என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • தென்னங்கன்றுகள் நடுவதற்கும் விவசாயி களுக்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் மானியம்
    • ஒரு விவசாயிக்கு வெட்டி அப்புறப்படுத்தும் நடைமுறைக்கு ஒரு மரத்துக்கு ரூ.1000 வீதம் அதிகபட்சம் 32 மரத்துக்கு ரூ.32 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படும்

    பரமத்தி வேலூர்

    கபிலர்மலை வட்டா ரத்தில் ஏற்கனவே உள்ள தென்னந்தோப்பு களில் நோய் தாக்கிய, வயதான தென்னை மரங்களை வெட்டி அப்புறப்ப டுத்துவதற்கும், அந்த இடத்தில் புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கும் விவசாயி களுக்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது.

    ¼ ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை வயதான, நோய் தாக்கிய தென்னை, களை வெட்டி அப்பு றப்படுத்திவிட்டு புதிதாக தென்னங்கன்றுகள் நடுவதற்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் தென்னை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது.ஒரு விவசாயிக்கு வெட்டி அப்புறப்படுத்தும் நடைமுறைக்கு ஒரு மரத்துக்கு ரூ.1000 வீதம் அதிகபட்சம் 32 மரத்துக்கு ரூ.32 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படும்.எனவே இந்த வாய்ப்பினை அனைத்து தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், மேலும் விபரங்களுக்கு வட்டார உதவி வேளாண்மை அலுவ லர்கள் சந்திரசேகரன், ரமேஷ், ஸ்ரீதர், கோகுல், செல்வி நிஷா ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறும் வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    • பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம்
    • மலர்களால் அலங்கா ரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்ட ப்பட்டது.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கவுண்டம்பாளையம் சித்தி விநாயகர் ஆல யத்தில் 8 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    8-வது ஆண்டு விழா முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தக் குடும்பத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    சித்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திர வியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கா ரம் செய்யப்பட்டு தீபா ராத னை காட்ட ப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொ ண்டு சித்தி விநாயக ரை தரி சனம் செய்து அருள் பெற்ற னர். பக்தர்க ளுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. சித்தி விநா யகரின் 8-வது ஆண்டு விழா முன்னிட்டு ஒயி லாட்டம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    • வட்டார கல்வி அலுவலர் தேர்வுக் கான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
    • நாமக்கல் வடக்கு ஆகிய 4 மையங்களில் மொத்தம் 1,421 தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி அலுவலர் தேர்வுக் கான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.தேர்வினை சிறப்பான முறையில் நடத்த அனைத்து துறை அலுவலர்களும் தங்க ளுக்கான பணிகளை சரி யான முறையில் மேற்கொள்ளுமாறு தெரி விக்கப்பட்டது. தேர்வு மையங்களில் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு அறைக்கு செல்ல வழிகாட்டி விவரங்களை சரியான முறையில் அறிவிப்பு பலகை களில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் கலெக்டர் உமா தெரிவித்ததாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த மாதம் 10-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி அலுவலர் தேர்வு நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (தெற்கு) அரசு மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சி மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி, காவேரிப் பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி நாமக்கல் வடக்கு ஆகிய 4 மையங்களில் மொத்தம் 1,421 தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.

    தேர்வர்கள் தேர்வு நாளன்று தேர்வு மையத் திற்கு காலை 8.30 முதல் 9.30 மணி வரை மட்டுமே அனு மதிக்கப்படுவர். தேர்வர்கள் காலை 9.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்தில் அனு மதிக்கப்பட மாட்டார்கள். எனவே தேர்வர்கள் தங்க ளுக்கான தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வர்க ளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரி வித்துள்ள வழிகாட்டு நெறி முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேர்வு மைய வளாகத்திற்குள் தேர்வர்கள் உடன் வருபவர்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார் கள். மேற்கண்ட தேர்வு மையங்க ளுக்கு செல்ல அரசு போக்கு வரத்துக்கழக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவ லர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு போக்குவரத்துக்கழகம், தீயணைப்புத்துறை, அஞ்சல் துறை உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், தேர்வு மையப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கண்ணன் குடியிருக்கும் வீட்டின் 3-வது தளத்தில் கோவில் திருவிழாவிற்கு கொடுப்பதற்காக பட்டாசுகளை (நாட்டு வெடிகளை) வைத்தி ருந்தார்.
    • தீயணைப்பு மீட்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ராசிபுரம்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியில் வசிப்பவர் கந்தசாமி மகன் கண்ணன் (வயது 45). இவரது மனைவி சுபித்ரா (40). இவர்களுக்கு அஸ்வர்த்தினி (17), அனிஷ்கா (10) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    வெடி தயாரிப்பாளர்

    கண்ணன் கோவில் திரு விழாக்களுக்கு தேவையான மிகவும் சத்ததுடன் வெடிக்க கூடிய நாட்டு வெடிகள், உயரமாக சென்று பல வண்ணங்களில் வெடிக்கும் வண்ண வெடிகள் போன்ற வற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் ராசிபுரம் தட்டான் குட்டை ஏரி அருகில் உள்ள முனி யப்பன் கோவில் பகுதி பட்டணம் ரோட்டில் உரி மத்துடன் பட்டாசு குடோன் வைத்துள்ளார்.

    பயங்கர சப்தத்துடன் வெடித்தது

    இந்த நிலையில் கண்ணன் குடியிருக்கும் வீட்டின் 3-வது தளத்தில் கோவில் திருவிழாவிற்கு கொடுப்பதற்காக பட்டாசுகளை (நாட்டு வெடிகளை) வைத்தி ருந்தார். நேற்று இரவு சுமார் 8.15 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.அப்போது அவர் கொசுவை அடிப்பதற்காக கொசு பேட்டை விசிறி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகள் மீது தீப்பொறியானது பட்டது. இதில் பயங்கர சப்தத்துடன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடி வெடித்தது. இதனால் இடி விழுந்தது போல் சப்தம் கேட்டுள்ளது.தொடர்ந்து அந்த பகுதியில் கரும்புகை பரவியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓட்டம் பிடித்தனர்.மேலும் இதுகுறித்து ராசிபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு மீட்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீக்காயம்

    இந்த விபத்தில் கண்ண னுக்கு கைகள், முதுகு பகுதி, தலையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட வீரர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டிற்குள் இருந்த கண்ண னின் மனைவி, மகள்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். தீயணைப்பு படையினர் அவர்களை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.

    ரூ.6 ஆயிரம் மதிப்பு

    பட்டாசு வெடித்ததில் தீப்பிழம்பு 100 அடி உயரத்திற்கு தெரிந்தது. சம்பவ இடத்தில் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அந்தப் பகுதி யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதில் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள நாட்டு வெடிகள் தீக்கிரையாயின.சம்பவ இடத்திற்கு ராசி புரம் தாசில்தார் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். வெடி விபத்து காரணமாக 1 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    கலெக்டர் விசாரணை

    விபத்து குறித்து தகவல் அறிந்து கலெக்டர் உமா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி னார். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயங்க ளுடன் சிகிச்சை பெற்று வரும் கண்ணனை நேரில் சந்தித்து விவரம் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் டாக்டர்க ளிடம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி கூறினார்.இதுகுறித்து கலெக்டர் உமா கூறுகையில், கண்ணன் அவரது வீட்டில் உரிமம் இல்லாத இடத்தில் பட்டாசு வைத்துள்ளார். திடீரென்று பட்டாசு வெடித்ததில் அவருக்கு 30 சதவீதத்திற்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் அவருக்கு நல்ல தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர் உரிமம் இல்லாத இடத்தில் பட்டாசு வைத்தி ருந்தது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர். விசாரணைக்கு பிறகுதான் எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கூற முடியும் என்றார்.ராசிபுரம் டி.எஸ்.பி. (பொறுப்பு) முத்துக்கிருஷ் ணன் மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பகுதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோகனூர் சாலை கொண்டிசெட்டிபட்டியில் சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    இதில் லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போதை பொருட்களுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (29) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூருவில் இருந்து ராமநாதபுரத்திற்கு 29 மூட்டைகளில் 400 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர். 

    • வாழைத்தார்களை கள்ளிபூச்சி தாக்குதலால் வாழைத்தார் காம்பு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தில் படர்திருக்கிறது.
    • மேலும் அதைத் தொட்டால் பிசு பிசுப்பாக இருப்பதால் அதை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்புவதில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார், பாண்ட மங்கலம், பொத்தனூர், நன்செய் இடையாறு, குப்பிச்சி பாளையம், மோக னுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம், கொத்தமங்கலம், சிறு நல்லி கோவில், அய்யம்பா ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர்.

    வாழை

    பூவன், பச்சநாடன், கற்பூர வல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழைகளை பயி ரிட்டு, தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர். இவை, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரி களுக்கும், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்கப்படு கிறது.

    இங்கு ஏலம் எடுக்கப்ப டும் வாழைத்தார்கள், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கள்ளிப்பூச்சி

    இந்த நிலையில் தற்போது வாழைத்தார்களை கள்ளிபூச்சி தாக்குதலால் வாழைத்தார் காம்பு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தில் படர்திருக்கிறது.

    மேலும் அதைத் தொட்டால் பிசு பிசுப்பாக இருப்பதால் அதை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்புவதில்லை. இதனால் வாழைத்தார்களை ஏலத்தில் எடுத்த வியா பாரிகள், வெளி ஊர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளிபூச்சி களை அகற்று கின்றனர்.

    இதற்கு கட்டணமாக ஒரு வாழைத்தாருக்கு 10 ரூபாய் செலவாகின்றது

    இது குறித்து வியாபாரி கள் கூறியதாவது:-

    வாழைத்தார்கள் முற்றி வெட்டும் நிலையில் உள்ள பருவ காலத்தில் வெள்ளை நிறத்தில் கள்ளிப்பூச்சி நோயால் வாழைத்தார்கள் பாதிக்கப்படுகிறது. வெளி யூர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக சுத்தமாக கள்ளிப் பூச்சியை அகற்ற வாழைத் தார்களுக்கு பீய்ச்சியடித்து சுத்தம் செய்து அனுப்பு கிறோம்.

    இந்த நேரத்தில் கள்ளிப் பூச்சி அகற்ற மருந்து அடித்தால் வாழைத்தார் சாப்பிடு பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு வாழைத்தார்களுக்கு மருந்து அடிக்காமல், தண்ணீர் மூலம் சுத்தம் செய்து வெளியூர்க ளுக்கு அனுப்பி வைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கள் கூறினர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சீரங்கன் ( 65). இவர் இடது முழங்கால் வலி காரணமாக தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து மூட்டு வலிக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சீரங்கன் ( 65). இவர் இடது முழங்கால் வலி காரணமாக தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இந்த நிலையில் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் முழங்கால் வலி காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் கோகுல் தலைமையிலான குழுவினர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் குழுவினர் சீரங்கனுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சீரங்கன் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து மூட்டு வலிக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்.
    • மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அதிவேகமாக வந்த கார்

    அப்போது அந்தப் பகு

    தியில் உள்ள ஒரு பெட்ரோல்

    பங்கில் பெட்ரோல் போடு வதற்காக திரும்பியபோது பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி அதிவேகமாக வந்த கார் ரத்தினம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரத்தினம் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தினம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கைது

    இதுகுறித்து ரத்தினத்தின் மனைவி வசந்தி(54) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்செங்கோடு அருகே ஆலாங்குறைகாடு பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நன்செய்இடையாறு காவிரி ஆற்றின் வடகரை யில் அமைந்துள்ள அரசமர பிள்ளையார், மாசி பெரி யண்ணசாமி மற்றும் கன்னி மார் கோவில் மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 8- மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யா கம் கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகம் மற்றும் பூர்ணாகுதி யும், மாலை 5- மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாறு காவிரி ஆற்றின் வடகரை யில் அமைந்துள்ள அரசமர பிள்ளையார், மாசி பெரி யண்ணசாமி மற்றும் கன்னி மார் கோவில் மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 8- மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யா கம் கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகம் மற்றும் பூர்ணாகுதி யும், மாலை 5- மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் நடைபெற்றது.

    மாலை 6- மணிக்கு வாஸ்து பூமி பூஜை, கும்ப அலங்காரம், முதல் காலயாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், மருந்து சாத்துதலும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மேல் இரண்டாம் காலயாக பூஜை, சபர்சாகுதி, தீபாராதனை யும், 7 மணிக்கு மேல் அரசமர விநாயகர், மாசி பெரியண்ண சாமி மற்றும் கன்னிமார்கள் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து மகா அபிஷே கம், தசதானம், கோபூஜை நடைபெற்றது.

    கும்பாபிஷேகம்

    இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்க ளுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நன்செய்இடையாறு மற்றும் சுற்று வட்டார பகு திகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை நன்செய் இடையாறு மாசி பெரியண்ணசாமி கோவில் பரம்பரை அறங்கா வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைக்கிணறு ஊராட்சி நேரு நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய மற்றும் பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்கின்றனர்.

    இந்நிலையில் நேரு நகரில் கடந்த 2 வருடங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.

    இதனால் தண்ணீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் குடிநீர் வண்டி ரூ.500 வரை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    தர்ணா போராட்டம்

    எனவே கூலி வேலைக்கு செல்வதால் குடிநீரை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை உள்ளதாகவும், குடிநீர் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நேரு நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நல்லிபாளையம் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க கோரி காது கேளா மற்றும் வாய் பேச இயலாத மாற்றுதிறனாளிகள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காதொளி கருவி கொண்டு மருத்துவர் ஆலோசனைப்படி வருகிற புதன்கிழமை முகாம் அமைத்து ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    நாமக்கல்:

    வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க கோரி காது கேளா மற்றும் வாய் பேச இயலாத மாற்றுதிறனாளிகள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்த நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், நல்லிபாளையம் இன்ஸ்பெக்டர் சுமதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக செயல்திறன் உதவியாளர் சுமதி ஆகியோர் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது காதொளி கருவி இருந்தும் வட்டார அலுவலகத்தில் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க மறுப்பதாக மாற்றுத் திறனாளிகள் குற்றம் சாட்டினர்.

    இதனையடுத்து காதொளி கருவி கொண்டு மருத்துவர் ஆலோசனைப்படி வருகிற புதன்கிழமை முகாம் அமைத்து ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    • பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
    • விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றதாக பிரேமா அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் பெரிய சாமி (37), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 23-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் செல்லிப்பாளையம் பகுதியில் ஒரு வளையில் சென்ற போது எதிரே வந்த வாகனம் மோதி பெரியசாமி இறந்ததாகவும், பிரேமா காயமின்றி தப்பியதாகவும் கூறப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர். பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இதனிடையே பிரேமா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிரேமாவின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்தனர். அப்போது கணவர் இறந்த பிறகும் பிரேமா மகிழ்ச்சியாக இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் பிரேமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றதாக பிரேமா அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனது கணவர் பெரியசாமி கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இதில் கிடைக்கும் வருமானத்தில் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை. இதனால் நான் மோகனூரில் உள்ள பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தேன்.

    அப்போது அங்கு பணியாற்றி வந்த ஒருவருடன் கடந்த 4 மாதங்களாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனை அறிந்த எனது கணவர் என்னை கண்டித்தார். மேலும் பேக்கரிக்கு வந்து சத்தம் போட்டார். அப்படி இருந்தும் அவருடன் கள்ளக்காதலை என்னால் விட முடியவில்லை.

    இதனிடையே அந்த பேக்கரியில் இருந்து என்னையும், கள்ளக்காதலனையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். இதனால் நான் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தேன். செல்போனில் மட்டுமே கள்ளக்காதலனுடன் பேசி வந்தேன்.

    இருப்பினும் நேரில் சந்திக்க முடியாததால் இருவரும் தவித்து வந்தோம். எனவே பெரியசாமியை கொலை செய்தால் மட்டுமே இருவரும் சந்தோசமாக வாழ முடியும் என 2 பேரும் நினைத்தோம். இது தொடர்பாக நானும், கள்ளக்காதலனும் சேர்ந்து பெரியசாமியை கொலை செய்து விபத்து நடந்தது போல் நாடகமாட முடிவு செய்தோம். திட்டமிட்டபடி சம்பவத்தன்று நள்ளிரவு காது வலிக்கிறது என நான் கணவரிடம் கூறினேன். அவர் என்னை மோகனூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார்.

    இது பற்றி கள்ளக்காதலனுக்கு தகவல் கொடுத்தேன். மோகனூர் செல்லும் வழியில் ஒரு வளைவில் கள்ளக்காதலன் நின்று கொண்டிருந்தார். அவர், பெரியசாமி மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் கள்ளக்காதலன் தப்பி சென்றுவிட்டார். அதன்பிறகு உறவினர்களிடம் வாகனம் ஒன்று மோதி கணவர் இறந்துவிட்டதாக தகவல் கொடுத்தேன். இதனால் உறவினர்களுக்கு என் மீது சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால் போலீசாரின் ரகசிய கண்காணிப்பில் நான் சிக்கிக் கொண்டேன். இவ்வாறு அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பிரேமாவை கைது செய்த போலீசார் பெரியசாமி கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் தலைமறைவான கள்ளக்காதலனை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவி திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×