search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழடி அருங்காட்சியகம் சென்றால்  தமிழர்களின் பாரம்பரியத்தை அறிய முடியும்-அமைச்சர்
    X

    கீழடி அருங்காட்சியகம் சென்றால் தமிழர்களின் பாரம்பரியத்தை அறிய முடியும்-அமைச்சர்

    • கீழடி அருங்காட்சியகம் சென்றால் தமிழர்களின் பாரம்பரியத்தை அறிய முடியும் என்று அமைச்சர் கூறினார்.
    • தமிழகத்தை பொறுத்தவரை திரை உலகில் மதுரையை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் வைகை இலக்கிய திருவிழா இன்று மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு வைகை இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, வெங்கடே சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், பொது நூலகங்களின் இயக்குநர் இளம் பகவத், மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) திவ்யான் ஷுநிகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    மதுரையில் நடந்து வரும் வைகை இலக்கிய திருவிழா தமிழக எழுத்தாளர்கள், கலைஞர்களை தூண்டும் விதமாக அமைய வேண்டும். உலக தமிழ்ச் சங்கம் உருவாகிய மதுரையில் வைகை இலக்கிய விழா நடத்துவதில் தமிழகம் பெருமை கொள்கிறது.

    கீழடி அகழாய்வு மூலம் தமிழ் சமூகம் பழமை வாய்ந்தது என்பதை வாய்மொழியாக கூற வில்லை. அறிவியல் பூர்வ மாக நிரூபித்து உள்ளோம். எனவே தமிழகம் முழுவதும் வசிக்கும் மாணவர்கள், தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிய வேண்டும் என்றால் கீழடி அருங்காட்சியகத்துக்கு வாழ்நாளில் ஒரு முறை யாவது வந்து பார்க்க வேண்டும்.

    தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும். தமிழகத்தை பொறுத்தவரை திரை உலகில் மதுரையை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் எண்ணற்ற எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவேதான் அவர்களை பெருமைப் படுத்தும் வகையில் வைகை இலக்கிய விழா நடத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×