என் மலர்tooltip icon

    சேலம்

    • ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் மேட்டூர் சின்ன பார்க் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூகிளை செயலாளர் கருப்பண்ணன் தலைமை வகித்தார்.

    நங்கவள்ளி:

    சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் மேட்டூர் சின்ன பார்க் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூகிளை செயலாளர் கருப்பண்ணன் தலைமை வகித்தார்.

    உள்ளாட்சித் துறை ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் 152, 139, 115, 10 ஆகிய அரசாணைகளை திரும்ப பெற வேண்டும், உள்ளாச்சி பணிகளில் காண்ட்ராக்ட் முறையை கைவிட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,

    ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
    • நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நங்கவள்ளி:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    நீர்வரத்து வினாடிக்கு குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 161 கன அடியாக இருந்தது. இன்று இது 107 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நேற்று 79.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 78.51அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 40.48 டி.எம்.சி.யாக உள்ளது. ஒரு மாதத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 24.84 அடி சரிந்துள்ளது.

    வரும் காலங்களில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதால், பருவமழையை எதிர்பார்த்து டெல்டா விவசாயிகள் காத்திருக்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேரளா, கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 19 அடி உயர்ந்தது.

    அதேபோன்று, நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது, நீர் வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

    • சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
    • விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    சேலம்:

    தமிழக கவர்னர் மாளிகை சார்பில் சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு 2024 குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் பாராட்டு சான்று மற்றும் ரொக்கம் பரிசு வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நிறுவனம் மற்றும் 3 தனி நபர் தேர்வு செய்யப்படுவர். நிறுவனத்துக்கு விருதுடன் ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தனி நபருக்கு விருதுடன் 2 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    தனி நபர்கள், அரசு சாரா நிறுவனங்கள், மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு செயலர் அல்லது அதற்கு கீழ் உள்ள அதிகாரி, மத்திய அரசு இணை செயலர் அல்லது அதற்கு மேல் நிலையில் உள்ள அதிகாரி, அதே நிலையில் ஓய்வு பெற்றவர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மாவட்ட கலெக்டர்கள் பரிந்துரைக்கலாம்.

    விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பப் படி வத்தை வருகிற 31-ந்தே திக்குள் கவர்னரின் துணை செயலர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், கவர்னர் செய லகம் சென்னை -600022 என்ற முக வரிக்கு அனு ப்ப வேண்டும்.

    • வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 2023-2024 ம் ஆண்டில் தேர்ந்தெ டுக்கப்பட்ட 74 கிராம பஞ்சாயத்துக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-2022- ம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2023-2024 ம் ஆண்டில் தேர்ந்தெ டுக்கப்பட்ட 74 கிராம பஞ்சாயத்துக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்ப ட்டு வருகிறது.

    வேளாண்மை – உழவர் நலத்துறையில் பல்வேறு நல உதவி திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் பயன் பெறு வதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மைத் துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப் பலன்களை பெறுவதற்காகவும், உழவன் செயலி என்ற செயலியினை துறை ஏற்படுத்தியுள்ளது.

    விவசாயிகள் உழவன் செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு துறையின் திட்டப் பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர். அனைத்து விவசாயிகளும் தங்கள் செல்சிபோனில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப்பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் முன்பதிவு செய்வதனால் துறையில் வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும் திட்டப் பலன்களை உரிய காலத்தில் பெற்றுப் பயனடையலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • 10,178 குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது.
    • இதற்கான போட்டி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி நடத்தப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு துறை களில் காலியாக உள்ள 10,178 குரூப்-4 பணியி டங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது. இதற்கான போட்டி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி நடத்தப்பட்டது.

    சேலம், நாமக்கல்

    இந்த தேர்வை சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ் ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பலர் எழுதினர். குறிப்பாக தமிழ்நாடு முழுவ தும் பல லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இதையடுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யுமாறு டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

    தற்போது, சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்க ளுக்கு தரவரிசை அடிப்ப டையில் பணி நியமன கவுன்சிலிங் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.

    20-ந்தேதி தொடங்குகிறது

    கவுன்சிலிங்குக்கு தேர்வு செய்யப்பட்ட 8,500 பேரின் பதிவெண் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணை யதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது. கவுன்சிலிங் வரு கிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடை பெற உள்ளது.
    • மொத்தம் உள்ள 13000-க்கும் மேற்பட்ட துணை மருத்துவ இடங்களுக்கு 66,696 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரி களில் உள்ள பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடை பெற உள்ளது. மொத்தம் உள்ள 13000-க்கும் மேற்பட்ட துணை மருத்துவ இடங்க ளுக்கு 66,696 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம், நாமக்கல்

    இதில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இருந்து மாணவ- மாணவிகள் பலர் விண்ணப்பித்துள்ள னர். விண்ணப்பங்கள் அனைத்தும் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தர வரிசை பட்டியல் வெளி யிட்டு, விரைவில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி இயக்க கம் முடிவு செய்துள்ளது.

    தரவரிசை பட்டியல்

    மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதி காரிகள் கூறுகையில், எம்.பி.பி.எஸ்- பி.டி.எஸ் படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வருகிற 16-ந்தேதி வெளியிடப்பட்டு, அடுத்த நாள் முதல் கவுன்சிலிங் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும் துணை மருத்துவ படிப்பு களுக்கான தரவரிசை பட்டியல் விரைவில் வெளி யிடுவதற்கான நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

    • கொரோனா தொற்று தொடங்கியதால் பயோமெட்ரி எந்திரம் மூலம் கொரோனா பரவும் என்பதால் பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.
    • இந்த நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை, அனைத்து வகை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவை பிறப்பித்துள் ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளி லும் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

    2020-ம் ஆண்டு மார்ச் இறுதியில், கொரோனா தொற்று தொடங்கியதால் பயோமெட்ரி எந்திரம் மூலம் கொரோனா பரவும் என்பதால் பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.

    இந்த நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை, அனைத்து வகை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவை பிறப்பித்துள் ளது. . அதில் 3½ வருடங்க ளுக்கு முன்னர் பள்ளி களுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் எந்திரங்கள் எத்தனை? அதில் எத்தனை இயங்குகின்றன? எத்தனை இயங்கவில்லை? என்ற விவரத்தை அவசரமாக கேட்டுள்ளது.

    கேட்ட சில மணி நேரங்க ளிலே பயோமெட்ரிக் எந்திரங்களை அந்தந்த கல்வி அலுவலர்கள் பெற்று மாவட்ட அலுவலகங்களில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக முழு வதும் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப் பட்டதால் தற்போது பள்ளி களில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இதன் மூலம் ஆசிரி யர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதை சென்னையில் இருந்தபடி கண்காணிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் தீவிரமடைந்துள்ளது.
    • இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.

    சேலம்:

    தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசுவதுடன், மழை பெய்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று மாலையில் மேட்டூர், காடையம்பட்டி, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், ஓமலூர், ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    இதில் மேட்டூரில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாநகரத்தில் கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மா பேட்டை, புதிய பஸ் நிலை யம், 5 ரோடு பகுதிகளில் மழை பெய்தது. இதில் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- மேட்டூர்-34, காடையாம்பட்டி-9, சேலம் - 8.7, பெத்தநாயக்கன் பாளையம் - 5, ஓமலூர்- 4.6, ஆத்தூர்- 4 ஏற்காடு - 4, கெங்கவல்லி - 2, எடப்பாடி - 1, சங்ககிரி - 12 என சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 73.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இன்று கனமழை பெய்யும்

    இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடல் பகுதி களில் மேலடுக்கில் வளி மண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகம் முழுவதும் மேலும் மழை தீவிரமடைந்துள்ளது.

    இதையொட்டி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்க

    செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • பொதுமக்க ளுக்கு ரேசன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
    • அதன்படி சேலம்‌ மாநகராட்சிக்கு உட்பட்ட 14 ரேசன் கடைகளில்‌ முதற் கட்டமாக மலிவு விலையில்‌ தக்காளி விற்கப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் தக்காளி விலை அதிகரித்து உள்ளதால் பொதுமக்க ளுக்கு ரேசன் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14 ரேசன் கடைகளில் முதற் கட்டமாக மலிவு விலையில் தக்காளி விற்கப்படுகிறது.

    சேலம் மாநகராட்சி கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனையை சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், மத்திய மாவட்ட தி.மு.க. செய லாளருமான ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். பின் னர் அவர் கூறியதாவது:-

    தக்காளி உள்ளிட்ட காய் கறிகள் மற்றும் அத்தி யாவ சிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மேற் கொண்டு வருகிறார். குறிப்பாக கூட்டு றவு பல்பொருள் அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனை செய்தி டும் திட்டம் விரிவுப்படுத்தப் படும் என தெரிவித்திருந் தார்கள். சேலம் மாநக ராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், டாக்டர்.சுப்பராயன் சாலை, சுப்பரமணிய நகர், பிடாரி அம்மன் கோவில் வீதி, புது திருச்சி கிளை சாலை, தாதம்பட்டி, திருவாக்கவுண் டனூர் , சீரங்கப்பாளையம், தேவாங்கபுரம், சாமிநாத புரம், ஜவகர் மில் காலனி, ஸ்வர ணபுரி மற்றும் மெய்யனூர் ஆகிய இடங்களில் 14 ரேசன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை தொடங்கப் பட்டுள்ளது.

    கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்று தமிழ்நாடு அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள உழவர் சந்தைகளில் காய் கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேளாண் துறை அலுவ லர்கள் தனிகவனம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் நுகர்வோர்க ளும் விவசாயி களும் பயன் பெறும் வகை யில் காய்கறி களை அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட் களை பதுக்கல் செய்வோர் மீது அத்தியாவசிய பண்டங் கள் சட்டத்தின் கீழ் உரிய நட வடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்படுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தார். மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக் குமார் உள்ளிட்ட தொடர்பு டைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெங்களூரில் இருந்து சேலம் வழியே வேளாங் கண்ணிக்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
    • இந்த ெரயில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    பெங்களூரில் இருந்து சேலம் வழியே வேளாங் கண்ணிக்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ெரயில் இரவு 7 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

    மறு மார்க்கத்தில் நள்ளி ரவு 12.30 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் சென்றடைகிறது.

    கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இந்த ெரயில் நின்று செல்லும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • தேசிய தொழுநோய் திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டார அளவிலான தொழுநோய் கண்டறிதல் முகாம் வருகிற 17-ந் தேதி முதல் 15 நாட்கள் நடைபெறுகிறது.
    • வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவ லகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    தேசிய தொழுநோய் திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டார அளவிலான தொழுநோய் கண்டறிதல் முகாம் வருகிற 17-ந் தேதி முதல் 15 நாட்கள் நடைபெறு கிறது. இந்த முகாமில் களப்பணியாளர்களாக பங்கேற்கும் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு, பேளூர் வட்டார சுகாதார நிலையத்தின் வாயிலாக தொழுநோய் கண்டறியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவ லகத்தில் நடைபெற்ற முகா மிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி வரவேற்றார். மருத்துவமல்லா வட்டார மேற்பாற்வையாளர் சரவணன் தொழுநோய் அறிகுறிகள், கண்டறிதல்கள், முகாமிற்கான அறிக்கைகள் தயாரித்தல், வீடுவீடாக சென்று தொழுநோய் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து தல் மற்றும் நோயை கண்டறி யும் முறை குறித்தும் செயல்விளக்க பயிற்சி அளித்தார்.

    சேலம் தூயமரியன்னை மருத்துவமனை தொழு நோய் பிரிவு ஒருங்கி ணைப்பாளர் ஆண்டனி, தொழுநோய் பாதிப்புகள் மற்றும் அரசு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார். இந்த பயிற்சி முகாமில், வாழப்பாடி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முடி வில் சுகாதார ஆய்வாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

    • வாழப்பாடி பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு டி.எஸ்.பி. ஹரி சங்கரி உத்தரவிட்டார்.
    • இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு டி.எஸ்.பி. ஹரி சங்கரி உத்தரவிட்டார். இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாழப்பாடி அடுத்த மலை யாளப்பட்டி கிராமத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் சாரா யத்தை போலீசார் பறிமுதல் செய்த னர். இதை விற்பனை செய்வ தற்காக பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த தொழி லாளி நாச்சி (வயது 49) என்ப வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×