search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலைத்தேனீக்களை அகற்றிய  தீயணைப்பு துறையினர்
    X

    மலைத்தேனீக்களை அகற்றிய தீயணைப்பு துறையினர்

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள தென்னை மரத்திலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னை மரத்திலும் ஏராளமான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
    • மலைத்தேனீக்கள் அந்த வழியாக செல்பவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரை பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள தென்னை மரத்திலும் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு தென்னை மரத்திலும் ஏராளமான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

    மலைத்தேனீக்கள் அந்த வழியாக செல்பவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினரிடம் புகார் மனு கொடுத்து மலைத்தேனீக்களை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று அங்கு கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினார்கள். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    Next Story
    ×