என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான நடைபெற்றன.
    • தமிழகத்தில் உள்ள நிறைய அரசுக் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை.

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. ஆட்சியில் தான் கீழடி அகழாய்வு பணிகள் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டன.

    * கீழடிக்கு அகழாய்வு அருங்காட்சியகத்தை உருவாக்கியது அ.தி.மு.க. அரசு தான்.

    * கீழடி என் தாய்மடி என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தது அ.தி.மு.க. அரசில் தான்.

    * கீழடியில் பிரம்மாண்டமாக அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கியது அ.தி.மு.க. அரசுதான்.

    * 2020-ல் YMCA-வில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கீழடி கண்காட்சியை காட்சிப்படுத்தியது அ.தி.மு.க. அரசு.

    * 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான நடைபெற்றன.

    * 2018-ல் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அமெரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

    * தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியது அ.தி.மு.க. அரசு தான்.

    * அகழாய்வில் கிடைத்த பொருட்களை உலகிற்கு காட்சிப்படுத்தினோம்.

    * மத்திய அரசு கேட்டதற்காக சரியான விளக்கத்தை தி.மு.க. அரசு கொடுத்ததா என தெரியவில்லை.

    * கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது தி.மு.க. அரசின் கடமையாகும்.

    * தமிழகத்தில் உள்ள நிறைய அரசுக் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை.

    * காலிப் பணியிடங்கள் இவ்வளவு இருக்கும்போது நிர்வாகம் எப்படி சிறப்பாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஜித் குடும்பத்திற்கு அ.தி.மு.க. துணை நிற்கும்.
    • தி.மு.க. ஆட்சி நடக்கும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுகிறது.

    மடப்புரம் அஜித் குமார் இல்லத்திற்கு சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அஜித்குமார் தாய், சகோதருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

    * மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையால் உயிர் பறிபோயுள்ளது, போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தது யார்?

    * அ.தி.மு.க. போராடிய பின்னரே காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    * அஜித்குமார் மரணத்திற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.

    * அஜித் குடும்பத்திற்கு அ.தி.மு.க. துணை நிற்கும்.

    * தி.மு.க. ஆட்சி நடக்கும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுகிறது.

    * கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை.

    * கொலை நிலவரம் என்ன என செய்தி வெளியிடும் அளவிற்கு தமிழகத்தில் நிலை உள்ளது என்றார். 

    • தமிழகத்தில் தி.மு.க. அகற்றப்பட வேண்டிய கட்சி.
    • தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    சிவகங்கை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சிவகங்கையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பிரிந்து சென்றதால் கடந்த முறை தி.மு.க. வெற்றி பெற்றது. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கடும் முயற்சி எடுத்து அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். இந்த கூட்டணியில் புதிய கட்சியிரையும் ஒன்றிணைக்கும் முயற்சி என்பது தி.மு.க. வீழ்த்துவதற்காகத்தான்.

    பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பின்னர் தான் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என தெரியவரும். தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. 6 நொடியில கூட அரசியலில் மாற்றம் வரும். 2026 ஜனவரியில்தான் கூட்டணி நிலைப்பாடுகள் பற்றி தெரியும்.

    தமிழகத்தில் தி.மு.க. அகற்றப்பட வேண்டிய கட்சி. அவர்கள் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட இயலவில்லை. கூலிப்படைகள் அதிகமாகி விட்டன. முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு மோசமான ஆட்சி தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுகிறது.

    தி.மு.க. ஆட்சியில் ஒரு சில திட்டங்கள் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் 4½ ஆண்டு ஆட்சி மக்களுக்கு 7½ ஆட்சியாக தான் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருக்கின்றன. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதே இலக்கு. இந்த கூட்டணியில் முரண்பாடு என்கிற கருத்திற்கே வேலையில்லை. ஒரே நோக்கமாக தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதையும், அதன்காரணமாகவே ஒரே கூட்டணியில் ஒன்றிணைந்தோம்.

    தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை என கூறிவிட்டு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்குகிறார்கள். தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் உங்களுடன் ஸ்டாலின் என்றெல்லாம் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில் வெற்று விளம்பர ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கம் கொண்ட கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவோம். பிரதமர் ஆட்சி சிறந்த ஆட்சி என்பதற்கு உதாரணம் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதே சாட்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் வேண்டாம் என நினைக்கும் வாக்காளர்கள் காலம் காலமாக தமிழகத்தில் உள்ளனர்.
    • அ.தி.மு.க.வின் பலமே இரட்டை இலை தான்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றுவோம்' என்ற பிரசார நடைபயணம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.

    பா.ஜ.க. மடியில் அமர்ந்து கொண்டு நேர் எதிரான கொள்கைகளை கொண்டுள்ள கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி எப்படி அழைக்கிறார் என்று தெரியவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் வேண்டாம் என நினைக்கும் வாக்காளர்கள் காலம் காலமாக தமிழகத்தில் உள்ளனர்.

    அவர்கள் வாக்குகளை வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் கணிசமாக பெறுவார். அந்த வகையில் விஜய்க்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஆனால் அந்த வாக்குகள் வெற்றி பெறும் அளவிற்கு கிடைக்குமா? என்பதை என்னால் கணித்து சொல்ல முடியாது.

    அ.தி.மு.க.வின் பலமே இரட்டை இலை தான். காமராஜர் குறித்த சர்ச்சை தற்போது தேவையற்றது. முதலமைச்சர், திருச்சி சிவா உள்ளிட்டோர் அந்த விமர்சனம் தொடர்பாக போதிய விளக்கம் கொடுத்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    • சி.பி.ஐ. ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி யம்மன் கோவிலில் காவலா ளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 29). இந்த நிலையில் கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் தன்னுடைய காரில் இருந்த நகைகள் மாயமான தாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்கு மாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ் காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணி கண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஸ் ராவத் காத்திருப் போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மேலும், மானா மதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து ஜூலை 8-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதனிடையே, அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கடந்த 2-ந்தேதி திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணையை தொடங்கிய மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேஷ், சுமார் 50-க்குமு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த சம்பவத்தில் விதிமீறல்கள் இருப் பதும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரமும் இருப்பது தெரிய வருகிறது.

    சட்டவிரோத காவல் மரணங்கள் தொடர்பான வழக்கை சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. விசாரணை அமைப்பின் செயல்பாடுகள் நீதியை நிலைநாட்டும் வண்ணம் இருக்க வேண்டுமே தவிர, சந்தேகிக்கும் வண்ணம் இருக்கக் கூடாது.

    இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட காவல் துறையினரே வழக்கை விசாரித்தால் நீதி, உண்மை வெளிவராது எனும் சந்தேகம் எழுவதாலேயே சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு உத்தரவிடப்படுகிறது. சி.பி.ஐ. தரப்பிடம் அனைத்து அறிக்கைகளையும் நீதிமன்ற பதிவாளர் வழங்க வேண்டும், சி.பி.ஐ. ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து, அஜித்குமார் கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. கடந்த சனிக்கிழமை தனியாக வழக்குப் பதிந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் சி.பி.ஐ. விசாரணை அதிகாரியாக துணைக் கண்காணிப்பாளர் மோஹித்குமார் நியமிக்கப்பட்டார். இவர் பல மாநிலங்களில் முக்கியமான வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையை அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளதாக அவர் ஏற்கெனவே தெரிவித்தார்.

    விசாரணையை தொடங்குவதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகித்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வந்தனர். அவர்களுக்கு மதுரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன.

    இதற்கிடையில் மதுரையில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் இன்று முதல் விசாரணையை முறைப்படி தொடங்கியுள்ளனர். முன்னதாக தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் மதுரை, சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பிறகு அவர்கள் பிற்பகலில் திருப்புவனம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு அளிக்கப்பட்ட அறிக்கையில் அடிப்படையில் அஜித்குமாரின் பெற்றோர், சகோதரர், நண்பர்கள், கோவில் செயல் அலுவலர், ஊழியர்கள், நகை மாயமானதாக புகார் தெரிவித்த நிகிதா மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பட்டியலிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.

    முன்னதாக திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு குறித்த ஆவணங்களையும் அவர்கள் கோர்ட்டில் இருந்து முறைப்படி இன்று பெற்றுக் கொள்கிறார்கள். மேலும் டெல்லியில் இருந்து வரும் அதிகாரிகளுக்கு மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளும், அலுவலர்களும் உதவியாக விசாரணை பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    தற்போது, சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமார் வழக்கை விசாரிப்பதற்காக மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் எதிரே கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான வணிக வளாகத்தின் மேல் தளத்தில் உள்ள அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    • கடந்த 3-ந்தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது.
    • தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல் துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு போலீசாரால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணத்துக்குநீதி வேண்டும்.

    அதேபோல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப்பொறுப் பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழும் காவல்நிலைய படுகொலைகளை தடுக்க கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜூலை 8-ந்தேதி மாலை 4 மணிக்கு திருப்புவனம் சந்தைத்திடல் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தலைமை தாங்க உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி அறிவித்து இருந்தது.

    இந்தநிலையில் சீமானின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஏற்கனவே அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக கடந்த 3-ந்தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது.

    மேலும் நாளை சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் தேரோட்டம் நடைபெறுவதுடன், திருப்புவனத்தில் வாரச்சந்தை கூட உள்ளதால் பாதுகாப்பு கருதி நாளை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இருந்தபோதிலும் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார்.

    • திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார்.
    • மருத்துவமனையில், நவீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சிவகங்கை திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அஜித் குமாரின் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில், நவீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    போலீசார் அடித்ததில் நவீனின் பாதத்தில் வலி உள்ளது என்றும் அதனால், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீனுக்கு ஓ.பி.எஸ் ஆறுதல் தெரிவித்தார்.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார், காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, அஜித்குமாரின் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அஜித்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து ஓபிஎஸ் அஞ்சலி செலுத்தினார். 

    அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீனுக்கு ஓ.பி.எஸ் ஆறுதல் தெரிவித்தார்.

    • அஜித்குமார், காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    • வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார், காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, அஜித்குமாரின் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.

    அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீனுக்கு நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.

    மேலும், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

    • மதுரை ஐகோர்ட் அஜித்குமார் தொடர்பான வழக்கு விசாரணை விபரங்களை அறிக்கையாக வருகிற 8-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
    • இன்னும் 4 நாட்கள் உள்ளதால் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27).

    நகை திருடியதாக நிகிதா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் நடத்திய கொடூர தாக்குதலில் அஜித்குமார் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அஜித்குமாரை தாக்கி கொலை செய்த 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

    போலீசாரால் தாக்கி காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மதுரை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அஜித்குமார் கொலை தொடர்பாக விசாரிக்க மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் என்பவரை நியமித்தது.

    மேலும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிற 8-ந்தேதி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இதைதொடர்ந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை உடனே தொடங்கினார். அதன்படி கடந்த 2 நாட்களாக திருப்புவனத்தில் நீதிபதி முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். முதல் நாளில் ஏ.டி.எஸ்.பி. சுகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், மடப்புரம் கோவில் ஊழியர்கள் ஆகியோரிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினார்.

    2-வது நாளான நேற்று போலீசார் தாக்குவதை வீடியோ எடுத்த கோவில் ஊழியர் சக்தீஸ்வரனிடம் வீடியோவின் உண்மை தன்மை குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அஜித்குமாரின் தாய் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார் மற்றும் உறவினர்கள் நீதிபதி முன் ஆஜராகி விளக்கமளித்தனர். விசாரணையின்போது சாட்சிகளின் வாக்கு மூலங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

    3-வது நாளாக இன்று நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை தொடங்கினார். காலை 9 மணியளவில் திருப்புவனம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகைக்கு வந்த அவர் அஜித்குமாரை போலீசார் அழைத்து சென்றதை பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

    பின்னர் அஜித்குமார் தாக்கப்பட்ட மடப்புரம் கோவில் பின்புறமுள்ள கோசாலை, திருப்புவனம் போலீஸ் நிலையம் ஆகிய இடங்களுக்கு சென்று நீதிபதி விசாரிக்க உள்ளார்.

    மதுரை ஐகோர்ட் அஜித்குமார் தொடர்பான வழக்கு விசாரணை விபரங்களை அறிக்கையாக வருகிற 8-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இன்னும் 4 நாட்கள் உள்ளதால் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்.

    2 நாட்களாக சாட்சியங்களிடம் தனி அறையில் வைத்து வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில் அஜித்குமாரை தனிப்படை போலீசார் அழைத்து சென்று தாக்கப்பட்ட இடங்களை இன்று நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டு விபரங்களை சேகரிக்க உள்ளார். இதன் மூலம் இந்த வழக்கு விசாரணை வேகமெடுக்க தொடங்கி உள்ளது.

    திருட்டு புகார் தொடர்பாக அஜித்குமாரை விசாரிக்க போலீஸ் உயர் அதிகாரிகள், தனிப்படை போலீசாருக்கு அழுத்தம் கொடுத்த தலைமை செயலக அதிகாரி யார்? எப்.ஐ.ஆர். பதியாமல் தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றது எப்படி? புகார் கொடுத்த நிகிதாவின் காரில் உண்மையிலேயே நகை இருந்ததா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் மர்மமாக உள்ளது. நீதிபதி அறிக்கை தாக்கல் செய்யும் போது மேற்கண்ட கேள்விகள் மீதான மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அஜித்குமார் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் வழக்கின் தீவிரத் தன்மையை கருதி இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    மதுரை ஐகோர்ட்டில் வருகிற 8-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சி.பி.ஐ. எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்காமல் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று திருப்புவனம் வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை திருப்புவனம் போலீசாரிடம் இருந்து பெற்று சென்றனர்.

    அவர்கள் வழக்கு விபரங்களை முழுமையாக அறிந்து கொண்டு 8-ந்தேதிக்கு பிறகு விசாரணையை தொடங்குவார்கள் என தெரிகிறது.

    இந்த நிலையில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் நீதிபதியிடம் நேரடியாக சாட்சியம் அளிக்கலாம் என்று அஜித் குமார் தரப்பு வக்கீல் சரவணன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து வக்கீல் சரவணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அஜித்குமார் போலீஸ் காவலில் மரணம் அடைந்தது தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் நீதிபதி ஜான் சுந்தர்லாலிடம் சாட்சியம் அளிக்கலாம். இந்த விவகாரத்தில் தங்களுக்கு தெரிந்த உண்மைகளை எந்தவித அச்சமும் இல்லாமல் விசாரணை நடத்தும் நீதிபதியிடம் கூறலாம்.

    நீதிபதி ஜான் சுந்தர்லால் வருகிற 6-ந்தேதி வரை அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவார். எனவே வருகிற 6-ந்தேதி வரை பொதுமக்கள் அஜித்குமார் மரணம் தொடர்பாக தெரிந்த விஷயங்கள் பற்றி அவரிடம் நேரடியாக சொல்லலாம்.

    சாட்சியம் அளிக்க விரும்புபவர்கள் கோர்ட்டு நியமித்துள்ள ஊழியர்களை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.

    எங்களை பொறுத்தவரை காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் அரசு பதவிகளில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் நிகிதாவிடம் விசாரணை நடத்த தார்மீக வகையில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவிலுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் என்பவர் கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
    • கோவில் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, போலீசார் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு தான் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நீதிபதி முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    குறிப்பாக மடப்புரம் கோவில் பின்புறம் உள்ள கோசாலை பகுதியில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

    இது தொடர்பான வீடியோ ஐகோர்டிலும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. போலீசார் கம்பியால் அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த தாக்குதலுக்கு பின் தான் அஜித்குமார் இறந்தார் என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சம்பவம் நடந்த ஜூன் 28-ந்தேதியன்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் என்பவர் கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

    அதில் அஜித்குமாரை அறநிலையத்துறை அலுவலகம் பின்புறம் அழைத்துச் செல்வது, உயிரிழந்த பின் கோவில் ஊழியர்கள் கார்த்திக் வேலு, வினோத் ஆகியோர் உதவியுடன் அஜித்குமாரை ஆட்டோவில் ஏற்றுவது போன்றவை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    உயர் அதிகாரியின் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் நேரடியாக வந்து ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றுள்ளார். எனவே அதில் உள்ள பதிவுகள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

    கோவில் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, போலீசார் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு தான் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் தான் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச்செல்ல உத்தரவிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    • காவலாளி அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்தன.
    • கண்கள் சிவந்து வீங்கியுள்ளன. காதுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 28) நகை திருட்டு புகாரில் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கை மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டின் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து வருகிறார். வருகிற 8-ந்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

    இந்த நிலையில், அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதில் 12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன.

    ரத்தம் கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் ஒரு காயமாக இருந்தாலும் அந்த காயத்தினுள்ளே பல்வேறு ரத்தக்கட்டு காயங்கள் அடங்கியுள்ளன. வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயத்துடன், மண்டை ஓட்டின் இரு பக்கங்கள், நடுமண்டை, தலைப்பகுதி முழுவதுமாக கட்டையால் அடித்த காயம், மூளையில் இரு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட புண் இருந்துள்ளது. இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூடு வைக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால் ரத்த காயம் பல வகையாக காணப்படுகிறது.

    கண்கள் சிவந்து வீங்கியுள்ளன. காதுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதயத்தில் இரு இடங்கள் மற்றும் கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

    தரையில் இழுத்துச் சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது போலீசார் அடிக்கும் போது தற்காத்துக்கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×