search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ் சாத்தம்பூர் செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    சிவாச்சாரியார்கள் செல்லாண்டியம்மன் கோவிலில் வேத மந்திரம் ஓதிய போது எடுத்த படம்.

    கீழ் சாத்தம்பூர் செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    • நாமக்கல் மாவட்டம் பர மத்தி அருகே உள்ள கீழ்சாத் தம்பூர் கிராமத்தில் வன்னி மர கணபதி, செல்லாண் டியம்மன், கருப்பண்ண சுவாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாகராஜா உள்ளிட்ட பரிவார கோவில்க ளின் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (3-ந் தேதி) நடைபெறுகிறது.
    • நேற்று (31-ந் தேதி)காலை 8 மணிக்கு அக்னி சங்கிரகண மும், தீர்த்த சங்கிரகணமும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் மாலை முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பர மத்தி அருகே உள்ள கீழ்சாத் தம்பூர் கிராமத்தில் வன்னி மர கணபதி, செல்லாண் டியம்மன், கருப்பண்ண சுவாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாகராஜா உள்ளிட்ட பரிவார கோவில்க ளின் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (3-ந் தேதி) நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு கடந்த 28-ந் தேதி இரவு கிராம சாந்தியும், 29-ந் தேதி காலை 7-மணிக்கு விநாயகர் வழி பாடு, கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், தீபாரா தனையும், மாலை 6- மணிக்கு பஞ்ச காவ்யம், வாஸ்து பூஜையும், 30-ந் தேதி காலை 7- மணிக்கு சாந்தி ஹோமம்,திரவ்யாகுதி மற்றும் பூர்ணாகுதியும், மாலை 6- மணிக்கு சுதர்சன யாகம், மகாலட்சுமி யாகமும் நடைபெற்றது.

    நேற்று (31-ந் தேதி)காலை 8 மணிக்கு அக்னி சங்கிரகண மும், தீர்த்த சங்கிரகணமும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் மாலை முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது.

    இன்று வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி யானை, குதிரை, ஒட்டகம், பசு ஆகியவற்றுடன் தீர்த்த குடங்களுடன் எடுத்து வரும் நிகழ்ச்சியும், சலங்கை ஆட்டமும், இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல் மற்றும் விமான கண் திறப்பும், ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம் நடைபெறுகிறது.

    நாளை (2-ந் தேதி) காலை ஐந்தாம் கால யாக பூஜையும், இரவு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதலும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி யும் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (3-ந் தேதி) காலை 5-மணிக்கு விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், பிம்பசுத்தியும், 9-மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், 9.30 மணிக்கு விமான ராஜ கோபுர மகா கும்பா பிஷேகமும், 10-மணிக்கு வன்னிமர கணபதி, செல்லாண்டி யம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாக ராஜா உள்ளிட்ட அனைத்து பரிவார மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மகா அபிஷே கம், தசதானம், தசதரிசனம், கோபூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கீழ்சாத்தம்பூர் செல்லாண்டியம்மன் கோவில் பரம்பரை தர்ம கர்த்தா, கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் விலை யங்குலக் குடிப்பாட்டு பங்காளிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×