என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
மர்ம நபர் சுசீலா கையில் இருந்த பையை பிடுங்கிக் கொண்டு தப்பியோடி விட்டார்.
குமாரபாளையம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலை, சிவசக்தி நகரில் வசிப்பவர் சுசீலா (வயது 45). சம்பவத்தன்று தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு மருத்துவம் பார்க்க தனது 2 1/2 பவுன் நகையை அடகு வைப்பதற்ாக ஒரு பையில் வைத்துக் கொண்டு வங்கிக்கு சென்று கொண்டிருந்தார். புறவழிச்சாலை தனியார் அபார்ட்மெண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சுசீலா கையில் இருந்த பையை பிடுங்கிக் கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் சுசீலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






