என் மலர்
நீங்கள் தேடியது "கீழடி அருங்காட்சியகம்"
- கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது.
- பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் முடிவுற்ற நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,
* திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது கீழடி அருங்காட்சியகம்.
* வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்குச் சென்றபோது அறிந்துகொண்டேன்.
* கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது.

* பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது.
* கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது.
* பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன.
* நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நிலத்திலிருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்து வருகிறது நமது திராவிட மாடல் அரசு! என்று கூறியுள்ளார்.
- தமிழர்களின் பெருமையை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் உலகிற்கு பறைசாற்றிது அ.தி.மு.க. அரசுதான்.
- 3 மாதத்திற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வு மையத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் குறித்த விபரங்களை புத்தகங்களாக அ.தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக உரிய விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் இது தொடர்பாக அறிந்து கொள்ளும் வகையில் அகழாய்வில் கிடைத்த பொருட்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தி உள்ளோம்.
தமிழகத்தில் இதுவரை நடந்த 39 அகழாய்வு பணிகளில் 33 அ.தி.மு.க. ஆட்சியில் தான் நடத்தப்பட் டது. கீழடி அகழாய்வு என்பது மிக முக்கியமானதாகும். இங்கு கண்டறியப்பட்ட பொருட்கள் புளோரிடா கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது கீழடி விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கின்றனர். அது யார் என எல்லோருக்கும் தெரியும்.
கீழடி குறித்த தொன்மையை ஆய்வகத்தில் கொடுத்து அ.தி.மு.க. ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும், முயற்சி செய்திருக்க வேண்டும். கீழடி தொடர்பாக மத்திய அரசு என்ன விளக்கம் கேட்டது, அதற்கு தி.மு.க. அரசு என்ன விளக்கம் அளித்தது என தெரியவில்லை. இதைப் பற்றி தெரியாமல் பதிலளிக்க முடியாது.
தமிழர்களின் பெருமையை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் உலகிற்கு பறைசாற்றிது அ.தி.மு.க. அரசுதான். ஆனாலும் கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்த விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு துணை நிற்போம்.
இன்றைக்கு தமிழகத்தில் உள்ள 196 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் 96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. முதல்வர்கள் இருந்தால் தான் கல்லூரி பேராசிரியர்கள் கட்டுப்பாடோடு இயங்குவார்கள். ஆனால் நிறைய கல்லூரிகளில் பேராசிரியர்களும் இல்லை. எப்படி தரமான கல்வி கிடைக்கும்.
ஒவ்வொரு கல்லூரிக்கும் தேவையான ஆட்கள் நியமிக்கப்படவில்லை. 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அரசு மற்றும் அரசு சார்ந்த காலி பணியிடங்கள் 5.50 லட்சம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 50 ஆயிரம் பணியிடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 3 மாதத்திற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
ஆனால் இந்த அரசு அறிவித்த எதையும் செய்யவில்லை. காலி பணியிடங்கள் இருந்தால் எப்படி அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். மருத்துவத் துறை, கல்லூரிகளில் காலி பணியிடங்கள் அதிக அளவில் உள்ளது. இப்படி தமிழகத்தில் எல்லா துறையும் பின்னடைவாக உள்ளது. இதற்கு காரணம் தி.மு.க. அரசு முறையாக செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கீழடி அருங்காட்சியகத்தை எடப்பாடி பழனிச்சாமி சுற்றி பார்த்தபோது அங்கு கல்லூரி மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்களிடம் கல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது மாணவிகள் லேப்டாப் கொடுப்பதை இந்த அரசு நிறுத்திவிட்டது. எங்களுக்கு ஆட்சி மாற்றம் வேண்டும். உங்கள் ஆட்சியில் லேப்டாப் கொடுக்கப்படும் என உறுதி அளித்தால் உங்களுக்கு வாக்களிப்போம் என கூறினார்.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி லேப்டாப் கொடுத்தால் தான் வாக்களிப்போம் என கூறாதீர்கள். வாக்களிப்பது அனைவரின் கடமை. லேப்டாப் திட்டம் அம்மாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கண்டிப்பாக அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்கள் கொண்டுவரப்படும் என கூறினார்.
- 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான நடைபெற்றன.
- தமிழகத்தில் உள்ள நிறைய அரசுக் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை.
சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. ஆட்சியில் தான் கீழடி அகழாய்வு பணிகள் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டன.
* கீழடிக்கு அகழாய்வு அருங்காட்சியகத்தை உருவாக்கியது அ.தி.மு.க. அரசு தான்.
* கீழடி என் தாய்மடி என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தது அ.தி.மு.க. அரசில் தான்.
* கீழடியில் பிரம்மாண்டமாக அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கியது அ.தி.மு.க. அரசுதான்.
* 2020-ல் YMCA-வில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கீழடி கண்காட்சியை காட்சிப்படுத்தியது அ.தி.மு.க. அரசு.
* 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான நடைபெற்றன.
* 2018-ல் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அமெரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
* தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியது அ.தி.மு.க. அரசு தான்.
* அகழாய்வில் கிடைத்த பொருட்களை உலகிற்கு காட்சிப்படுத்தினோம்.
* மத்திய அரசு கேட்டதற்காக சரியான விளக்கத்தை தி.மு.க. அரசு கொடுத்ததா என தெரியவில்லை.
* கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது தி.மு.க. அரசின் கடமையாகும்.
* தமிழகத்தில் உள்ள நிறைய அரசுக் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை.
* காலிப் பணியிடங்கள் இவ்வளவு இருக்கும்போது நிர்வாகம் எப்படி சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
- பாராசக்தி சிவகார்த்திகேயனின் 25ஆவது படமாகும்.
சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு டான் பட இயக்குனருடன் கைக்கோர்க்கிறார். அதேவேளையில் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாராசக்தி சிவகார்த்திகேயனின் 25ஆவது படமாகும்.
இந்நிலையில், மதுரையில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது குடும்பத்துடன் சுற்றிப் பார்த்தார். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து ஆர்வமுடன் சிவகார்த்திகேயன் கேட்டறிந்தார்
- கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றதாக அமைச்சர் கூறினார்.
- மைசூரில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு மைபடிகள் வந்திருக்கின்றன.
மதுரை
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஒருங்கிணைந்து, "உலக மரபு வார விழாவை" முன்னிட்டு நடத்திய 'தமிழக நடுகல் மரபு' கண்காட்சி நடந்தது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மைசூரில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு மைபடிகள் வந்திருக்கின்றன. அவை சென்னையில் உள்ள இந்திய அரசின் தொல்லியல் அளவீட்டுத்துறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் கல்வெட்டு மைபடிகளை பாதுகாப்பதற்கோ, ஆய்வு கள் மேற்கொள்வதற்கோ, மைபடிகள் குறித்து வடிவ ங்களை உருவாக்குவதற்கோ இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறையுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொல்லியல் அளவீட்டுத்துறைக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளார். இது வரலாற்றில் புதிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக உள்ளது.
1919-ம் ஆண்டு வரைதான் தென் இந்தியாவில் இருந்து மைல்படிகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் தொல்லியல் துறையின் சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று கல்வெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். 50 சதவீத கல்வெட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. மீதமுள்ள 50 சதவீத கல்வெட்டுக்களும் கிடைத்து விட்டால் அவற்றின் மூலம் நாம் பல்வேறு வரலாற்று செய்திகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. கீழடியில் 1200-க்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றில் என்னென்ன பொருட்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்? என்றும், காட்சிப்படுத்தும் பொருள் குறித்து குறிப்புகள் இடம் பெற வேண்டும், பொருட்களை எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும்? என்று திட்டமிடப்பட்டு 2 மாத காலங்களுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று முதலமைச்சரால் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் கலெக்டர்அனீஷ் சேகர் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன், யாக்கை மரபு அறக்கட்டளை குமரவேல் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆலோசனை கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
- 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை செல்ல உள்ளார். காலை 9 மணிக்கு விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அந்த கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் இன்று மாலை, சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து 6-ஆம் தேதி களஆய்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர், அன்றைய தினம் மாலை, நாகர்கோவில் சென்று அங்கு நடைபெறும் தோள்சீலைப் போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பங்கேற்கிறார். இரவு, நாகர்கோவிலில் தங்கும் அவர், 7-ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
- கீழடி அருங்காட்சியகம் சென்றால் தமிழர்களின் பாரம்பரியத்தை அறிய முடியும் என்று அமைச்சர் கூறினார்.
- தமிழகத்தை பொறுத்தவரை திரை உலகில் மதுரையை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
மதுரை
மதுரை மாவட்ட பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் வைகை இலக்கிய திருவிழா இன்று மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு வைகை இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, வெங்கடே சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், பொது நூலகங்களின் இயக்குநர் இளம் பகவத், மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) திவ்யான் ஷுநிகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
மதுரையில் நடந்து வரும் வைகை இலக்கிய திருவிழா தமிழக எழுத்தாளர்கள், கலைஞர்களை தூண்டும் விதமாக அமைய வேண்டும். உலக தமிழ்ச் சங்கம் உருவாகிய மதுரையில் வைகை இலக்கிய விழா நடத்துவதில் தமிழகம் பெருமை கொள்கிறது.
கீழடி அகழாய்வு மூலம் தமிழ் சமூகம் பழமை வாய்ந்தது என்பதை வாய்மொழியாக கூற வில்லை. அறிவியல் பூர்வ மாக நிரூபித்து உள்ளோம். எனவே தமிழகம் முழுவதும் வசிக்கும் மாணவர்கள், தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிய வேண்டும் என்றால் கீழடி அருங்காட்சியகத்துக்கு வாழ்நாளில் ஒரு முறை யாவது வந்து பார்க்க வேண்டும்.
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும். தமிழகத்தை பொறுத்தவரை திரை உலகில் மதுரையை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் எண்ணற்ற எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவேதான் அவர்களை பெருமைப் படுத்தும் வகையில் வைகை இலக்கிய விழா நடத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
- வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் கட்டண விவரத்தையும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தை கடந்த 5-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து பார்வையிட்டார். மறுநாளில் இருந்து பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எனவும், இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் பார்வையிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைவரும் வந்து இலவசமாக பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கு வருகிற 1-ந் தேதி (ஏப்ரல்) முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் கட்டண விவரத்தையும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் உள்நாட்டினை சேர்ந்த மாணவர்களுக்கு தலா ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 வசூலிக்கப்படும். வெளிநாட்டை சேர்ந்த சிறியவர்களுக்கு தலா ரூ.25, பெரியவர்களுக்கு ரூ.50, புகைப்படம் எடுக்க ரூ.30, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணமாக வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கீழடி அருங்காட்சியகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
- பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை கல்வி சுற்றுலாவாக அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ் வாராய்ச்சி பணிகள் நடந்தன. கீழடியில் தமிழக அரசின் சார்பில் ரூ.18 கோடியே 40 லட்சத்தில் செட்டிநாட்டு கட்டிடக்கலை பாணியில் அருங்காட்சியம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியத் தில் தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாராய்ச்சி யில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கடந்த 6-ந்தேதி முதல் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசி ரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.
கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடும் மாணவர்கள் தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களின் பண்டைய கால நாகரீகம் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சிய கத்தில் பழங்கால மண்பானை, ஓடுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், கருப்பு, சிவப்பு பானைகள், பண்டைய கால ஆயுத ங்கள். ஆபரணங்கள் என தமிழர்களின் வரலாற்றை அறிய கூடிய ஆயிரக் கணக்கான பொருட்களை சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அனைவருக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை அதிகளவில் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் தொல்லி யல் ஆர்வலர்கள், பொது மக்கள் குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.
கடந்த வாரம் மெக்சிகோ நாட்டின் இந்தியாவிற்கான தூதர் குழுவினரோடு வந்து பார்வையிட்டு வியந்தார். தற்போது பள்ளி, கல்லூரிகளில் பொது தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளி மாணவ-மாணவிகளின் வருகை குறைவாக உள்ளது. கோடைவிடுமுறை முடிந்த பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை கல்வி சுற்றுலாவாக அரசு செலவில் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தை பார்க்க கட்டண விலக்கு அளிக்க வேண்டும். மதுரையில் உள்ள விமான நிலையம், ெரயில் நிலையம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள், வெளிநாடு, வெளிமாநில பயணிகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தின் பெருமைகளை விளக்கும் வகையில் பெரிய அளவிலான ஒளிரும் டிஜிட்டல் திரைகள் அமைக்க வேண்டும்.
இதேபோல் மதுரை- விரகனூர் ரிங்ரோட்டில் இருந்து கீழடி அருங்காட்சிய கம் வரை அரசு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- தமிழர்களின் வரலாற்று பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தை சிவக்குமார், சூர்யா-ஜோதிகா பார்வையிட்டனர்.
- அப்போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
கீழடி அருங்காட்சிய கத்தை ஏராளமான திரை பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.
அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கி கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.
- கீழடி அருங்காட்சியகத்தை வார இறுதி நாட்களில் கூடுதலாக ஒரு மணி நேரம் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை முதன்மை செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர். தற்போது 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளும் நடைபெறுகிறது.
கீழடி அருங்காட்சியகத்தை தமிழக அரசின் முதன்மை செயலர் (சிறப்பு ெசயலாக்க திட்டம்) உதயசந்திரன் பார்வையிட்டார். இங்கு கூடுதலாக மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் ஆய்வு செய்தார். பின்னர் உதயசந்திரன் கூறியதாவது:-
அகழாய்வு பணிகளின் போது கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அவற்றை உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், உலகளவில் அனைத்து நாடுகளும் வியக்கும் வகையில் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ18.42கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கூடுதலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வசதி களை மேம்படுத்தும் வகையில் அரசின் அறிவுரையின்படி துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்களின் வசதிக்காக நுழைவுச்சீட்டு பெறுவதற்கு வலைத்தளம் வழியாக பணம் செலுத்தும் முறை, சுற்றுலா பயணிகளின் பொருட்களை பாதுகாப்ப தற்கென பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ள பொருட்களில் மாதிரி வடிவ பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான தெளிவான குறிப்புகளை நிறுவுவதற்கும், அருங்காட்சியத்தில் உள்ள அனைத்து பிரிவுகள் குறித்தும் வழித்தடங்களை பொதுமக்கள் எளிதில்அ றிந்துகொள்ளும் வகையில் நிறுவுவதற்கும், கூடுதலாக காற்றோட்ட வசதி களை ஏற்படுத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரலாற்று குறிப்புகளை தெளிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கென துறைசார்ந்து கூடுதலாக வழிகாட்டிகளை நியமிப்பதற்கும், இதற்கென தொல்லியல் துறையில் ஆர்வத்தின் அடிப்படையில் இந்த பகுதிகளை சேர்ந்தவர்களை வழிகாட்டிகளாக நியமனம் செய்து அதற்கென முறையான பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் தற்போதுள்ள நேரத்தை கூடுதலாக ஒரு மணிநேரம் மாலை வேளையில் அதிகரிக்கவும், பொதுமக்களின் வருகையை பொறுத்து குறும்படங்களை தொடர்ந்து திரையிடவும், கூடுதல் கழிவறைகளை ஏற்படுத்தம், அருங்காட்சியகத்தினுள்ள ஒவ்வொரு பிரிவிலும் அவைகள் சார்ந்த புத்தகங்களை நிறுவுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுயஉதவி குழுக்களின் சார்பில் இயங்கிவரும் சிற்றுண்டி உணவ கத்தின் மூலம் வழங்கப்படும் உணவு பொருட்களை தரமான முறையில் பொதுமக்களுக்கு வழங்கவும், அதற்கான விலை பட்டியலை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிபடுத்துவது என இதுபோன்று பல்வேறு கூடுதல் வசதிகளை மேம்படுத்த துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்!
- நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும்.
சென்னை:
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை இரவில் ஒளிரும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில்,
தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! கண்களைக் கவர்கிறது!
சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்!
இவற்றைப் போலவே, நெல்லையில் 'பொருநை அருங்காட்சியகம்' திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.






