என் மலர்
நீங்கள் தேடியது "Taylor tragically died"
- பைக் ஓட்ட பழகிக் கொண்டு இருந்த போது அவ்வழியே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது.
- தந்தை, மகள் இருவரும் படுகாய மடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்த தந்தை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தென்னகர் காலனியைச் சேர்ந்தவர் சையது ஷேக் இப்ராஹிம் (வயது 45). டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவரது மகள் லைகாஇர்ஸத் (19). இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். தனது மகளுக்கு பைக் ஓட்ட சையது ஷேக் இப்ராஹிம் கற்றுக் கொடுத்து வந்தார்.
உத்தமபாளையம் - கம்பம் மெயின் ரோட்டில் பி.டி.ஆர். காலனி பஸ் நிறுத்தம் அருகே பைக் ஓட்ட பழகிக் கொண்டு இருந்த போது அவ்வழியே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் தந்தை, மகள் இருவரும் படுகாய மடைந்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த சையது ஷேக் இப்ராஹிம் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






