search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி; 500 பேர் பங்கேற்பு
    X

    அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி; 500 பேர் பங்கேற்பு

    • கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.
    • நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் தொடங்கியது.

    நாமக்கல்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் ராஜா முன்னிலை வகித்தார். நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் தொடங்கியது. இப்போட்டியினை நாமக்கல் ரோட்டரி கிளப் தலைவர் ராகேஷ், நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். ஆண்- பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற போட்டி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி கொண்டி செட்டி பட்டி வழியாக அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியை வந்தடைந்தது.

    இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக ரொக்கத்தொகை மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×