என் மலர்
சேலம்
- இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
- இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
சேலம்:
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீAட் தேர்வானது தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதற்காக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு தேர்வு மைய ஹால் டிக்கெட் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 499 நகரங்க ளில் நடக்கும் இத்தேர்வினை எழுத, 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை நடப்பாண்டு 1.50 லட்சம் பேர் நீட் தேர்வினை எழுதுகின்றனர். நாளை மதியம் 2 மணிக்குதொடங்கி, மாலை 5.20 மணிவரை தேர்வு நடக்கிறது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் 10,488 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். சேலம் அம்மாபேட்டை சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, ஜாகீர் அம்மாபாளையம், செந்தில் பப்ளிக் பள்ளி, அயோத்தியாபட்டினம் வித்யாமந்திர் மேல்நி லைப்பள்ளி, தேவியாக்கு றிச்சி தாகூர்பப்ளிக் பள்ளி, ஆத்தூர் பாரதியார் ஹைடெக் இன்டர்நேசனல் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 17 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் 7 மையங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 5 ஆயிரத்து 276 பேர் தேர்வு எழுத உள்ளனர். நாமக்கல் ட்ரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளியில் 668 பேரும், நேஷனல் பப்ளிக் பள்ளியில் 600 பேரும், நவோதயா அகாடமி பள்ளியில் 768 பேரும், ஸ்பெக்ட்ரம் அகா டமி பள்ளியில் 672 பேரும், ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் 1,032 பேரும், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். அக்ஷரா அகாடமியில் 432 பேரும், பாவை பொறியியல் கல்லூரியில் 1,104 பேரும் நீட் தேர்வை எழுதுகின்றனர்.
- கதவணையில் பராமரிப்பு பணி காரணமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், சேலம் ஈரோடு மாவட்டம் இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
- நீரின் விசையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
எடப்பாடி:
பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணி காரணமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், சேலம் ஈரோடு மாவட்டம் இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குகதவணையில் பராமரிப்பு பணி காரணமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், சேலம் ஈரோடு மாவட்டம் இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.ம், குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அப்போது நீரின் விசையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதற்காக, சேலம் மாவட்டம், பூலாம்பட்டி, ஈரோடு, மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டையை இணைக்கும் வகையில் கதவணை கட்டப்பட் டுள்ளது. தற்போது, கதவ ணையில் பராமரிப்பு பணி கள் தொடங்கியுள்ளதால், அணையில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டு, தண்ணீரின்றி குட்டையாக அணை காட்சியளிக்கிறது.
இதனால், பூலாம்பட்டிக்கும், நெரிஞ்சிப்பேட்டைக்கும் இடையேயோன விசைப்படகு போக்குவரத்து வரும் 20-ந் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. பூலாம்பட்டியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், எடப்பாடி நகராட்சிக்கு காவிரி ஆற்றின் ஆழமான பகுதியில் இருந்து 5 மோட்டார்கள் மூலமாக தண்ணீர் எடுக்க நடவ டிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
குடிநீர் பராமரிப்பு பணி கள் இன்று மாலைக்குள் முடித்து தண்ணீர் தேக்கி வைக்கப்படும் பின்னர், நாளை வழக்கம் போல் எடப்பாடி நகராட்சி பகுதி யில் குடிநீர் விநியோகம் செய்யப்படும், குடிநீர் விநியோகம் சீராகும் வரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- சாலைப்பணியை அவ்வப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.
தற்போது பள்ளிகள் விடுமுறை மற்றும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏற்காட்டிற்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே ராட்சத பாறைகளும் சாலையில் சரிந்து விழுந்தன.
குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
கிட்டத்தட்ட 2 ஆண்டாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுக்கு வைக்கப்பட்டிருக்கும் மணல் மூட்டைகள் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கையாக விடுத்தனர்.
மேலும் இந்த ஆண்டு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் கோரிமேடு வழியாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையை சீரமைக்க சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3 வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த 24-ந்தேதி தொடங்கின.
இதனால் இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதர இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் அயோத்தி யாப்பட்டணம்-அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பனூர் சாலை வழியாக சென்றன.
15 நாட்களுக்கும் மேலாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் . இதனிடையே சாலைப்பணியை அவ்வப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
இந்நிலையில் சாலை பணிகள் ஓரளவு முடிவுற்ற நிலையில் இன்று அதிகாலை முதல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், இலகு ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் குப்பனூர் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. முன்பு போல சேலம்-ஏற்காடு மலை பாதையில் வாகனங்கள் செல்ல தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனினும் கூடுதலாக காவலர்களை சோதனை சாவடியில் நிறுத்தி வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்க வேண்டும்.இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- நீர்வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
- நேற்று 101.94 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 102.25 அடியாக உயர்ந்தது.
மேட்டூர்:
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு, அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
நேற்று அணைக்கு விநாடிக்கு 6,712 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 6,595 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 101.94 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 102.25 அடியாக உயர்ந்தது.
- கோவையில் சர்மிளா என்ற இளம்பெண் தனியார் பஸ்சை இயக்கி கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- மகளிர் கல்லூரி பஸ்சில் பெண் ஒருவரை டிரைவராக நியமித்திருப்பது மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர்:
நவீன இந்த உலகத்தில் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். அடுப்படியில் கிடந்த நிலை மாறி, அத்துபடி என்ற நிலை உருவாகிவிட்டது. அதிலும் சிலர் தங்கள் விரும்பிய துறையில் அசாத்தியமாக சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆண்களுக்கு பெண்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் விதமாக சாலையில் ஓடும் கார் தொடங்கி ஆகாயத்தில் பறக்கும் விமானம் வரை இன்று பெண்களால் இயக்கப்பட்டு வருகிறது.
தடைகளை கடந்து சாதிக்கும் பெண்கள் சரித்திரத்தில் இடம் பிடித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சில இடங்களில் பெண்கள் ஆட்டோ ஓட்டுகிறார்கள். பஸ் ஓட்டுகிறார்கள். சமீபத்தில் கோவையில் சர்மிளா என்ற இளம்பெண் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் தனியார் பஸ்சை இயக்கி கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதுபோல் சேலத்திலும் முதல் முறையாக இளம்பெண் ஒருவர் மகளிர் கல்லூரி பஸ் டிரைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். முதல் கல்லூரி பஸ் ஓட்டுனராக திகழ்ந்து வருகிறார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கல்வி பயில வரும் மாணவிகளுக்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது நாள் வரை இந்த கல்லூரி பஸ்ஸை ஆண் டிரைவர்களே இயக்கி வந்தார்கள்.
பெண்கள் மட்டுமே படிக்கும் இந்த கல்லூரியில் தற்போது ஓமலூர் முத்து நாயகன்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் தமிழ்செல்வி (வயது 28), என்பவரை, கல்லூரி நிர்வாகம் டிரைவாக நியமித்துள்ளது. இவருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மகளிர் கல்லூரி பஸ்சில் பெண் ஒருவரை டிரைவராக நியமித்திருப்பது மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தமிழ்ச்செல்வி, கல்லூரி பஸ்சை தினமும் காலை, மாலையில் இயக்கி வருகிறார்.
இது குறித்து தமிழ்ச்செல்வி கூறியதாவது:-
எனது தந்தை மணி, லாரி ஓட்டுநராக பணியாற்றி, சொந்தமாக லாரி தொழில் செய்து வருகிறார். இதனால் எனக்கு சின்ன வயதில் இருந்தே லாரி அல்லது பஸ்சை ஓட்ட வேண்டும் எண்ணம் மனதில் ஏற்பட்டு வந்தது. இது பற்றி நான், அப்பாவிடம் தெரிவித்தேன். அவர் எனக்கு லாரியை எப்படி ஓட்ட வேண்டும் என கற்று தந்தார். இதனால் நான் லாரி ஓட்டுவதை எளிதாக கற்றுக்கொண்டேன்.
நான் கடந்த 10 ஆண்டுகளாக டிரைவர் பணியில் ஈடுபட்டு வருகிறேன். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரு மாநிலங்களின் அனைத்து பகுதிகளுக்கும் லாரியில் பல்வேறு லோடுகளை ஏற்றிச் சென்று வந்துள்ளேன். தற்பொழுது எனது 4 வயது குழந்தையை நாள்தோறும் தனது கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக உள்ளூரில் கல்லூரி பஸ் டிரைவராக பணியாற்ற வந்துள்ளேன். டிரைவர் பணிக்கு பெண் ஒருவரை நியமித்து கல்லூரி நிர்வாகம் வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதன் மூலம் எனது வெகுநாள் கனவு நிறைவேறி உள்ளது.
டிரைவர் என்பது ஒரு தொழில் தான். டிரைவர்களுக்கு உண்டான மரியாதை அனைவரும் தர வேண்டும். பெண்களுக்கு பெண்கள் தான் பாதுகாப்பு என்பதை உணர்த்தும் வகையில் மகளிர் கல்லூரி பஸ் டிரைவர் பணியினை நான் நேசித்து பணியில் சேர்ந்து உள்ளேன். பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்கலாம். மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை அனைத்து பெண்களுக்கும் உணர்த்த வேண்டும் என்பது எனது ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.
மகளிர் கல்லூரியில் பெண் ஒருவர் டிரைவர் பணியில் சேர்ந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது. அவருக்கு பாராட்டு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
- சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
- கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சேலம்:
சமூகவிரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்-க்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில துணைத்தலைவர் நல்லா கவுண்டர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரமேஷ், முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் செல்வம் மாவட்ட பொருளாளர் ஆனந்த் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
- சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை ெரயில்வே மேம்பாலத்தில் 9.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் காரும், லாரி யும் பயங்கரமாக மோதியது.
- கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த கிறிஸ்டோபருக்கு கால், உடல் துண்டானது.
கருப்பூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்டரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கிறிஸ்டோபர் (வயது 26 ). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் மற்றும் அதே பகுதி சேர்ந்த முத்து மகன் பெரிய நாயகம், (வயது 24) உள்பட மொத்தம் 5 பேர் இன்று காலையில் கிருஷ்ணகிரியில் இருந்து கோவை செல்வ தற்காக சொகுசு காரில் சேலம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
கார் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை ெரயில்வே மேம்பாலத்தில் 9.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் காரும், லாரி யும் பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த கிறிஸ்டோபருக்கு கால், உடல் துண்டானது. மேலும் வயிற்றில் இருந்து குடல் வெளிேய வந்தது. மற்றொரு வாலிபர் பெரியநாயகத்திற்கு தலை, கால், அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் காரில் இருந்த மற்றவர்களும் படுகாயம் அடைந்தனர்.
கவலைக்கிடம்
அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், போலீசார் சேர்ந்து 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கிறிஸ்டோபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து நடந்த பகுதி சேலம் -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் பஸ் பயணிகள், அலுவலகத்திற்கு செல்லும் அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தை வேடிக்கை பார்ப்பதற்காக ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி, ஓமலூர் தீய ணைப்பு நிலைய ஆய்வாளர் ( பொறுப்பு) குப்புசாமி, மற்றும் போலீசார் போக்கு வரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார்.
சேலம்:
மாநில நெடுஞ்சா லைத்துறை சார்பில் சேலம் நெத்திமேடு முதல் அன்ன தானப்பட்டி வரையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல், நெத்திமேடு முதல் கொண்டலாம்பட்டி ரவுண்டானா வரையிலும், அம்மாபேட்டை மிலிட்டரி சாலையில் பாலபாரதி பள்ளி முதல் அணைமேடு வரையிலும் மற்றும் நெய்க்காரப்பட்டி முதல் உத்தமசோழபுரம் வரையி லும் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வரு கிறது. பொன்னம்மா பேட்டை ெரயில்வே கேட் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சாலை பணிகளை சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சாலையின் நீளம், அகலம், தடிமன், அடர்த்தி, சாலை தளத்தின் சாய்மானம் மற்றும் தரத்தை ஆய்வு செய்தார். மேலும், சாய்வு தளம் மற்றும் தரத்தை ஆய்வு செய்து மழைநீர் தேங்காத வகையில் சாலைகள் அமைக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர்கள் ரா.சவுந்தர்யா, சுமதி மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் கோதை மற்றும் உதவி பொறியாளர்கள் கவின், பிருந்தா ஆகியோர் உடன் இருந்தனர்.
- சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரெயில்க ளாக இயக்கப்பட்டு வரு கின்றன.
- இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரெயில்க ளாக இயக்கப்பட்டு வரு கின்றன. இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06547) சனிக்கிழமை களில் காலை 7.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணரா ஜபுரம், பங்காருபேட்டை வழியாக காலை 11.50 மணிக்கு சேலம் வந்தடை யும். இங்கிருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர் திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் வழியாக இரவு 7 மணிக்கு வேளாங் கண்ணி சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் வேளாங் கண்ணி- பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06548) சனிக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலம் வந்த டையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலம் தெரிவித்துள்ளது.
- கொச வப்பட்டியில் சுமார் 3 ஏக்கரில் குட்டை மற்றும் சுடுகாடு உள்ளது.
- இந்த நிலையில் வருவாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பனை மரத்தை வெட்டியுள்ளனர்.
காகாபாளையம்:
சேலம் அருகே உள்ள இடங்கணசாலை நக ராட்சிக்கு உட்பட்ட கொச வப்பட்டியில் சுமார் 3 ஏக்கரில் குட்டை மற்றும் சுடுகாடு உள்ளது.
இந்த குட்டையில் மழை காலங்க ளில் தண்ணீர் தேங்கும். இந்த குட்டையின் கரை யோரத்தில் பனை மரங்கள் உள்ளது. இந்த குட்டையை யும், அருகாமையில் உள்ள சுடுகாட்டையும் பிரிக்கும் வகையில் நடு பகுதியில் ரோடு செல்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குட்டையில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டி ருந்தன. தற்போது அவற்றை அகற்றி விட்டு, அங்கு தற்போது பொது மக்கள் நடந்து செல்ல நடைமேடை, நீர்த்தேக்க குட்டை மற்றும் சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக குட்டையில் இருந்து லாரிகளில் 250 லோடு மண் வெட்டி எடுக்கப்பட்டது. மேலும் இங்கு கடந்த வாரம் சுமார் 30 ஆண்டுகள் பழ மையான இச்சி மர கிளை களை வெட்டி அகற்றி னார்கள். அதனை தொடர்ந்து, அரசு அனுமதி யின்றி கரையோரமாக நின்ற 15 ஆண்டுகள் பழமையான பனைமரத்தை வேரோடு வெட்டி சாய்த்துள்ளனர்.
மேலும் குட்டையின் கரையோரம் கட்டப்பட்டி ருந்த தானியகளத்தை இடித்து அகற்றினர். இத னால் சுற்று வட்டார மக்கள் தங்கள் தோட்டங்க ளில் விளையும் ராகி, சோளம், கம்பு, கடலை ஆகிய தானி யங்களை காய வைக்க இடம் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள சுடுகாட்டை அகற்றும் முயற்சியில் நக ராட்சியினர் ஈடுபட்டு வரு வதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு செலவில் மரக்கன்றுகள் நடவு செய்துவிட்டு, அதன் பிறகு அந்த மரக்கன்று களை, பிடிங்கி அகற்றுவது தொடர் கதையாக உள்ளது. பனை மரங்களை பாது காக்கும் வகையில் அவற்றை வெட்ட கூடாது என தமிழக அரசு ஏற்க னவே உத்தரவிட்டு இருக்கி றது. மேலும் பல்வேறு இடங்களில் பனை மர விதைகளை அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நட்டு ஊக்கவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வரு வாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பனை மரத்தை வெட்டியுள்ளனர். இது பற்றி அதே பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவர் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை என குமுறலுடன் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
- தாத–காப்–பட்டி கேட் அம்–பாள் ஏரி ரோடு பகு–தியை சேர்ந்–த–வர் விக்–னேஸ்–வ–ரன்.
- பிர–பல ரவு–டி–யான இவர் மீது அடி–தடி, கொலை முயற்சி, வழிப்–பறி, அரிசி கடத்–தல், திருட்டு உள்–பட 7-க்கும் மேற்–பட்ட வழக்–கு–கள் உள்–ளன.
சேலம்:
சேலம் அன்–ன–தா–னப்–பட்டி தாத–காப்–பட்டி கேட் அம்–பாள் ஏரி ரோடு பகு–தியை சேர்ந்–த–வர் விக்–னேஸ்–வ–ரன். இவ–ரு–டைய மகன் ரஞ்–சித் என்ற ரஞ்–சித்–கு–மார் (வயது 30). பிர–பல ரவு–டி–யான இவர் மீது அடி–தடி, கொலை முயற்சி, வழிப்–பறி, அரிசி கடத்–தல், திருட்டு உள்–பட 7-க்கும் மேற்–பட்ட வழக்–கு–கள் உள்–ளன.
இந்த நிலை–யில், கடந்த ஆண்டு அன்–ன–தா–னப்–பட்டி கிராம நிர்–வாக அலு–வ–லரை தாக்–கிய வழக்–கில் ரஞ்–சித்–கு–மாரை போலீ–சார் கைது செய்–த–னர். பின்–னர் அவர் சேலம் மத்–திய சிறை–யில் அடைக்–கப்–பட்–டார்.
பொது–மக்–க–ளுக்கு அச்–சு–றுத்–தல் ஏற்–ப–டுத்–தும் வகை–யில் தொடர்ந்து குற்–றச்–செ–யல்–களில் ரஞ்–சித்–கு–மார் ஈடு–பட்டு வந்–த–தால் அவர் மீது குண்–டர் தடுப்பு சட்–டம் பாய்ந்–தது. இத–னி–டையே, கடந்த 20 நாட்–க–ளுக்கு முன்பு ரவுடி ரஞ்–சித்–கு–மார் ஜாமீ–னில் வெளியே வந்–தார். அவர் மாசி–நா–யக்–கன்–பட்டி பகு–தி–யில் 2-வது மனைவி பிரி–யா–வு–டன் வசித்து வந்–த–தாக கூறப்–படுகிறது.
நேற்று முன்–தி–னம் காலை வீட்–டில் இருந்து வெளியே சென்–ற–வர் அதன்–பி–றகு இரவு திரும்–ப–வில்லை. இத–னால் சந்–தே–கம் அடைந்த அவ–ரு–டைய மனைவி பிரியா மற்–றும் குடும்–பத்–தி–னர் பல்–வேறு இடங்–களில் தேடி–யும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது தொடர்–பாக அம்–மாப்–பேட்டை போலீஸ் நிலை–யத்–தில் உற–வி–னர்–கள் புகார் செய்–த–னர். அதன்–பே–ரில், போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து ரஞ்–சித்–கு–மாரை தேடி வந்–த–னர்.
இந்த நிலை–யில், உடை–யாப்–பட்டி வேடி–யப்–பன் கோவில் அருகே உள்ள குடி–நீர் குழாய் திறந்து விடப்–படும் தொட்டி பகு–தி–யில் நேற்று இரவு ரஞ்–சித்–கு–மார் கழுத்து அறுக்–கப்–பட்ட நிலை–யில் பிண–மாக கிடப்–ப–தாக அம்–மாப்–பேட்டை போலீ–சா–ருக்கு தக–வல் கிடைத்–தது. அதன்–பே–ரில், போலீ–சார் சம்–பவ இடத்–திற்கு சென்று விசா–ரித்–த–போது, ரஞ்–சித்–கு–மாரை கொலை செய்த மர்ம கும்–பல் அவ–ரது உடலை பள்–ளத்–தில் வீசி சென்–றி–ருப்–பது தெரி–ய–வந்–தது. ரஞ்–சித்–கு–மா–ரின் உடலை மீட்டு பிரேத பரி–சோ–த–னைக்–காக போலீ சார் சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்–த–னர்.
விசாரணையில் ரஞ்–சித்–கு–மார் தனது முதல் மனை–வியை விட்டு பிரிந்து 2-வது மனை–வி–யான பிரி–யா–வு–டன் மாசி–நா–யக்–கன்–பட்–டி–யில் வீடு வாட–கைக்கு எடுத்து வசித்து வந்–துள்–ளார். ஆனால் அவ–ரது முதல் மனை–வி–யு–டன் நண்–பர் சுரேஷ் என்–ப–வர் நெருங்கி பழகி வந்–த–தா–க–வும், இது தொடர்–பாக அவர்–க–ளுக்–குள் தக–ராறு ஏற்–பட்டு வந்–த–தா–க–வும் கூறப்–ப–டு–கிறது. இதை–ய–டுத்து அக்–கம் பக்–கத்–தி–னர் ரஞ்–சித்–கு–மா–ரை–யும், சுரே–சை–யும் சமா–தா–னப்–படுத்தி விலக்கி விட்–டுள்–ள–னர்.
இந்த மோதல் தொடர்–பாக ரவுடி ரஞ்–சித்–கு–மார் கொலை செய்–யப்–பட்டு இருக்கலாம் என போலீ சாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், தனிப்படைகள் அமைத்து உத்தர விட்டுள்ளார். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார், கொலையாளி களின் உருவம் கண்டறிய கொலை நடந்த இடத்தின் அருகாமையில் ஏதேனும் சி.சி.டி.வி. காமிரா உள்ளதா? என பார்வை யிட்டு வருகின்ற னர். அது மிட்டுமின்றி ரஞ்சித்குமார் பயன்படுத்தி வந்த செல்போ னில் பதிவான அழைப்பு களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.இதை தவிர முதல் மனைவி மற்றும் அவரது நண்பர் சுரேஷையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் திருப்பூ ரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அங்கு சென்று முகாமிட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபடும் பட்சத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது.
- நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- இதனைக்கண்ட விக்னேஷும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதில் காதலி சுபலேகா பரிதாபமாக உயிரிழந்தார்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த தூக்கியாம்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). கட்டிடத்தொழி லாளி யான இவரும், அதே பகுதி யைச் சேர்ந்த இளம்பெண் சுபலேகா(18) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவ ருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த சுபலேகா, நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக்கண்ட விக்னேஷும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதில் காதலி சுபலேகா பரிதாபமாக உயிரிழந்தார்.
விக்னேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அருகே தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






