என் மலர்
நாமக்கல்
- விவசாயிகள் சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகள் இன்று ஒன்று திரண்டு கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து சிப்காட் தொழிற்சாலை அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் சிப்காட் தொழிற்சாலைக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிலங்களை கொடுக்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சிப்காட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிப்காட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர், லத்துவாடி ஆகிய பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்று ஒன்று திரண்டு கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.
விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொது செயலாளர் பாலசுப்பிரமணியம், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, கொ.ம.தே.க. விவசாய பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ரவி, சிப்காட் எதிர்ப்பு குழு தலைவர் ராம்குமார், சரவணன், பழனிவேல், கொ.ம.தே.க. ஒன்றிய செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- முட்டை விலை மேலும் 15 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 400 காசுகளாக குறைக்கப்பட்டது.
- முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற, என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ.4.15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று மாலை நடைபெற்றக் கூட்டத்தில் முட்டை விலை மேலும் 15 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 400 காசுகளாக குறைக்கப்பட்டது.
இதை அனைத்து பண்ணையாளர்களுக்கு தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணை யாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணை யாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அன்னை சத்யா நகரில் வசிப்பவர் பிரகாஷ் (33). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இருவரும் லாரி டிரைவர்கள்.
- பிரகாஷ் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பிரகாஷ் மனைவியின் அண்ணன் மோகன்ராஜை கைது செய்தனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அன்னை சத்யா நகரில் வசிப்பவர் பிரகாஷ் (33). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இருவரும் லாரி டிரைவர்கள்.
மோகன்ராஜின் தங்கையை பிரகாஷ் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
சரமாரி தாக்குதல்
இந்த நிலையில் நேற்று மாலை பிரகாஷ் மற்றும் அவரது தம்பி சுரேஷ் ஆகியோர் மோகன்ராஜின் வீட்டின் அருகே வந்தனர். அப்போது அங்கு குடிபோதை யில் நின்று கொண்டிருந்த மோகன்ராஜ் உன்னால் தான் என் தங்கை வாழ்க்கை வீணாகிப் போனது எனக் கூறி கீழே கிடந்த கல்லை எடுத்து பிரகாஷை சரமாரி யாக தாக்கினார். இதில் பிரகாஷ் மண்டை உடைந்தது.
இதையடுத்து பிரகாஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் சத்தம்போடவே மோகன்ராஜ் அங்கிருந்து ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் பிரகாஷை மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து பிரகாஷ் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பிரகாஷ் மனைவியின் அண்ணன் மோகன்ராஜை கைது செய்தனர்.
- நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன் பட்டி உப்பிலியர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் தனக்கு வயிற்று வலி அதிக மாக இருப்பதாகவும் இருப்பி னும் வேலைக்கு சென்று வருவதாகவும் வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
- இந்நிலையில் மாலை அந்தப் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோவிந்தனுக்கு போன் செய்து உனது மகன் கார்த்திக் புத்தூர் அருகே ஒரு ஓடையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன் பட்டி உப்பிலியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (78) கூலித்தொழிலாளி. இவ ரது மகன் கார்த்திக் (24) இவர் கட்டிட மேஸ்திரி. இவரது
மனைவி சரண்யா( 20). இவர்கள் கார்த்திக்கின் தந்தை கோவிந்தன் வீட்டுக்கு அருகிலேயே குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில் கார்த்திக் தனக்கு வயிற்று வலி அதிக மாக இருப்பதாகவும் இருப்பி னும் வேலைக்கு சென்று வருவதாகவும் வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை அந்தப் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோவிந்தனுக்கு போன் செய்து உனது மகன் கார்த்திக் புத்தூர் அருகே ஒரு ஓடையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த கோவிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்து கார்த்திக்கின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோவிந்தன் வேல கவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கைலேஷ்வரன் வழக்கு பதிவு செய்து உடலை
கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக நாமக்கல் அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனார்.
- நாமக்கல் மாவட்டத்தில் மின் நிறுத்த அறிவிப்பு மின்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 8- ந் தேதி
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மின் நிறுத்த அறிவிப்பு மின்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 8- ந் தேதி மெட்டல்லா, ஆனங்கூர், சமயசங்கிலி, 12- ந் தேதி நல்லூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், மல்லசமுத்திரம், 14 -ந் தேதி நாமகிரிப்பேட்டை, இளநகர், இமல்லி, கொமரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, உப்புபாளையம், 16- ந் தேதி சேந்தமங்கலம், பரமத்திவேலூர், முசிறி, 19- ந் தேதி வளையப்பட்டி, திருச்செங்கோடு, உஞ்சனை, 20- ந் தேதி ராசிபுரம், எஸ்.வாழவந்தி, நாமக்கல், 21 - ந் தேதி காளப்பநாயக்கன்பட்டி, எருமப்பட்டி, கபிலர்மலை, பருத்திபள்ளி, வில்லிபாளையம், 26- ந் தேதி கெட்டிமேடு, பள்ளக்காபாளையம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கூடச்சேரி அருகே மேலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (41). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் ஷாலினி (13). இவர் வசந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதாக குணசேகரன் மனைவி தீபா மகள் ஷாலினியை திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஷாலினி பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த தீபா ஷாலினி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷாலினியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர்.
இதுகுறித்து குணசேகரன் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாணிக்கம்பா ளையத்தை அடுத்த இடுப்பு லியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர் தனியார் கோழிப்பண் ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
- தெரியாத வாகனம் ஒன்று செந்தில்கு மார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாணிக்கம்பா ளையத்தை அடுத்த இடுப்பு லியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35).
இவர் தனியார் கோழிப்பண் ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று நாமக்கல்லில் இருந்து இடுப்புலிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எர்ணாபுரம் சாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று செந்தில்கு மார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு தென் மண்டல எஸ்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
- எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நாமக்கல்:
நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு தென் மண்டல எஸ்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்களின் எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
டெண்டர் நீட்டிக்க கோரிக்கை
இதற்காக 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்கள் டெண்டர் மூலம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து இருந்ததால் டெண்டரை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என சங்கம் சார்பில் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்தும் அடிக்கடி சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்து வந்தனர். இந்த நிலையில் 3 ஆயில் நிறுவனங்களும் தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.
ஒப்பந்தம் கையெழுத்து
நேற்றுடன் நடைமுறையில் உள்ள டெண்டர் முடிவடைந்துள்ளதால் கால நீட்டிப்பு செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஐ.ஓ.சி. ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் கையெழுத்திட நேற்று நாமக்கல் வந்தனர்.
செல்லப்பம்பட்டியில் உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் சங்கத்தலைவர் எஸ்.எல்.எஸ்.சுந்தர்ராஜன் முன்னிலையில் சங்க உறுப்பினர்களின் வாகனங்களுக்கு ஒப்பந்த காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கடிதம் வழங்கினர்.
பின்னர் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தர்ரான் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-
சங்கத்தின் சார்பில் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான வாடகை டெண்டர் காலத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜ. தலைவர் அண்ணாமலை ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அது ஏற்கப்பட்டு 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆயில் நிறுவனங்கள் 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.
இதன் மூலம் தென் மண்டலம் மற்றும் பிற மண்டலங்களில் இயக்கப்படும் 7,500 எல்.பி.ஜி. வாகனங்களுக்கு ஒப்பந்த காலம் மேலும் 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாமக்கல் மாவட்டம் பர மத்தி அருகே உள்ள கீழ்சாத் தம்பூர் கிராமத்தில் வன்னி மர கணபதி, செல்லாண் டியம்மன், கருப்பண்ண சுவாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாகராஜா உள்ளிட்ட பரிவார கோவில்க ளின் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (3-ந் தேதி) நடைபெறுகிறது.
- நேற்று (31-ந் தேதி)காலை 8 மணிக்கு அக்னி சங்கிரகண மும், தீர்த்த சங்கிரகணமும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் மாலை முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பர மத்தி அருகே உள்ள கீழ்சாத் தம்பூர் கிராமத்தில் வன்னி மர கணபதி, செல்லாண் டியம்மன், கருப்பண்ண சுவாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாகராஜா உள்ளிட்ட பரிவார கோவில்க ளின் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (3-ந் தேதி) நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு கடந்த 28-ந் தேதி இரவு கிராம சாந்தியும், 29-ந் தேதி காலை 7-மணிக்கு விநாயகர் வழி பாடு, கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், தீபாரா தனையும், மாலை 6- மணிக்கு பஞ்ச காவ்யம், வாஸ்து பூஜையும், 30-ந் தேதி காலை 7- மணிக்கு சாந்தி ஹோமம்,திரவ்யாகுதி மற்றும் பூர்ணாகுதியும், மாலை 6- மணிக்கு சுதர்சன யாகம், மகாலட்சுமி யாகமும் நடைபெற்றது.
நேற்று (31-ந் தேதி)காலை 8 மணிக்கு அக்னி சங்கிரகண மும், தீர்த்த சங்கிரகணமும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் மாலை முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி யானை, குதிரை, ஒட்டகம், பசு ஆகியவற்றுடன் தீர்த்த குடங்களுடன் எடுத்து வரும் நிகழ்ச்சியும், சலங்கை ஆட்டமும், இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல் மற்றும் விமான கண் திறப்பும், ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம் நடைபெறுகிறது.
நாளை (2-ந் தேதி) காலை ஐந்தாம் கால யாக பூஜையும், இரவு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதலும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி யும் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (3-ந் தேதி) காலை 5-மணிக்கு விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், பிம்பசுத்தியும், 9-மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், 9.30 மணிக்கு விமான ராஜ கோபுர மகா கும்பா பிஷேகமும், 10-மணிக்கு வன்னிமர கணபதி, செல்லாண்டி யம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீர சாமி, புற்றுக்கண் நாக ராஜா உள்ளிட்ட அனைத்து பரிவார மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மகா அபிஷே கம், தசதானம், தசதரிசனம், கோபூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடு களை கீழ்சாத்தம்பூர் செல்லாண்டியம்மன் கோவில் பரம்பரை தர்ம கர்த்தா, கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் விலை யங்குலக் குடிப்பாட்டு பங்காளிகள் செய்து வருகின்றனர்.
- 107 வாக னங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
- அதில் 15 சொந்த வாகனங்கள் வாடகை வாகனங்களாக இயக்கப்பட்டது சோதனை யில் உறுதி செய்யப்பட்டது.
ராசிபுரம்:
நாமக்கல் கலெக்டர் உமா உத்தரவின் பேரில் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் வாகன தணிக்கை செய்தார்.
அப்போது 107 வாக னங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அதில் 15 சொந்த வாகனங்கள் வாடகை வாகனங்களாக இயக்கப்பட்டது சோதனை யில் உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி அந்த 15 வாகனங்களும் சிறைபிடிக்கப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராத தொகை மற்றும் சாலை வரியாக ரூ. 2 லட்சத்து 67 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதர வாகனங்களுக்கு சாலை வரியாக ரூ.65 ஆயிரத்து 300-ம், இணக்க கட்டணமாக ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 500-ம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த தகவலை ராசி புரம் மோட்டார் வாகன ஆய்வா ளர் நித்யா தெரிவித்தார்.
- ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் லேசான மழை பெய்தது.
- இரவு நேரத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரங்களில் லேசான மழை பெய்தது. நேற்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது.
பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்ட போதிலும் நேற்று இரவு ராசிபுரம் ஆண்டகளூர்கேட், காக்காவேரி, குருக்கபுரம் மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக வயல்களிலும் ஆங்காங்கே உள்ள பள்ளங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இரவு நேரத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம்’’ குறித்து ஆவல்நாய்க்கன்பட்டி கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது.
- உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் 'கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம்'' குறித்து ஆவல்நாய்க்கன்பட்டி கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது. அதுசமயம் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது. மேலும் முக்கிய திட்டங்களில் உள்ள இடை வெளியினை குறைக்கும் வகையில் விவசாயிகளின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் அவர்க ளின் வருமானத்தை உயர்த்திடவும் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய "மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம்" கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றது என்று விளக்கமளித்து பயிற்சி வழங்கினார். இதில் உடன் உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி துறைசார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினார். அட்மா திட்ட உழவனின் நண்பன் நந்தகுமார் அட்மா திட்ட செயல்பாடுகள் மற்றும் இக்குழுவின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர். ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர். கவிசங்கர் ஆகியோர் வருகைபுரிந்த விவசாயி களுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






