search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கல்லூரி பேருந்து மோதி வாலிபர் பலி
    X

    தனியார் கல்லூரி பேருந்து மோதி வாலிபர் பலி

    • மஸ்தான் (42 ) என்பவரும் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்றார்.
    • மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது நாமக்கல்லில் இருந்த வந்த தனியார் கல்லூரி பேருந்து அவர்கள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் அன்னதா னப்பட்டி தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யூசுப்கான். இவரது மகன் அப்துல் கான் என்ற நிசார் (வயது 35). இவரும் இவரது நண்பர் லைன் மேடு பகுதியை சேர்ந்த மஸ்தான் (42 ) என்பவரும் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் உள்ள ஒரு தர்காவிற்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை நிசார் ஒட்டினார். பின்னால் மஸ்தான் அமர்ந்து இருந்தார்.

    பின்னர் அவர்கள் வீடு திரும்பினார். அப்போது சன்னியாசிகுண்டு அருகே மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது நாமக்கல்லில் இருந்த வந்த தனியார் கல்லூரி பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அப்துல் கான் என்ற நிசார் இன்று காலை பரிதாபமாக இருந்தார். மஸ்தானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×