என் மலர்
சேலம்
- 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
- அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
மேலும் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தேனி, ராமநாதபுரம், வேலூர், தென்சென்னை, புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதியை தவிர மற்ற 10 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வசம் உள்ளது. அப்படி இருந்தும் சேலம் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.
அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் குறைந்த வாக்குகள் பெற்றிருந்தார்.
இதையடுத்து முதல் கட்டமாக சேலம், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (8-ந்தேதி) ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதில் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதனால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.
- மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
- கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக சேலம் மாநகரில் நேற்று மாலை 6 மணியளவில் சூறாவளி காற்றுடன் மழை தொடங்கியது. இந்த மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழையாக விடிய, விடிய பெய்தது.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான சங்ககிரி, தம்மம்பட்டி, ஆனைமடுவு, வீரகனூர், ஓமலூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஏற்காட்டில் நேற்று சாரல் மழை பெய்தது. மேலும் மேக கூட்டங்கள் அங்குள்ள மரங்களை தழுவி சென்றது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகை ரசித்து வருகிறார்கள். சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையும் மழை தூறியபடியே இருந்தது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 53 மி.மீ. மழை பெய்துள்ளது. சங்ககிரி 50.4. மி.மீ., சேலம் மாநகர் 16, ஏற்காடு 4, வாழப்பாடி 2, ஆனைமடுவு 16, ஆத்தூர் 10.2, கெங்கவல்லி 10, ஏத்தாப்பூர் 4, வீரகனூர் 39, நத்தக்கரை 7, எடப்பாடி 4, மேட்டூர் 2.2, ஓமலூர் 23, டேனீஸ்பேட்டை 11 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 251.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதே போல நாமக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, நாமக்கல் உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் இந்த கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக சேந்தமங்கலத்தில் 65 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. எருமப்பட்டி 20, குமாரபாளையம் 24, மங்களபுரம் 4, மோகனூர் 11, நாமக்கல் 51.3, பரமத்தி வேலூர் 33, புதுச்சத்திரம் 25, ராசிபுரம் 27, திருச்செங்கோடு 46.2, கலெக்டர் அலுவலகம் 34, கொல்லி மலை 59 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 399.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- விடிய, விடிய வரை சாரல் மழையாக பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது .
குறிப்பாக எடப்பாடி, நத்தக்கரை, வாழப்பாடி, ஆனைமடுவு, டேனீஸ்பேட்டை உள்பட பல பகுதகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
ஏற்காட்டில் நேற்றிரவு விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
சேலம் மாநரில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை விடிய, விடிய வரை சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 19 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 7.7, ஏற்காடு 1.6, வாழப்பாடி 14, ஆனைமடுவு 10, ஆத்தூர் 4, தம்மம்பட்டி 8, ஏத்தாப்பூர் 5.4, கரியகோவில் 4, வீரகனூர் 4, நத்தக்கரை 13, சங்ககிரி 4.4, எடப்பாடி 19, மேட்டூர் 2.2, டேனீஸ்பேட்டை 10 மி.மீ. என மாவட்டம்முழுவதும் 107.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 5 லட்சத்து 66 ஆயிரத்து 85 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமார் 76 ஆயிரத்து 207 வாக்குகளும் பெற்றனர்.
சேலம்:
சேலம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. , அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 27 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 13 லட்சத்து 6 ஆயிரத்து 457 பேர் வாக்களித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது.
இதில் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 5 லட்சத்து 66 ஆயிரத்து 85 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷ் 4 லட்சத்து 95 ஆயிரத்து 728 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் அண்ணாதுரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 894 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமார் 76 ஆயிரத்து 207 வாக்குகளும் பெற்றனர்.
இதில் நோட்டவுக்கு 14 ஆயிரத்து 894 பேர் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேட்டூர் அணைக்கு நேற்று 89 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 286 கன அடியாக அதிகரித்துள்ளது.
- நேற்று 45.47 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 45.18அடியாக குறைந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. தற்போது போதிய அளவில் மழை இல்லதாதால் மேட்டூர் அணைக்கு நேற்று 89 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 286 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 45.47 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 45.18அடியாக குறைந்தது. நீர் இருப்பு 14.91 டி.எம்.சி.யாக உள்ளது.
- பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது.
- அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
சேலம்:
தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சேலத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று மதியம் வெயில் அடித்தது.
மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து 6 மணிக்கு இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர் சிறிது நேரம் மழை விட்டது.
அதன் பிறகு 2-வது முறையாக பெய்த கனமழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இந்த கனமழையால் கலெக்டர் அலுவலகம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, அன்னதானப்பட்டி அஸ்தம்பட்டி, 4 ரோடு, மேயர் நகர் உள்ளிட்ட நகரில் பல இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.
ஓமலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. சேலம் புதிய பஸ்நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
தாழ்வான பலபகுதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நின்ற பிறகு வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர்.
சேலத்தில் அதிகபட்சமாக 86.4 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கரியகோவில், ஓமலூர், டேனீஷ்பேட்டை ஆகிய இடங்களில் மழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஏற்காடு - 37,
கரிய கோவில் - 58,
ஓமலூர் - 15,
டேனீஷ் பேட்டை - 3.2 என மாவட்டம் முழுவதும் 207.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
- கடந்த வாரம் பரவலாக கன மழை பெய்தது.
- கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக கன மழை பெய்தது. தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. மதியம் வெப்ப அலை வீசியது. இரவிலும் கடும் புழுக்கத்தில் மக்கள் தவித்தனர்.
இந்த நிலையில் ஏற்காட்டில் நேற்றிரவு 10.30 மணியளவில் தொடங்கிய மழை இடி, மின்னலுடன் 12 மணி வரை கன மழையாக கொட்டியது. 1 ½ மணி நேரத்திற்கும் மேல் பெய்த இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மழையை தொடர்ந்து இன்று காலை ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. கோடை விடுமுறை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சனிக்கிழமையான இன்று காலை முதலே சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் அதிக அளவில் குவிந்திருந்தனர். அவர்கள் இயற்கை அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள்.
சேலம் மாநகரில நேற்றிரவு 11 மணிக்கு பலத்த காற்றுடன் தொடங்கிய மழை 12 மணி வரை சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது .
மழையை தொடர்ந்து சேலத்திலும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 34.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலத்தில் 11.2 மி.மீ., ஓமலூர் 2.2, டேனீஸ்பேட்டை 7 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 55 மி.மீ. மழை பெய்துள்ளது.
- பழச்சாறு தயாரித்து பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- குளிர்பானங்கள் அருந்துவதில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
வாழப்பாடி:
கோடைக்காலம் தொடங்கினாலே சுட்டெரிக்கும் வெய்யிலின் தாக்கத்தை தணித்துக் கொள்ள குளிர்பானங்கள் அருந்துவதில் அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான மக்கள் புட்டியில் அடைத்து விற்கப்படும் செயற்கை குளிர்பானங்களை வாங்கி பருகுவதை விட, இயற்கை பழச்சாறு அருந்துவதையே விரும்புகின்றனர்.
இதனால் கோடை காலத்தில் பழச்சாறு தயாரித்து அருந்துவதற்கேற்ற தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழங்களுக்கு இப்பகுதி மக்களிடையே ஆண்டுதோறும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
எனவே, திருவண்ணாமலை பகுதியில் அதிகளவில் விளைந்துள்ள முலாம் பழங்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், வாழப்பாடி பகுதி கிராமங்களுக்கு ஆட்டோக்களில் கொண்டு வந்து 4 கிலோ விலை ரூ.100 என விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த முலாம் பழங்களை மக்கள் விரும்பி வாங்கி பழச்சாறு தயாரித்து பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாழப்பாடி பகுதி கிராமங்களில் முலாம் பழங்கள் அமோகமாக விற்பனையாவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு முலாம் பழம் கொண்டு வரப்பட்டுள்ளது.
- மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர்.
- பகல் நேரத்திலேயே பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவிகள் அந்தப் பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
சேலம்:
சேலம் கோரிமேடு பொன்நகர் பகுதியை சேர்ந்த மக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
கோரிமேட்டில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதிதாக அந்த கடைக்கு எதிரே டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே செயல்பட்டு வரும் 2 கடையினால் அந்த பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர். பகல் நேரத்திலேயே பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவிகள் அந்தப் பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
ஏற்கனவே அந்த கடையை அகற்றச் சொல்லி வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக 3-வது கடை திறக்க முயற்சி செய்து வருகிறார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- தண்ணீர் வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1200 கனஅடியாக உள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 389 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 147 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 47.04 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 46.73 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 15.81 டி.எம்.சியாக உள்ளது.
- சேலம் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு.
- இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.
குறிப்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, குப்பனூர், கூட்டாத்து ப்பட்டி, வரகம்பாடி, அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டா புரம், எடப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த மாம்பழங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். மேலும் ஆன்லைனிலும் உலகம் முழுவதும் இந்த மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
வழக்கமாக மார்ச் மாதம் மாத மத்தியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாங்காய் உற்பத்தி கடுமையாக குறைந்தது. இதனால் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாங்காய் வரத்து குறைவாக இருந்தது.
இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது சீசன் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் சேலம் கடை வீதிகளில் உள்ள கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சேலம் -பெங்களூரா, சேலம் குண்டு, அல்போன்சா, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கணப்பள்ளி , செந்தூரா, கிளிமூக்கு, குதாதத், உள்பட பல ரகங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.
சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 40 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது. இதனால் சேலம் மாநகர தெருக்களில் மாம்பழ வாசம் வீச தொடங்கி உள்ளது.
சேலம் மாநகர தெருக்கள், ஏற்காடு சாலை, செவ்வாய்ப்பேட்டை கடை வீதி, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் கடைகளிலும், தெருவோர தள்ளுவண்டிகளிலும் மாம்பழ விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் கடை வீதிகளிலும், சேலம் மாநகர தெருக்களிலும் மாம்பழ வாசம் கம, கமக்க தொடங்கி உள்ளது.
ேசலம் கடை வீதியில் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டை விட விலை சற்று அதிகமாக இருந்தாலும் கடந்த வாரத்தை விட தற்போது விலை குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த ஆண்டு இதே நாளில் 50 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருந்தது. ஆனால் இந்தாண்டு தற்போது மாம்பழ வரத்து 40 டன்னாக உள்ளது. தற்போது மாம்பழ சீசன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது, இனி வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று புறப்படும் நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர் வழியாக புனே ஜங்சன் வரை மட்டுமே இயக்கப்படும்.
- மும்பை முதல் புனே வரையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
சேலம்:
சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று புறப்படும் நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர் வழியாக புனே ஜங்சன் வரை மட்டுமே இயக்கப்படும்.
பொறியியல் பணியால் புனே முதல் மும்பை வரையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 1-ந்தேதி மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் புனே ஜங்சனில் இருந்து புறப்பட்டு சேலம் வழியாக நகார்கோவிலை சென்றடையும். இதனால் மும்பை முதல் புனே வரையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






