search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adolescent Sacrifice"

    • நேற்று தனது இருசக்கர வாகனத்தில் முத்துநாயக்கன்பட்டி சாலையில் இருந்து நல்லா கவுண்டம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு பெரிய பச்சையாக கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளின் சைடு ஸ்டேண்டை சரியாக எடுக்காமல் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நல்லகவுண்டம்பட்டி 3-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஜீவானந்தம் (32), இவருக்கு திருமணமாதாக நிலையில் பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.

    ஸ்டேண்டை எடுக்காமல்...

    இந்த நிலையில் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் முத்துநாயக்கன்பட்டி சாலையில் இருந்து நல்லா கவுண்டம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு பெரிய பச்சையாக கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளின் சைடு ஸ்டேண்டை சரியாக எடுக்காமல் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. சைடு ஸ்டேண்ட் கீழே உரசியதால் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடி பட்டு உயிருக்கு போராடினார்.

    பரிதாப சாவு

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பிரபாத் (37). விவசாயி. இவரது மனைவி பவானியில் உள்ள அவரது தந்தை வீட்டில் உள்ளார்.
    • மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பிரபாத் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.

    கரூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் பிரபாத் (37). விவசாயி. இவரது மனைவி பவானியில் உள்ள அவரது தந்தை வீட்டில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக பிரபாத் தனது மோட்டார்சைக்கிளில் கரூரில் இருந்து திருச்செங்கோடு வழியாக செல்வதற்காக கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையம் செல்லும் பிரிவு சாலை பகுதியில் உள்ள மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பிரபாத் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் நிலைத்தடுமாறி பிரபாத் மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் பிரபாத்தை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரபாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜா (27). இவர் நேற்று தனது சித்தப்பா வயலில் உள்ள பயிருக்கு மருந்து அடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்றார்.
    • நிலை தடுமாறிய அவர் கிணற்றில் விழுந்து விட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோட்டை காடு பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ராஜா (27). இவர் நேற்று தனது சித்தப்பா வயலில் உள்ள பயிருக்கு மருந்து அடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது நிலை தடுமாறிய அவர் கிணற்றில் விழுந்து விட்டார். வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அங்கு சென்று பார்த்த போது அவரது செருப்பு மட்டும் கிணற்றின் மேல் பகுதியில் கிடந்தது. பின்னர் கிணற்றுக்குள் பார்த்த போது ராஜா தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டனர்.இதற்கிடையேஅங்கு வந்த போலீசாரும் உறவினர்களும் இணைந்து ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்ககாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது சகோதரர் கந்தமணி, கொடுத்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முஜிபுர் ரஹ்மான் (வயது 28). இவர் மல்லமுப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.
    • ஒரு வளைவில் ஆட்டோவை திருப்பும் போது எதிர்பாராத விதமாக முஜிபுர் ரஹ்மான் தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஜாகிர் பெரியம்மா பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது நவாப் ஜான். இவரது மகன் முஜிபுர் ரஹ்மான் (வயது 28). இவர் மல்லமுப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ஜாகிர் சின்னம்மா பாளையம் அருகே உள்ள கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஒரு வளைவில் ஆட்டோவை திருப்பும் போது எதிர்பாராத விதமாக முஜிபுர் ரஹ்மான் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகார் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆத்தூர்- சின்னசேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
    • இது பற்றி ரெயில் நிலைய அதிகாரி கொடுத்த சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர்- சின்னசேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது பற்றி ரெயில் நிலைய அதிகாரி கொடுத்த சேலம் ரெயில்வே போலீஸ் நிலை யத்துக்கு தகவல் கொடுத்தார்.

    இதை தொடர்ந்து போலீ சார் விரைந்து சென்று இறந்த நபருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் பெயர்? மற்றும் எந்த ஊரை சேர்ந்த வர்? என்பது குறித்து தெரி யவில்லை. இதனால், அவரது உடலை உறவினர் களிடமும் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளது.

    இறந்த நபர் நீலம் நிற ஜீன்ஸ் பேண்ட், ரோஸ் கலர் முழுகை சட்டை, காபி கலர் ஜட்டி அணிந்திருந்தார். அவரது இடது, வலது நெஞ்சு பகுதியில் ஒரு கருப்பு மச்சம் காணப்படு கிறது என போலீசார் தெரிவித்தனர்.

    அவரை பற்றி அறிந்த வர்கள் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சேலத்தில் இருந்து வாழப்பாடி வழியாக நேற்று இரவு விருதாச்சலம் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
    • காய்கறி விற்பனை டெம்போ டிரைவர் தினேஷ்குமார் (வயது 23) என்பவர், ரெயில் பாதையை கடக்க முயன்றார்.

    வாழப்பாடி:

    சேலத்தில் இருந்து வாழப்பாடி வழியாக நேற்று இரவு விருதாச்சலம் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த காய்கறி விற்பனை டெம்போ டிரை வர் தினேஷ்குமார் (வயது 23) என்பவர், ரெயில் பாதையை கடக்க முயன்றார்.

    இதில் ரெயில் தினேஷ்கு மார் மீது மோதியதில், அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சேலம் ரெயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலி பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்- களங்காணி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவா ளத்தில் 30 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலி பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்தவர் வெள்ளை நிற அரைக்கை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் இறந்தி ருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    இது தொடர் பாக சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
    • சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் பலியான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பட்டுத்துறை சேலம்- சென்னை-விருதாச்சலம் ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் பலியான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அந்த நபர் பட்டுத்துறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் (36) என்பதும் இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு செல்வதாக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.

    இதனை அடுத்து உயிரிழந்த சுந்தர்ராஜன் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம்- சென்னை-விருதாச்சலம் ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி கிடந்தது.
    • ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.

    வாலிபர்

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பட்டுத்துறை சேலம்- சென்னை-விருதாச்சலம் ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் பலியான நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அந்த நபர் பட்டுத்துறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் (36) என்பதும் இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு செல்வதாக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது.

    இதனை அடுத்து உயிரிழந்த சுந்தர்ராஜன் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • லோகேஷ் (வயது 26). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
    • 3 நாட்கள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திருச்செங்கோட்டிற்கு சென்னையில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வந்தார்.

    ஆத்தூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மகன் லோகேஷ் (வயது 26). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு மதுமிதா என்ற மனைவியும் தர்ஷன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    இவர் 3 நாட்கள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திருச்செங்கோட்டிற்கு சென்னையில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு விடுமுறை முடிந்த தால் இன்று அதிகாலை தனது மோட்டார்சைக்கிளில் திருச்செங்கோட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளார்.

    ஆத்தூர் அருகே ராசிபுரம் -ஆத்தூர் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு ெரயில்வே மேம்பாலம் பணி நடை பெறுகிறது. மேம்பாலம் அமைப்பதற்காக அங்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் லோகேஷ் நிலைதடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • படுகாயம் அடைந்த பெருமாள், முருகன் ஆகியோா் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
    • கருப்பசாமி மகன் ரமேஷ் பூபதி (27),பழனி மகன் முருகன் (45) ஆகியோா் உதவியுடன் சீரமைத்துக் கொண்டிருந்தாா்.

    ஊத்துக்குளி:

    செங்கப்பள்ளி சென்னிமலைபாளையம் புதுக்காலனியைச் சோ்ந்தவா் பெருமாள் (வயது 52), கேபிள் ஆபரேட்டா். அதே பகுதியில் சாய்ந்த நிலையில் கேபிள் கம்பம் இருந்துள்ளது. அதை அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ரமேஷ் பூபதி (27),பழனி மகன் முருகன் (45) ஆகியோா் உதவியுடன் சீரமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக கேபிள் கம்பம் மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3பேரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் ரமேஷ் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த பெருமாள், முருகன் ஆகியோா் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

    சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

    • சேலம் சின்ன கொல்லப்பட்டி காந்தி தெரு பகுதி சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்தி.
    • மாசி நாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே சென்றபோது பின்னால் வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் சின்ன கொல்லப்பட்டி காந்தி தெரு பகுதி சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கார்த்தி (வயது 21). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் இவரது நண்பர் அழகாபுரம் திருமூலர் தெரு பகுதியைச் சேர்ந்த வேலு மகன் தினகரன்(27) என்பவருடன் சேலம் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.

    மாசி நாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே சென்றபோது பின்னால் வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கார்த்தி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தினகரன் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் தினகரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்த தகவலின் பெயரில் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த கார்த்தியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×