என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
30 அடி பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி
Byமாலை மலர்16 Jan 2023 9:21 AM GMT
- நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து சங்ககிரிக்கு சென்று கொண்டிருந்தார்.
- கந்தம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்றபோது விஜயராகவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் அரிசி பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் விஜயராகவன் (வயது 29). டிரைவரான இவர், நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து சங்ககிரிக்கு சென்று கொண்டிருந்தார்.
கந்தம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்றபோது விஜயராகவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த விஜயராகவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொண்டலாம்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X