என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் திருஞா னசம்பந்தர் மடாலயத்தில் நடராஜர் அபிஷேகம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.
- 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் திருஞா னசம்பந்தர் மடாலயத்தில் நடராஜர் அபிஷேகம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. தேவாரம் - திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமா னுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் ,தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமான் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார். மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
- தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது.
- எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல்:
நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2023-–24ம் ஆண்டிற்கு, நெல்லுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,183 எனவும், சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ, 2,203 என மத்திய அரசு கொள்முதல் விலை நிர்ணயம் செய்துள்ளது.
தமிழக அரசு தமிழகத்தில் தற்போது திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு உண்டான ஆதரவு விலையுடன், தமிழக அரசின் ஊக்கத்தொகையாக, சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ. 82 கூடுதலாகவும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 107 கூடுதலாகவும் அறிவித்து விலை நிர்ணயம் செய்துள்ளது.
தமிழக அரசு அறிவித்த விலைப்படி, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,265, சன்னரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,310 என, செப். 1 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளின் நலன் கருதி, நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாம் ஆண்டு நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நெல்லுக்கு உண்டான விலை அறிவிக்காதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக நெல் உற்பத்தி செலவை ஒப்பிடும்போது, வேலை ஆட்கள் கூலி மிகவும் அதிகப்படியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு அதிகரித்துள்து. மேலும், உரம், மருந்து அதன் மூலப்பொருட்கள் ஏற்றிவரும் வாகன வாடகையும், பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பகுதிகளில் 7 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, பொன்மலர்பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், சோழசிராமணி, பெருங்குறிச்சி, மணியனூர், கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள தென்னை மரத்திலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னை மரத்திலும் ஏராளமான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
- மலைத்தேனீக்கள் அந்த வழியாக செல்பவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள தென்னை மரத்திலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னை மரத்திலும் ஏராளமான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
மலைத்தேனீக்கள் அந்த வழியாக செல்பவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினரிடம் புகார் மனு கொடுத்து மலைத்தேனீக்களை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று அங்கு கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினார்கள். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
- இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப்படுகிறார்கள்.
- திருச்செங்கோட வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சரவணன் ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வழியாக செல்லும் பல பஸ்களிலும், தொலைதூரம் செல்லும் சில அரசு பஸ்களிலும் முன்பக்க கண்ணாடிகளில் ஒளிரும் வண்ணவிளக்குகள் கொண்ட பட்டைகள் பொருத்தியிப்பதாகவும் இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி அவதிப் படுவ தாக வந்த புகாரை அடுத்து
திருச்செங்கோட வட்டார
போக்குவரத்து அலுவலர்
(பொறுப்பு) சரவணன்
ஆய்வாளர் பாமாப்பி ரியாஆகியோர் அதிரடியாக திருச்செங் கோடு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்களில் இருந்த வண்ணவிளக்கு பட்டைகளை அகற்றி னார்கள். பஸ் எண் வழித்தடம் மற்றும் டிரைவர், கண்டக்டர் உரிமங்களை பெற்று பதிவு செய்து கொண்டதோடு இந்த முறை அறிவுறுத்துவதோடு அடுத்த முறை பிடிபட்டால் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
- கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கையாக சேலம், நாமக்கல் பகுதிக ளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
நாமக்கல்:
கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கையாக சேலம், நாமக்கல் பகுதிக ளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
வாகன சோதனை
நாமக்கல் எம்.மேட்டுப்பட்டி, நல்லிபா ளையம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நாமக்கல் டி.எஸ்.பி தன்ராஜ் அறிவுறுத்தலின்படி போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்ட னர்.
அப்போது கிருஷ்ணகிரி பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புகைப்படத்தை கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் வாகன சோதனை சாவடிகளில் உள்ள சி.சி.டி.வி கேமிரா மூலமும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து நாமக்கல் டி.எஸ்.பி. தன்ராஜ் கூறுகையில், வடமாநில கொள்ளையர்களை கண்காணிக்க சோதனை சாவடியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரோந்து வாகனங்கள் மூலமும் தீவிர கண்கா ணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
- நாமக்கல்லில், வட்ட லாரி பாடி பில்டர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் கடந்த 40 ஆண்டாக சங்கத் தின் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கோவிந்தராஜ் கவுர விக்கப்பட்டார்.
நாமக்கல்:
நாமக்கல்லில், வட்ட லாரி பாடி பில்டர் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் மனோ கரன் வர வேற்றார். துணைத்த லைவர்ராஜூ முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முறை யாக ஜி.எஸ்.டி. லைசென்ஸ் மற்றும் பதிவு சான்றுபெற்று, தொழில் செய்யும் லாரி பாடிகட்டும் நிறுவனங்கள், மூலப்பொருட்கள் வாங்க, தொழில் வணிகத்துறை மூலம் 125 லட்சம் முதல் 1 கோடி வரை அடமானம் இல்லாத கடன் வழங்க வேண்டும். நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கூட்டத்தில் கடந்த 40 ஆண்டாக சங்கத் தின் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கோவிந்தராஜ் கவுர விக்கப்பட்டார். கூட்டத்தில் சங்க பொருளாளர் ராமலிங்கம், கவுரிஅம்மன் தியாகராஜன், ஆடிட்டர் ரவி, வக்கீல் கார்த்தி கேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 26-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
- மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த நவீனாவை காணவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆயிபா ளையம் தேவேந்திரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்த மகள் கவிதா (30), இளைய மகள் நவீனா (26) இவர் பொறியியல் கல்லூரி பட்டதாரி.
மூத்த மகள் கவிதாவை வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள முசிறி காட்டுக்காடு தேவேந்திரன் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் கவிதா வின் தங்கை நவீனா கடந்த 2 வாரமாக தனது
அக்கா கவிதா வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலை யில் கடந்த 26-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த நவீனாவை காணவில்லை.
இது குறித்து கவிதா தனது தாய் லட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். லட்சுமி உறவினர்கள் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடிப்பார்த்துள்ளார். ஆனால் நவீனாவை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து லட்சுமி வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்கு பதிவு செய்து நவீனா இரவில் எங்காவது தானாகவே சென்று விட்டாரா? அல்லது இரவு நேரத்தில் வெளியில் வந்த போது எவராவது கடத்திச் சென்று விட்டனரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், தேவை படுகிறது.
- பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீசார் இருப்பது இல்லை.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் நிலையம் இடைப்பாடி சாலையில், பாறையூர், பள்ளிபாளையம் சாலையில் குப்பாண்டபாளையம், சேலம் சாலையில் 4 வழிச்சாலை, மேற்கில் பவானி காவிரி ஆற்றின் பாலம் ஆகியவை எல்லையாக உள்ளது.
தொழில் நிறுவனங்கள்
மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள்,
500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை கள், இதர தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், சேலம்-கோவை புறவழிச்சாலையில் இரவு பகலாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் என குமாரபாளையம் போலீஸ் நிலையத்தின் எல்லை விரிவடைந்து கிடக்கிறது.
குமாரபாளையம் நகராட்சி பகுதி தவிர தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம் ஆகிய 3 ஊராட்சி பகுதிகளும் உள்ளன. நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும், 3 ஊராட்சிகளில் சேர்ந்து மேலும் ஒரு லட்சம் மக்கள் தொகை என சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் , குமாரபாளையம் போலீஸ் நிலையம் அதிகார வரம்புக்குள் இருந்து வருகின்றன.
கூடுதல் போலீஸ்
இந்நிலையில்,போலீஸ் நிலையத்தில் நுழைவு வாயில் காவலர், எழுத்தர், நீதிமன்றத்துக்கான தலைமைக்காவலர், ஆய்வாளரின் வாகன டிரைவர், புறவழிச்சாலையில் இரு போலீசார், போலீஸ்நிலையப் பணிகளை கவனிக்க உதவி ஆய்வாளர் ஒருவர், தேவை படுகிறது. சமீப காலமாக அத்தியாவசிய பணிகளில் போலீசார் இல்லாமல் எழுத்தர், தன் பணியுடன் போலீஸ்(சென்ட்ரி) பணியை கவனிக்கிறார். அதிக பட்சம் 4 அல்லது 5 பேர் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் 2 போலீசார் மட்டுமே பணியில் இருக்கக்கூடிய நிலை இருந்து வருகிறது.
பொதுமக்கள் அதிருப்தி
பொதுமக்கள் புகார் மனு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட எதிரியை அழைத்து வரக் கூட போலீசார் இருப்பது இல்லை. புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகும் நிலை உள்ளது. போலீஸ் நிலையத்தில் இருக்கும் போலீசார் எண்ணிக்கை பார்த்தால் சுமார் 40 பேர் இருப்பதாகக்கூறப்படு கிறது. ஆனால் அதிக பட்சம் 5 பேருக்கு மேல் இருப்பது இல்லை.
ஆகவே போதிய அளவில் புதிய போலீசாரை நியமித்து சட்ட ஒழுங்கு குற்றங்களை தடுக்கவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேலூர் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு, சமையலறை, அறுவை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார்.
- மாணவர்கள் தங்கியுள்ள ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள ராசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன் கலெக்டர் டாக்டர் உமா முன்னிலையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமைக்கப்படும் பொருள் வைப்பறை மற்றும் சமைய லறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வேலூர் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு, சமையலறை, அறுவை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மருந்துகள் இருப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, வேலூர் பேரூராட்சியில் 24 மாணவர்கள் தங்கியுள்ள ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பொத்தனூர் பேரூராட்சி, வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ள 2 கூடுதல் வகுப்பறை களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
பரமத்தி வேலூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன சேமிப்பு கிடங்கி, ஊரக கிடங்கி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேமித்து வைக்கப்படும் வேளாண் விளைப்பொருட் கள் அதற்கு வழங்கப்படும் ஆதார விலை, ஏல முறை நடவடிக்கைகள் குறித்து வேளாண் அலுவலரிடம் விரிவாக கேட்டறிந்தார்.
தொடர்ந்து குமரகுருபரன் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு மேற் கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் கள ஆய்வு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, ஒன்றிய அளவில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், நடை பெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், நாமக்கல் நகராட்சி யில் புதியதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஓட்டுநர் உரிமம், போக்குவரத்து ஆவண சான்றுகள், வாகன பதிவு உள்ளிட்டவை வழங்கப் பட்ட விபரங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விரிவாக கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துணை இயக்குநர் நாசர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருகே கட்டிப்பாளை யத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (50). பால் வியாபாரி.
- சம்பவத்தன்று இரவு இவர் மாவுரெட்டிப்பட்டி அருகே வடுகபாளையத்தில் உள்ள முனியப்ப சாமி கோவில் திருவிழாவிற்கு சென்றார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருகே கட்டிப்பாளை யத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (50). பால் வியாபாரி. சம்பவத்தன்று இரவு இவர் மாவுரெட்டிப்பட்டி அருகே வடுகபாளையத்தில் உள்ள முனியப்ப சாமி கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு செல்ல தனது மொபட்டில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் பின்னால் அமர்ந்து வந்த ஒருவர் கட்டையால் பாலுசாமியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த அவரது உறவினர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாலுசாமி சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வேலகவுண்டம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுசாமியை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்தி நகருக்குள் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாந்தி மீது மோதியூள்ளது.
- இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்த சாந்தியை காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பரமத்தி வேலூர்:
கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள செம்படாபாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி (52 ) பைனான்ஸ் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (47) இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி பரமத்தி அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி நகருக்குள் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாந்தி மீது மோதியூள்ளது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்த சாந்தியை காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர் சுப்பிரமணி (50) என்பவரை கைது செய்தனர்.இந்த விபத்து குறித்த வழக்கு பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலருக்கு பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி கண்ணன் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலருக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை காவலர் கடைசியாக வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.






