search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lower Museum"

    • கீழடி அருங்காட்சியகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை கல்வி சுற்றுலாவாக அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழ் வாராய்ச்சி பணிகள் நடந்தன. கீழடியில் தமிழக அரசின் சார்பில் ரூ.18 கோடியே 40 லட்சத்தில் செட்டிநாட்டு கட்டிடக்கலை பாணியில் அருங்காட்சியம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    இந்த அருங்காட்சியத் தில் தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாராய்ச்சி யில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கடந்த 6-ந்தேதி முதல் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசி ரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

    கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடும் மாணவர்கள் தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களின் பண்டைய கால நாகரீகம் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

    இந்த அருங்காட்சிய கத்தில் பழங்கால மண்பானை, ஓடுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், கருப்பு, சிவப்பு பானைகள், பண்டைய கால ஆயுத ங்கள். ஆபரணங்கள் என தமிழர்களின் வரலாற்றை அறிய கூடிய ஆயிரக் கணக்கான பொருட்களை சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

    வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அனைவருக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை அதிகளவில் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் தொல்லி யல் ஆர்வலர்கள், பொது மக்கள் குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

    கடந்த வாரம் மெக்சிகோ நாட்டின் இந்தியாவிற்கான தூதர் குழுவினரோடு வந்து பார்வையிட்டு வியந்தார். தற்போது பள்ளி, கல்லூரிகளில் பொது தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளி மாணவ-மாணவிகளின் வருகை குறைவாக உள்ளது. கோடைவிடுமுறை முடிந்த பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை கல்வி சுற்றுலாவாக அரசு செலவில் அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தை பார்க்க கட்டண விலக்கு அளிக்க வேண்டும். மதுரையில் உள்ள விமான நிலையம், ெரயில் நிலையம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள், வெளிநாடு, வெளிமாநில பயணிகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தின் பெருமைகளை விளக்கும் வகையில் பெரிய அளவிலான ஒளிரும் டிஜிட்டல் திரைகள் அமைக்க வேண்டும்.

    இதேபோல் மதுரை- விரகனூர் ரிங்ரோட்டில் இருந்து கீழடி அருங்காட்சிய கம் வரை அரசு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×