என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1.40 லட்சம் மோசடி செய்த பெண்கள்"

    • 2 பெண்களும் அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும், பலருக்கு ெவளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
    • அதனை நம்பி அவர்களிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை பெண்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்த நிலையில் நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்து போடி ஜீவா நகரைச் சேர்ந்த ரமேஷ் மனைவி சுமங்கலி, தங்கராஜ் மனைவி சித்ரலேகா ஆகியோரை சந்தித்தார்.

    இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருவதாகவும், பலருக்கு ெவளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதனை நம்பி அவர்களிடம் குமரவேல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை சுமங்கலி பிரியாவின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

    மேலும் அவர்கள் மோசடி பேர்வழி என தெரிய வரவே தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தையும் திருப்பித் தராமல் இருந்தனர். இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் குமரவேல் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    ×