என் மலர்
நாமக்கல்
- குமாரபாளையத்தில் ரம்மி மோகத்தால் வீட்டில் இருந்த 1.60 லட்சம் பணத்துடன் தொழிலாளி மாயமானார்.
- மனைவி போலீசில் புகார்
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பூசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவரது மனைவி கார்த்திகா (29). இருவரும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
மணிகண்டன் ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் அதிக பணத்தையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மணிகண்டன் திடீரென மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் மணிகண்டனின் மனைவி கார்த்திகா குமார பாளையம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த 27-ந் தேதி முதல் தனது கணவரை காணவில்லை எனவும், போகும்போது வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை எடுத்து சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மணிகண்டனை தேடி வருகின்றனர்.
- கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.
- நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் தொடங்கியது.
நாமக்கல்:
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ராஜா முன்னிலை வகித்தார். நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் தொடங்கியது. இப்போட்டியினை நாமக்கல் ரோட்டரி கிளப் தலைவர் ராகேஷ், நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். ஆண்- பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற போட்டி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி கொண்டி செட்டி பட்டி வழியாக அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியை வந்தடைந்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக ரொக்கத்தொகை மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- நாமக்கல் மண்டல அளவிலான முட்டைகள் தரமாகவும், விலை சற்று குறைவாகவும் இருப்பதால் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
- ஓமன் நாட்டில் இந்திய முட்டைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு ஏற்றுமதியானது சற்று தடைபட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகள் மூலம் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும், சத்துணவுக்கும் 4.50 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலையில் ஓமன், கத்தார், துபாய், சவுதி அரேபியா உள்பட 9 வளைகுடா நாடுகளுக்கு மாதந்தோறும் 5 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்படுகின்றன.
மலேசியா, சிங்கப்பூருக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் பல்வேறு நிர்வாக காரணங்களால் அங்கு ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 4 மாதங்களாக இலங்கைக்கு மாதந்தோறும் 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாமக்கல் மண்டல அளவிலான முட்டைகள் தரமாகவும், விலை சற்று குறைவாகவும் இருப்பதால் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து மாதந்தோறும் 30 கண்டெய்னர் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 15 கண்டெய்னர்கள் வீதம் அனுப்பப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் வரையில் இந்த ஏற்றுமதி தடையின்றி நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் கூறியதாவது:-
இலங்கையில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து மாதந்தோறும் கூடுதலாக 15 கண்டெய்னர்கள் வீதம் (ஒரு கண்டெய்னரில் 5 லட்சம் முட்டைகள்) அதாவது சுமார் 70 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. வளைகுடா நாடுகளுக்கு மாதம் 5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஓமன் நாட்டில் இந்திய முட்டைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு ஏற்றுமதியானது சற்று தடைபட்டுள்ளது. இலங்கைக்கு தடையின்றி முட்டை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரேமாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
- பிரேமாவை கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பிரேமா. கடந்த 23-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் செல்லிப்பாளையம் பகுதியில் பெரியசாமி விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. இது குறித்து மோகனூர் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர். பிரேமாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் பிரேமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், பிரேமா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் பிரேமா, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் மோகனூரில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்தேன். அப்போது அங்கு வேலை பார்த்த நந்திகேசவன் (25) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை கணவர் பெரியசாமி கண்டித்தார். இதனால் சம்பவத்தன்று மோகனூர் அருகே செல்லிப்பாளையம் பகுதியில் வைத்து அவரை நந்திகேசவன் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தார். அதன்பிறகு உறவினர்களிடம் வாகனம் மோதி கணவர் இறந்து விட்டதாக நாடகம் ஆடினேன். ஆனால் போலீசார் கண்டுபிடித்து விட்டனர் என பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
தொடர்ந்து பிரேமாவை கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் நந்திகேசவன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த பேக்கரியில் வேலை செய்த அவரது நண்பர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா குன்னத்தூர் பகுதியை சேர்ந்த தனுஷ் (21) ஆகிய இருவரையும் மோகனூர் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மோகனூர் அடுத்த வாங்கல் பிரிவு ரோடு அருகே நின்றுகொண்டு இருந்த நந்திகேசவனையும், தனுஷையும் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குமாரபாளையம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலை, சிவசக்தி நகரில் வசிப்பவர் சுசீலா (வயது 45). சம்பவத்தன்று தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு மருத்துவம் பார்க்க தனது 2 1/2 பவுன் நகையை அடகு வைப்பதற்ாக ஒரு பையில் வைத்துக் கொண்டு வங்கிக்கு சென்று கொண்டிருந்தார். புறவழிச்சாலை தனியார் அபார்ட்மெண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சுசீலா கையில் இருந்த பையை பிடுங்கிக் கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் சுசீலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென்னங்கன்றுகள் நடுவதற்கும் விவசாயி களுக்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் மானியம்
- ஒரு விவசாயிக்கு வெட்டி அப்புறப்படுத்தும் நடைமுறைக்கு ஒரு மரத்துக்கு ரூ.1000 வீதம் அதிகபட்சம் 32 மரத்துக்கு ரூ.32 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படும்
பரமத்தி வேலூர்
கபிலர்மலை வட்டா ரத்தில் ஏற்கனவே உள்ள தென்னந்தோப்பு களில் நோய் தாக்கிய, வயதான தென்னை மரங்களை வெட்டி அப்புறப்ப டுத்துவதற்கும், அந்த இடத்தில் புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கும் விவசாயி களுக்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது.
¼ ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை வயதான, நோய் தாக்கிய தென்னை, களை வெட்டி அப்பு றப்படுத்திவிட்டு புதிதாக தென்னங்கன்றுகள் நடுவதற்கு தென்னை வளர்ச்சி வாரியத்தின் தென்னை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது.ஒரு விவசாயிக்கு வெட்டி அப்புறப்படுத்தும் நடைமுறைக்கு ஒரு மரத்துக்கு ரூ.1000 வீதம் அதிகபட்சம் 32 மரத்துக்கு ரூ.32 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்படும்.எனவே இந்த வாய்ப்பினை அனைத்து தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், மேலும் விபரங்களுக்கு வட்டார உதவி வேளாண்மை அலுவ லர்கள் சந்திரசேகரன், ரமேஷ், ஸ்ரீதர், கோகுல், செல்வி நிஷா ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறும் வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.
- பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம்
- மலர்களால் அலங்கா ரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்ட ப்பட்டது.
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கவுண்டம்பாளையம் சித்தி விநாயகர் ஆல யத்தில் 8 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
8-வது ஆண்டு விழா முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தக் குடும்பத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
சித்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திர வியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கா ரம் செய்யப்பட்டு தீபா ராத னை காட்ட ப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொ ண்டு சித்தி விநாயக ரை தரி சனம் செய்து அருள் பெற்ற னர். பக்தர்க ளுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. சித்தி விநா யகரின் 8-வது ஆண்டு விழா முன்னிட்டு ஒயி லாட்டம் நிகழ்ச்சி நடை பெற்றது.
- வட்டார கல்வி அலுவலர் தேர்வுக் கான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
- நாமக்கல் வடக்கு ஆகிய 4 மையங்களில் மொத்தம் 1,421 தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி அலுவலர் தேர்வுக் கான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.தேர்வினை சிறப்பான முறையில் நடத்த அனைத்து துறை அலுவலர்களும் தங்க ளுக்கான பணிகளை சரி யான முறையில் மேற்கொள்ளுமாறு தெரி விக்கப்பட்டது. தேர்வு மையங்களில் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு அறைக்கு செல்ல வழிகாட்டி விவரங்களை சரியான முறையில் அறிவிப்பு பலகை களில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் கலெக்டர் உமா தெரிவித்ததாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த மாதம் 10-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் வட்டார கல்வி அலுவலர் தேர்வு நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் (தெற்கு) அரசு மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சி மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி, காவேரிப் பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி நாமக்கல் வடக்கு ஆகிய 4 மையங்களில் மொத்தம் 1,421 தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.
தேர்வர்கள் தேர்வு நாளன்று தேர்வு மையத் திற்கு காலை 8.30 முதல் 9.30 மணி வரை மட்டுமே அனு மதிக்கப்படுவர். தேர்வர்கள் காலை 9.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்தில் அனு மதிக்கப்பட மாட்டார்கள். எனவே தேர்வர்கள் தங்க ளுக்கான தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வர்க ளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரி வித்துள்ள வழிகாட்டு நெறி முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேர்வு மைய வளாகத்திற்குள் தேர்வர்கள் உடன் வருபவர்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார் கள். மேற்கண்ட தேர்வு மையங்க ளுக்கு செல்ல அரசு போக்கு வரத்துக்கழக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவ லர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு போக்குவரத்துக்கழகம், தீயணைப்புத்துறை, அஞ்சல் துறை உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், தேர்வு மையப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கண்ணன் குடியிருக்கும் வீட்டின் 3-வது தளத்தில் கோவில் திருவிழாவிற்கு கொடுப்பதற்காக பட்டாசுகளை (நாட்டு வெடிகளை) வைத்தி ருந்தார்.
- தீயணைப்பு மீட்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ராசிபுரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியில் வசிப்பவர் கந்தசாமி மகன் கண்ணன் (வயது 45). இவரது மனைவி சுபித்ரா (40). இவர்களுக்கு அஸ்வர்த்தினி (17), அனிஷ்கா (10) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
வெடி தயாரிப்பாளர்
கண்ணன் கோவில் திரு விழாக்களுக்கு தேவையான மிகவும் சத்ததுடன் வெடிக்க கூடிய நாட்டு வெடிகள், உயரமாக சென்று பல வண்ணங்களில் வெடிக்கும் வண்ண வெடிகள் போன்ற வற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் ராசிபுரம் தட்டான் குட்டை ஏரி அருகில் உள்ள முனி யப்பன் கோவில் பகுதி பட்டணம் ரோட்டில் உரி மத்துடன் பட்டாசு குடோன் வைத்துள்ளார்.
பயங்கர சப்தத்துடன் வெடித்தது
இந்த நிலையில் கண்ணன் குடியிருக்கும் வீட்டின் 3-வது தளத்தில் கோவில் திருவிழாவிற்கு கொடுப்பதற்காக பட்டாசுகளை (நாட்டு வெடிகளை) வைத்தி ருந்தார். நேற்று இரவு சுமார் 8.15 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.அப்போது அவர் கொசுவை அடிப்பதற்காக கொசு பேட்டை விசிறி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகள் மீது தீப்பொறியானது பட்டது. இதில் பயங்கர சப்தத்துடன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடி வெடித்தது. இதனால் இடி விழுந்தது போல் சப்தம் கேட்டுள்ளது.தொடர்ந்து அந்த பகுதியில் கரும்புகை பரவியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓட்டம் பிடித்தனர்.மேலும் இதுகுறித்து ராசிபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு மீட்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தீக்காயம்
இந்த விபத்தில் கண்ண னுக்கு கைகள், முதுகு பகுதி, தலையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட வீரர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டிற்குள் இருந்த கண்ண னின் மனைவி, மகள்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். தீயணைப்பு படையினர் அவர்களை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
ரூ.6 ஆயிரம் மதிப்பு
பட்டாசு வெடித்ததில் தீப்பிழம்பு 100 அடி உயரத்திற்கு தெரிந்தது. சம்பவ இடத்தில் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அந்தப் பகுதி யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதில் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள நாட்டு வெடிகள் தீக்கிரையாயின.சம்பவ இடத்திற்கு ராசி புரம் தாசில்தார் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். வெடி விபத்து காரணமாக 1 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
கலெக்டர் விசாரணை
விபத்து குறித்து தகவல் அறிந்து கலெக்டர் உமா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி னார். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயங்க ளுடன் சிகிச்சை பெற்று வரும் கண்ணனை நேரில் சந்தித்து விவரம் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் டாக்டர்க ளிடம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி கூறினார்.இதுகுறித்து கலெக்டர் உமா கூறுகையில், கண்ணன் அவரது வீட்டில் உரிமம் இல்லாத இடத்தில் பட்டாசு வைத்துள்ளார். திடீரென்று பட்டாசு வெடித்ததில் அவருக்கு 30 சதவீதத்திற்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் அவருக்கு நல்ல தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர் உரிமம் இல்லாத இடத்தில் பட்டாசு வைத்தி ருந்தது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர். விசாரணைக்கு பிறகுதான் எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கூற முடியும் என்றார்.ராசிபுரம் டி.எஸ்.பி. (பொறுப்பு) முத்துக்கிருஷ் ணன் மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
- போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் பகுதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோகனூர் சாலை கொண்டிசெட்டிபட்டியில் சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இதில் லாரியில் மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போதை பொருட்களுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (29) என்பவரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூருவில் இருந்து ராமநாதபுரத்திற்கு 29 மூட்டைகளில் 400 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
- வாழைத்தார்களை கள்ளிபூச்சி தாக்குதலால் வாழைத்தார் காம்பு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தில் படர்திருக்கிறது.
- மேலும் அதைத் தொட்டால் பிசு பிசுப்பாக இருப்பதால் அதை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்புவதில்லை.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார், பாண்ட மங்கலம், பொத்தனூர், நன்செய் இடையாறு, குப்பிச்சி பாளையம், மோக னுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம், கொத்தமங்கலம், சிறு நல்லி கோவில், அய்யம்பா ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர்.
வாழை
பூவன், பச்சநாடன், கற்பூர வல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழைகளை பயி ரிட்டு, தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர். இவை, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரி களுக்கும், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்கப்படு கிறது.
இங்கு ஏலம் எடுக்கப்ப டும் வாழைத்தார்கள், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
கள்ளிப்பூச்சி
இந்த நிலையில் தற்போது வாழைத்தார்களை கள்ளிபூச்சி தாக்குதலால் வாழைத்தார் காம்பு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தில் படர்திருக்கிறது.
மேலும் அதைத் தொட்டால் பிசு பிசுப்பாக இருப்பதால் அதை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்புவதில்லை. இதனால் வாழைத்தார்களை ஏலத்தில் எடுத்த வியா பாரிகள், வெளி ஊர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளிபூச்சி களை அகற்று கின்றனர்.
இதற்கு கட்டணமாக ஒரு வாழைத்தாருக்கு 10 ரூபாய் செலவாகின்றது
இது குறித்து வியாபாரி கள் கூறியதாவது:-
வாழைத்தார்கள் முற்றி வெட்டும் நிலையில் உள்ள பருவ காலத்தில் வெள்ளை நிறத்தில் கள்ளிப்பூச்சி நோயால் வாழைத்தார்கள் பாதிக்கப்படுகிறது. வெளி யூர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக சுத்தமாக கள்ளிப் பூச்சியை அகற்ற வாழைத் தார்களுக்கு பீய்ச்சியடித்து சுத்தம் செய்து அனுப்பு கிறோம்.
இந்த நேரத்தில் கள்ளிப் பூச்சி அகற்ற மருந்து அடித்தால் வாழைத்தார் சாப்பிடு பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு வாழைத்தார்களுக்கு மருந்து அடிக்காமல், தண்ணீர் மூலம் சுத்தம் செய்து வெளியூர்க ளுக்கு அனுப்பி வைக்கிறோம்.
இவ்வாறு அவர் கள் கூறினர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சீரங்கன் ( 65). இவர் இடது முழங்கால் வலி காரணமாக தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
- பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து மூட்டு வலிக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சீரங்கன் ( 65). இவர் இடது முழங்கால் வலி காரணமாக தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இந்த நிலையில் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் முழங்கால் வலி காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் கோகுல் தலைமையிலான குழுவினர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் குழுவினர் சீரங்கனுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சீரங்கன் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து மூட்டு வலிக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.






