்குழு ஏற்பாடு செய்து அதன்மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில் வழக்கு தொடர்ந்த 18 குடும்பங்க ளுக்கு சாதகமாக கோர்ட்டில் தீர்ப்பு வந்தது. இதனால் 20க்கும் மேற்பட்டவர்கள் ஆசாரி பள்ளம் வனப்ப குதியில் டெண்ட் அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கம்பம் மேற்கு வனத்துறையினர் விரைந்து வந்து அவர்களை வெளியேற வற்புத்தினர். ஆனால் இன்று 2-வது நாளாக அவர்கள் வன ப்பகுதியிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். காலம் காலமாக வனப்பகுதியில் வசித்து வருகிறோம். தற்போது கோர்ட்டு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து ள்ளது. எனவே மீண்டும் அனைத்து மக்களும் இங்கு குடியேறுவோம் என அவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.






