என் மலர்tooltip icon

    சேலம்

    • மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
    • மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கட்சியாக இருப்பது அ.தி.மு.க. மட்டுமே.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் 2,025 பேர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வேல் வழங்கினர். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    * தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற முதல்வரின் கூற்று பொய்யாகும்.

    * முதலமைச்சரின் எண்ணம் நடக்காது என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி.

    * அ.தி.மு.க. வலுப்பெற்றுள்ளது, அ.தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

    * தமிழகத்தில் மன்னராட்சி மீண்டும் அமைவதற்கு நாம் துணை நிற்க கூடாது.

    * வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தலாக இருக்க வேண்டும்.

    * எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களை தங்களது குழந்தைகளாக பார்த்தார்கள்.



    * மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

    * மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் கட்சியாக இருப்பது அ.தி.மு.க. மட்டுமே.

    * அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்பதவிக்கு வரக்கூடாது.

    * அ.தி.மு.க. என்பது தொண்டர்களுக்கு சொந்தமான கட்சி. இந்த நிலை எந்த கட்சியிலும் இல்லை.

    * 234 தொகுதிகளுக்கும் திட்டங்களை செயல்படுத்திய கட்சி அ.தி.மு.க.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கியது தி.மு.க.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கால்நடை பூங்கா திட்டத்தை முடக்கினர்.

    * ஏழைகளுக்காக கொடுக்கப்படும் திட்டத்தில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி?

    * குடிமராமத்து திட்டத்தை கூட கைவிட்டு விட்டனர்.

    * மக்களுடைய வரிப்பணத்தை தான் மக்களுக்கு கொடுக்கின்றனர்.

    * அ.தி.மு.க. போராடும் என தெரிவித்த பின்னரே மகளிர் உரிமை தொகையை வழங்கினர் என்றார்.

    • வீட்டின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
    • 6 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். மாணவ, மாணவிகளை தினமும் பள்ளிக்கு சொந்தமான வேன், பஸ் மூலம் அழைத்து வந்து செல்கிறார்கள்.

    இன்று காலையும் வழக்கம் போல் பள்ளி வேன் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள களரம்பட்டி பகுதிக்கு சென்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்தது. அப்போது அந்த வேனில் 16 குழந்தைகள் இருந்தனர்.

    வேனை டிரைவர் சிவபெருமாள் என்பவர் ஓட்டி வந்தார். வேன் களரம்பட்டி சாலையில் வந்து கொண்டு இருந்தது.


    அப்போது கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் ரோட்டோரம் இருந்த ஒரு வீட்டின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் வேனில் இருந்த 16 மாணவ, மாணவிகளும் படுகாயம் அடைந்து அலறினர்.

    இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வேனில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 6 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு மல்லியகரை போலீசார் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். பின்னர் போலீசார் ஜே.சி.பி. வாகனம் மூலம் விபத்தில் சிக்கிய பள்ளி வேனை மீட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை ந்டத்தி வருகிறார்கள்.

    • மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • தற்போது அணையில் 77.82 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே நேற்று தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 252 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 413 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டமும் 109.59 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 77.82 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினம் குறித்து விதிகளை மீறி தெரிவித்து வருவதாக புகார்கள் வந்தது.
    • 2 ஆஸ்பத்திரிகளையும் இன்று மூடாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே பசுபதி ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த ஸ்கேன் சென்டரில் கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினம் குறித்து விதிகளை மீறி தெரிவித்து வருவதாக புகார்கள் வந்தது.

    கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 26-ந் தேதி அந்த ஸ்கேன் சென்டரில் ஆய்வு செய்தனர். அப்போது ஆச்சங்குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய நர்சு கலைமணி ஆகிய 2 பேரும் இந்த கிளினிக்கை நடத்தி வந்ததை உறுதி செய்தனர்.

    மேலும் பல ஆண்டுகளாக ரகசியமாக பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என்று கண்டறிந்து ஸ்கேன் செய்ததும் அதற்கு கட்டணமாக ரூ. 15 ஆயிரம் வரை இடைத்தரர்கள் மூலம் பெற்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அந்த ஸ்கேன் பரிசோதனை மையத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை கருவிகளை பறிமுதல் செய்த மருத்துவ குழுவினர் அந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக பெண் டாக்டர் முத்தமிழ், தெடாவூரை சேர்ந்த நர்சு கலைமணி, சேலத்தை சேர்ந்த நர்சு அம்பிகா, ஆத்தூர் பகுதியை சேர்ந்த நர்சுகள் வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலை செல்வி, மகேஸ்வரி ஆகிய 9 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பசுபதி ஸ்கேன் சென்டரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதனை கலைக்க சேலத்தில் உள்ள 3 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பியதும் சுகாதாரத்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட இணை இயக்குனர் நந்தினி தலைமையில் விதிமுறையை மீறி செயல்பட்ட சேலம் டவுன் மேட்டுத்தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பொன்னம்மா ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பெரிய புதூரில் உள்ள ஒரு கிளினிக் ஆகிய 3 இடங்களிலும் அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது அந்த மருத்துவமனைகளில் விதிமுறையை மீறி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. அந்த மருத்துவமனைகளில் கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்களை எடுத்து சென்று அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்தனர். அதில் இதுவரை எத்தனை பெண்களுக்கு விதிமுறைகளை மீறி கருக்கலைப்பு செய்தனர் என்பது தொடர்பாக ஆய்வு செய்தபோது 3 ஆஸ்பத்திரிகளிலும் 100-க்கும் மேற்பட்டோருக்கு விதிமுறைகளை மீறி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சேலம் டவுன் மேட்டுத்தெரு மற்றும் பொன்னம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளை மூடவும், பெரிய புதூரில் உள்ள கிளினிக் அனுமதியில்லாமல் செயல்பட்டதால் அது குறித்து விளக்கம் அளிக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து 2 ஆஸ்பத்திரிகளையும் இன்று மூடாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை கண்டு கொள்ளாத ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தொடர்ந்து ஆஸ்பத்திரியை திறந்து வைத்து சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர், பனிப்பொழிவு நிலவியது.
    • கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் அனல்காற்று வீசிவருகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதன் காரணமாக ஏற்காடு சுற்றுலா தலம் பசுமையாக மாறியது.

    ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக தொடர் விடுமுறை நாட்கள், வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இந்தாண்டு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர், பனிப்பொழிவு நிலவியது.


    தற்போது கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் அனல்காற்று வீசிவருகிறது. ஆனாலும் ஏற்காட்டில் குளிர்ந்த காற்று வீசிவருவதால் அதை அனுபவிக்க விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்து உள்ளனர். மேலும் ஏராளமானபேர் நேற்று மாலையே ஏற்காட்டிற்கு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஏற்காட்டில் திடீரென சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு சாரல்ம ழை பெய்தது. இன்று காலையும் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் சாரல்மழையில் நனைந்த ப்படி பனிமூட்டத்தை ரசித்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து குளிர்ந்த காற்றும் வீசிவருகிறது. சமவெளி பகுதிகளில் அனல்காற்று வீசிவரும் நிலையில் ஏற்காட்டில் நிலவிவரும் இந்த சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகிறார்கள். பனிமூட்டம் காரணமாக ஏற்காட்டுற்கு வந்து சென்ற அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வந்து சென்றது.

    • அ.தி.மு.க. சார்பில் இருவர் கூட்டத்தில் பங்கேற்பர்.
    • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை கூட்டத்தில் தெரிவிப்போம்.

    சேலம்:

    அடுத்த 62 வாரங்களுக்கு தாங்கள் தான் எதிர்க்கட்சி என த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    நாட்டில் ஆளுங்கட்சியை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சிகள்தான். ஆனால் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி. இன்றைக்கு எதிர்க்கட்சியாக உள்ளோம். 2026-ல் ஆளுங்கட்சியாக இருப்போம்.

    வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்கும். அ.தி.மு.க. சார்பில் இருவர் கூட்டத்தில் பங்கேற்பர். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை கூட்டத்தில் தெரிவிப்போம் என்றார்.

    • பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
    • மின் இணைப்பை துண்டித்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் நாளொன்றுக்கு 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 2 அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி கையாளும் பிரிவு, மின் உற்பத்தி பிரிவு, சாம்பல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை முதல் வேலையை புறக்கணித்து பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு தொழிலாளர்களுடன் அனல் மின் நிலைய நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனல் மின் நிலையம் எதிரே உள்ள மின் கம்பத்தில் 5 தொழிலாளர்கள் ஏறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மின் கம்பத்தில் ஏறிய தொழிலாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மின் இணைப்பை துண்டித்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நோட்டமிட்ட கொள்ளையர்கள் கூடமலை பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
    • கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை பகுதியில் வசிப்பவர் தனபால் (வயது 50). இவர் அதே பகுதியில் மாடர்ன் ரைஸ் மில் வைத்து, அரிசி வியாபார கடையும் நடத்தி வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் வெளியூரில் படித்து வருவதால் தனக்கு சொந்தமான ரைஸ் மில்லில் தங்கி விட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    நேற்று இரவு வழக்கம் போல் தனபால் வீட்டை பூட்டிவிட்டு ரைஸ் மில்லுக்கு சென்றார். இதைநோட்டமிட்ட கொள்ளையர்கள் கூடமலை பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 3 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை ரைஸ் மில்லில் இருந்து வீடு திரும்பிய தனபால், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரைஸ் மில் உரிமையாளர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழா நடைபெறுகிறது.
    • இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் சேதுநாயக்கின் திருமணம் நாளை மெய்யனூர் சூரமங்கலத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


    மேலும், இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ஜி.கே.மணியின் மகனான தமிழ் குமரன் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள்.
    • இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    சேலம்:

    நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில்,

    நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் ஆகிய நான் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறோம். இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    • மேடையில் யாரும் நிற்க வேண்டாம் என கே.பி. ராமலிங்கம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
    • கே.பி.ராமலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பா.ஜ.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்காக நின்ற நிர்வாகியிடம் இருந்து சால்வையை கே.பி.ராமலிங்கம் பறித்தபோது அவர் கீழே விழ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அடாவடியில் ஈடுபட்டு உள்ளார். அதுதொடர்பான காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

    மேடையில் யாரும் நிற்க வேண்டாம் என கே.பி. ராமலிங்கம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இதன் காரணமாக கே.பி.ராமலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பா.ஜ.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • தனிப்படையினர் தீவிரமாக போதை கும்பலை கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள்.
    • தப்பி ஓடிய 2 பேரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதனை கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாங்கி பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின் குமார் அபினவ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படையினர் தீவிரமாக போதை கும்பலை கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக சேலம் கிச்சிபாளையம் கஸ்தூரிபாய் தெரு மற்றும் குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் தனிப்படையினர் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலை சேர்ந்த சுதர்சன் (25), தினேஷ்குமார் (24), கிஷோர் (22), சரவணன் (51), பிரகதீஸ்வரன் (50), அக்பர் (56) உட்பட 13 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

    மேலும் அதில் தொடர்புடைய இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர். இதை அடுத்து 13 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 800 போதை மாத்திரைகள் 50 சிரஞ்ச், 2 மோட்டார் சைக்கிள், 11,000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊசிகளையும் கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    ×