என் மலர்
சேலம்
- இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் முதல் ஸ்டுடியோ வரை உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
- இந்நிலையில் இந்த கடைகள் முன்புறம் சிமெண்ட் அட்டைகள் அமைத்தும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.
இளம்பிள்ளை:
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் முதல் ஸ்டுடியோ வரை உள்ள சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் இந்த கடைகள் முன்புறம் சிமெண்ட் அட்டை கள் அமைத்தும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும் ஆக்கிர மிப்பு செய்து இருந்தனர்.
இதனால் இளம்பிள்ளை யில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மணிக்கணக்கில் வாகனங்கள் நகராதபடி, நெடுந்தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் ஏற்படுகிறது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறை அதி காரிகள், இன்று இளம்பிள்ளை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி யில் தீவிரமாக ஈடுபட்டனர். மகுடஞ்சாவடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆறுமுகம் ( வயது 40). கட்டிடத் தொழிலாளியான இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தங்கியிருந்து கட்டிட பணிகளை செய்து வருகிறார்.
- மது அருந்தும் பழக்கம் உள்ள ஆறுமுகம் அவ்வப்போது தனது இருசக்கர வாகனத்தை மின்னல் வேகத்தில் ஓட்டி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மொரசபட்டி கிராமம், வெள்ளகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் மகன் ஆறுமுகம் ( வயது 40). கட்டிடத் தொழிலாளியான இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தங்கியிருந்து கட்டிட பணிகளை செய்து வருகிறார்.
மது அருந்தும் பழக்கம் உள்ள ஆறுமுகம் அவ்வப்போது தனது இருசக்கர வாகனத்தை மின்னல் வேகத்தில் ஓட்டி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மது போதையில் இருந்த ஆறுமுகம் திருச்செங்கோட்டில் இருந்து மொரசப்பட்டி பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது எடப்பாடி அடுத்த கள்ளுகடை பகுதியில் சினிமாவில் வருவதைப் போல் மின்னல் வேகத்தில் டயரில் புகை பறக்க இருசக்கர வாகனத்தை இயக்கி சாகசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஓட்டி வந்த பைக் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து தீ பிடித்து எரியத் தொடங்கியது. இருசக்கர வானத்தில் இருந்த பெட்ரோல் முழுவதும் சிந்தி தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கிய நிலையில், ஆறுமுகத்தின் மீதும் தீப்பற்றி எரிந்தது.
அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பூலாம்பட்டி போலீசார் விபத்தில் சிக்கிய ஆறுமுகத்தை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த தீக்காயம் அடைந்த ஆறுமுகம், முதல் உதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
நள்ளிரவு நேரத்தில் எடப்பாடி அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர் தீ விபத்தில் சிக்கிய நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
- சங்க முன்னாள் செயலாளர் மோகன், முன்னாள் மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- தலைமறைவான ரவிக்குமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளரிவெளி கிராமத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறைக்கு சொந்தமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த மோகன் (வயது 55) என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செயலாளராக பதவி வகித்து வந்தார். அப்போது சங்கத்தில் பயிர்கடன், நகைக்கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளில் சுமார் ரூ.3 கோடியே 15 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்தது.
இது தொடர்பாக கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மோகன் மற்றும் சங்கத்தில் பணிபுரியும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சங்க செயலாளர் மோகன், மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார், நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமார் உள்பட 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து இது பற்றிய விசாரணை சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு சங்க முன்னாள் செயலாளர் மோகன், முன்னாள் மேலாளர் மணி, கள ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமாரை கைது செய்வதற்காக உயர் போலீஸ் அதிகாரி தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் நள்ளிரவு 1.40 மணி அளவில் கள்ளப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. போலீசார் வருவதை அறிந்து முன்கூட்டியே தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து கைதான மோகன், மணி, ஆனந்தகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவான ரவிக்குமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- கோரணம்பட்டி கிராமம் தொப்பகாடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
- இன்று அதிகாலை மீனா, அவர் குடியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்க ணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணம்பட்டி கிராமம் தொப்பகாடு பகு தியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
மீனாவின் கணவர் வேலுசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்ட நிலையில் மீனா தனது குழந்தைகளுடன் கச்சுப்பள்ளி கிராமம் எட்டிகுட்டைமேடு பகுதி யில் வசித்து வந்தார்.
தாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் உதவியாளராக வேலை பார்த்து வந்த மீனா, சமீபத்தில் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கச்சுப்பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார்.
இந்த நிலையில், மகன் படிப்பிற்காக தாரமங்கலத் தில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்த மீனா, தனது மகளுடன் எட்டிக்குட்டை மேடு பகுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
மர்மசாவு
இன்று அதிகாலை மீனா, அவர் குடியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி னார். இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து, மீனா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மீனா வின் உடலை பார்த்து உறவி னர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
சந்தேகம்
பெண் குழந்தையுடன் தனியாக வீட்டில் வசித்து வந்த மீனா தூக்கில் பிண மாக தொங்கியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போலீ சார், வழக்குப்பதிவு செய்து, முதற்கட்டமாக அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்க ளிடமும், அவரது உறவி னர்களிடமும் தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் மீனா, ஏற்கனவே வேலை பார்த்து வந்த பள்ளிக்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இது பற்றி போலீசார் கூறுகையில், மீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விட பட்டாரா? என்ற உண்மை தெரிய வரும். இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை கள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
கணவனை இழந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண், மர்ம மான முறையில் உயிரிழந் துள்ள சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் நடப்போர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
- இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு ஜாமினில் வர முடியாது.
சேலம்:
ரவுடிகள், தொடர் திருட்டு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் நடப்போர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு ஜாமினில் வர முடியாது.
இந்த நிலையில், சேலம் சரகத்தில் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் லாவண்யா நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, சேலம் மாந கரில் கடந்த 6 மாதத்தில் 63 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் குட்கா, லாட்டரி, பாலியல் வழக்கு, ரேஷன் அரிசி கடத்தல் உட்பட பல்வேறு வழக்கு களில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வெங்கடேஷ் (வயது 45). இவர் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
- அப்போது காய்கறி வெட்டும் எந்திரத்தை ஆன் செய்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருணைபள்ளி உருளை தொட்டி பகுதியைச் சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 45). இவர் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இன்று காலை காய்கறி வெட்டும் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது காய்கறி வெட்டும் எந்திரத்தை ஆன் செய்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதனை பார்த்த உடன் வேலை பார்த்தவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். பின்னர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அரசு ஆஸ்பத்தி ரியில் பரிசோதித்த டாக்டர் கள் , அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த உறவினர்கள் சேலம் விரைந்துள்ளனர்.
இந்த சம்பவம் ஓட்டல் ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து சேலம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அங்க முத்து (வயது 80). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி மேனாவுடன் வசித்து வருகிறார்.
- அதிகாலை 2 மணிக்கு புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.92 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்க வல்லி அருகே உள்ள நடுவ லூரை சேர்ந்தவர் அங்க முத்து (வயது 80). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி மேனாவுடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் கடந்த 1-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.92 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்ற னர். இதுகுறித்து கெங்க வல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் ஆத்தூர் அருகே உள்ள அம்மா பா ளையத்தை சேர்ந்த வெங்க டேஷ் (29), கொள்ளை யடித்தது தெரிய வந்தது. அவரிடம் நகைகளை மீட்டு தொடர்ந்து விசாரித்தனர்.
இதில், அவர் மீது சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், புதுக் கோட்டை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட் டங்களில் 65 திருட்டு வழக் குகள் இருப்பது தெரியவந் தது. இதையடுத்து வெங்க டேசை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) கிருஷ்ணவேணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பஞ்சாலை தொழிலுக்கு 1948-ம் ஆண்டு குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி, குறைந்தபட்ச ஊதிய நிர்ண யம் வகையில் கோவை கூடு தல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் குழு அமைக் கப்பட்டுள்ளது. இக்குழுவில் தற்சார்பு உறுப் பினர்களாக சென்னை இணை இயக்குனர் (பஞ்சாலை), திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இணை இயக்குனர், கோவை புள்ளியி யல் உதவி இயக்கு னர் ஆகி யோரும், தொழிலா ளர் தரப்பு பிரதிநிதிகளாக பலரும் இடம் பெற்றுள்ள னர். இக்குழுவானது நாளை (செவ்வாய்கிழமை) சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் உள்ள பஞ்சாலை தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை நேரடி யாக சந்தித்து விபரங்கள் பெற முடிவு செய்துள்ளனர். இந்த குழுவின் கருத்து கேட்பு கூட்டம் சேலம் கோரிமேடு ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவ லக வளாகத்தில் அமைந் துள்ள தொழிலாளர் இணை ஆணையர் அலுவல கத்தில் நடைபெறுகிறது. எனவே, இக்கூட்டத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர், வேலை யளிப்போர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக் களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆத்தூர்- சின்னசேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
- இது பற்றி ரெயில் நிலைய அதிகாரி கொடுத்த சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர்- சின்னசேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது பற்றி ரெயில் நிலைய அதிகாரி கொடுத்த சேலம் ரெயில்வே போலீஸ் நிலை யத்துக்கு தகவல் கொடுத்தார்.
இதை தொடர்ந்து போலீ சார் விரைந்து சென்று இறந்த நபருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் பெயர்? மற்றும் எந்த ஊரை சேர்ந்த வர்? என்பது குறித்து தெரி யவில்லை. இதனால், அவரது உடலை உறவினர் களிடமும் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது.
இறந்த நபர் நீலம் நிற ஜீன்ஸ் பேண்ட், ரோஸ் கலர் முழுகை சட்டை, காபி கலர் ஜட்டி அணிந்திருந்தார். அவரது இடது, வலது நெஞ்சு பகுதியில் ஒரு கருப்பு மச்சம் காணப்படு கிறது என போலீசார் தெரிவித்தனர்.
அவரை பற்றி அறிந்த வர்கள் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- தமிழ்நாடு வனத்துறை, ஜப்பான் இன்டர்நேசனல் கோப்ப ரேட்டிவ் ஏஜென்சி இணைந்து”நாட்டு வைத்தி யர்கள் கருத்தரங்கம்“ கலெக்டர் கார்மேகம் தலை மையில் ஆத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் நடை பெற்றது.
- தமிழ்நாட்டின் இயற்கை யுடன் இணக்கமான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பது கருத்தரங்கின் நோக்கமாகும்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் வனக்கோட்டத்தின் சார்பில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வனத்துறை, ஜப்பான் இன்டர்நேசனல் கோப்ப ரேட்டிவ் ஏஜென்சி இணைந்து"நாட்டு வைத்தி யர்கள் கருத்தரங்கம்" கலெக்டர் கார்மேகம் தலை மையில் ஆத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் நடை பெற்றது.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விட மேம்பாடு, காடு வளர்ப்பு மற்றும் நிறுவன திறன் மேம்பாடு ஆகி யவற்றின் மூலம் பல்லுயிர்ப் பாதுகாப்பை மேம்படுத்து வது, அதன். மூலம் தமிழ்நாட்டின் இயற்கை யுடன் இணக்கமான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பது கருத்தரங்கின் நோக்கமாகும்.
கருத்தரங்கில் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட பாரம்பரிய வைத்தியர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்ற னர். இதில் ஆத்தூர் மாவட்ட வண அலுவலர் சுதாகர் உள்ளிட்ட தொடர்பு டைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்துள்ளதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 400 கனஅடியாக தண்ணீர் வருகிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று 104 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 152 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து வெகுவாக சரிந்த நிலையில் தொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஜூன் 12-ந் தேதி 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று காலை 81.32 அடியாக சரிந்தது. கடந்த 28 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 22 அடி சரிந்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் சரிந்து வருகிறது.
அதேபோல் அணையின் நீர் இருப்பும் நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி குறைந்து வருகிறது. நேற்று மேட்டூர் அணையின் நீர் இருப்பு 44.32 டி.எம்.சி மட்டுமே இருந்தது.
மேட்டூர் அணையில் உள்ள மீன் வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் திட்டங்களுக்காகவும் அணையில் 9.5 டி.எம்.சி தண்ணீர் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள தண்ணீர் 35 நாள் பாசனத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
அதன் பிறகு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில், காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைபெய்தாலும் அங்குள்ள அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- 259 தட்டுகளில் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
- லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன.
சேலம் :
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வகுமார்-ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் அர்ச்சிதாவின் மஞ்சள் நீராட்டு விழா நேற்று குஞ்சாண்டியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அர்ச்சிதாவின் தாய் மாமனான அருண்பிரசாத் மேச்சேரி அருகே உள்ள மூர்த்திப்பட்டியில் இருந்து சீர்வரிசைகளை கன்டெய்னர் லாரியில் ஊர்வலமாக கொண்டு வந்தார்.
லாரியில் பழம் வகைகள், பூ வகைகள், தேங்காய், வாழைப்பழம் உள்பட பல்வேறு சீர்வரிசைகளை 259 தட்டுகளில் வைத்து லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன. அதிலும் சீர்வரிசைகளை எடுத்து ஊர்வலமாக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் திருமண மண்டபத்திற்கு சுமார் 2½ மணி நேரத்தில் வந்து சேர்ந்தனர். இந்த ஊர்வலத்தின் போது செண்டை மேளம் முழங்க பட்டாசுகள் வெடித்து சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. மேலும் 19 கார்கள், 75 மோட்டார் சைக்கிள்களில் குஞ்சாண்டியூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்து சீர்வரிசைகளை வழங்கினார்.
தாய் மாமன் அருண்பிரசாத்தின் செயல்பாட்டை சதாசிவம் எம்.எல்.ஏ. நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.






