search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X

    கோப்புபடம். 

    ஊத்துக்குளி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    • படுகாயம் அடைந்த பெருமாள், முருகன் ஆகியோா் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
    • கருப்பசாமி மகன் ரமேஷ் பூபதி (27),பழனி மகன் முருகன் (45) ஆகியோா் உதவியுடன் சீரமைத்துக் கொண்டிருந்தாா்.

    ஊத்துக்குளி:

    செங்கப்பள்ளி சென்னிமலைபாளையம் புதுக்காலனியைச் சோ்ந்தவா் பெருமாள் (வயது 52), கேபிள் ஆபரேட்டா். அதே பகுதியில் சாய்ந்த நிலையில் கேபிள் கம்பம் இருந்துள்ளது. அதை அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ரமேஷ் பூபதி (27),பழனி மகன் முருகன் (45) ஆகியோா் உதவியுடன் சீரமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக கேபிள் கம்பம் மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3பேரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் ரமேஷ் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த பெருமாள், முருகன் ஆகியோா் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

    சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

    Next Story
    ×