என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • சுமித் குமார் பஸ்சில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • வட மாநில தொழிலாளி பஸ்சில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்து பலியானார்.

    பரமத்திவேலூர்

    ஜார்க்கண்ட் மாநிலம் சார்ட்பார்வா பாலமு, மணிகா ரப்டா பகுதியைச் சேர்ந்தவர் சுமித் குமார். இவர் மதுரை பகுதியில் உள்ள ஒரு பில்டிங் காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தார்.

    அந்த காண்டாக்ட் நிறுவனத்திற்கு மேலும் ஆட்கள் தேவைப்படுவதாக அந்த நிறுவனத்தினர் கூறியதை அடுத்து சுமித்குமார் ஜார்கண்ட் மாநிலம் சென்று 18 பேர்களை வேலைக்கு அழைத்துக் கொண்டு நேற்றுமுன்தினம் சேலத்தில் இருந்து மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நன்செய் இடையாறு செல்லும் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பஸ்சில் பயணம் செய்த வட மாநில தொழிலாளி அரசு பஸ்சில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பஸ்சில் இருந்து உடன் வந்தவர்கள் ஒருவர் கீழே விழுந்து விட்டார் பஸ்சை நிறுத்துங்கள் என அவருடன் வந்தவர்கள் சத்தமிட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓட்டுநர் பஸ் நிறுத்தி பஸ்சில் வந்த 18 பேர்களையும் கீழே இறக்கி விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சென்று விட்டார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் பஸ்சில் இருந்து கீழே விழுந்து பலியான வட மாநிலத் தொழிலாளர் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பஸ்சில் இருந்து பலியான வடமொநிவ தொழிலாளர் யார் என்பது குறித்து போலீசார் நடத்தி விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலம், சார்பார்வா பாலமு, மணிகா ரப்டா பகுதியை சேர்ந்த சார்க் புய்யான் (52) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு வேலூர் அரசு மருத்து வமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அரசு பஸ் ஓட்டுனர் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (49) மற்றும் நடத்துனர் மதுரை, கூடல் நகர் பகுதியில் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (42) ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்களுக்கு காசநோய் பாதிப்பு அறிகுறிகள் உள்ளதா என கண்டறிய பரிசோதனை

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பில் பள்ளிபாளையம் ஒன்றியம் களி யனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆவத்திபாளையம் குடி யிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு காசநோய் பாதிப்பு அறிகுறிகள் உள்ளதா என கண்டறிய பரிசோதனை நடந்தது.

    நடமாடும் அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் சளி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட காச நோய் துறை துணை இயக்கு னர் வாசுதேவன், மருத்துவ அலுவலர் திவ்யா, களிய னூர் ஊராட்சி தலைவர் ரவிகுழந்தைவேல், துணை தலைவர் வெங்கடேசன் மற்றும் சுகாதார துறை அதி காரிகள் கலந்து கொண்டனர்.

    • வரதம்மாள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
    • பாண்டியன் கீழ்பா லப்பட்டிக்கு வந்து தாயாருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு தங்கையுடன் தங்கி இருந்தார்.

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே கொமரா பாளையம் ஊராட்சி கீழ்பாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மனைவி வரதம்மாள். செல்லமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பாண்டியன் (55) என்ற மகனும், சியாமளா (48) என்ற மகளும் உள்ளனர்.

    கூலி தொழிலாளியான பாண்டியனுக்கு திருமண மாகி 2 மனைவிகளுடன் மணப்பள்ளி பகுதியில் வசித்து வந்தார். சியாமளா விற்கு திருமணமாகி கணவ ருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து தாய் வரதம்மாள் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் வர தம்மாள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பாண்டியன் கீழ்பா லப்பட்டிக்கு வந்து தாயாருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு தங்கையுடன் தங்கி இருந்தார். இதனிடையே அண்ணன், தங்கை இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உள்ளது. தாய் இறந்த நாளில் இருந்து அடிக்கடி இருவரும் ஒன்றாக மது குடித்து வந்தனர். அதன்படி நேற்றும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர்.

    அடித்துக் கொலை

    அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன்பின்னர் பாண்டியன் போதையில் தூங்கி விட்டார். எனினும் ஆத்திரத்தில் இருந்த சியாமளா வீட்டில் இருந்த அடுப்பு ஊதும் இரும்பு குழ லால் பாண்டியன் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையடுத்து சியாமளா பாண்டியன் மகன் தனபால் என்பவரிடம் உனது தந்தை கீழே தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் பதறியடித்து கொண்டு தனபால் கீழ்பா லப்பட்டிக்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதா ர். தலையில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    சிறையில் அடைப்பு

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து சம்பவ

    இடத்திற்கு சென்று பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் பாலப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்ற சியாமளாவை கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 98 வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு இடித்து அகற்றம்
    • எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் இடிக்கப் பட்ட இடத்திற்கு அருகி லேயே இடம் ஒதுக்க வேண்டும் என அங்கு வசித்தவர்கள் கூறி வந்தனர்.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் சரளை மேடு காமராஜர் நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 98 வீடுகள் நீதிமன்ற உத்த ரவுப்படி கடந்த ஆண்டு இடித்து அகற்றப்பட்டது.

    மாற்று இடம்

    அப்போது அங்கு வசித்த மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தருவதாக அதி காரிகள் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் இடிக்கப் பட்ட இடத்திற்கு அருகி லேயே இடம் ஒதுக்க வேண்டும் என அங்கு வசித்தவர்கள் கூறி வந்த னர். இது தொடர்பாக கடந்த வாரம் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவ லகத்தில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    வாயில் கருப்பு துணி கட்டி

    இந்த நிலையில் நேற்று சுமார் 50-க்கும் மேற்பட் டோர் வாயில் கருப்பு துணி கட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.மாற்று இடம் வழங்கப்ப டாததை கண்டித்து தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், மாற்று இடம் தருவதாக கூறிய அதி காரி கள். எங்களது ஊராட்சியில் இடம் ஒதுக்கவில்லை. மேலும் ஆக்கிரமிப்பும் முழுமையாக அகற்றப்பட வில்லை என்றனர். இதை யடுத்து அவர்களை அதி காரிகள் சமாதானப்படுத்தி மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    • நிலத்தை விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.
    • சொத்து பிரச்சினை தொடர்பாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் பாவாயி (வயது 75). இவரது மகன் ராசு (55). விவசாயி.

    இந்த நிலையில் பாவாயிக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்பது தொடர்பாக தாய், மகன் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.

    நிலத்தை விற்பதற்கு பாவாயி கையெழுத்திட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராசு கடும் விரக்தி அடைந்தார்.

    இதனிடையே சொத்தை விற்பதற்கு கையெழுத்து கேட்டு ராசு அடிக்கடி தகராறு செய்து வந்ததால் மனம் உடைந்த பாவாயி நேற்று இரவு வீட்டின் ஒரு அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தாய் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது மகன் ராசு அதிர்ச்சியில் உறைந்தார். தாயின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    தனது தாய் உயிரை மாய்த்து விட்டார், இனிமேல் நான் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்த ராசு வீட்டில் வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டார். இதனால் வயிறு வலிக்கவே சத்தம் போட்டு ராசு கதறினார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ராசு வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்தார்.

    உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராசுவை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து ஜேடர்பாளையம் போலீசார், பாவாயி உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப் பதிவு செய்து தாய்-மகன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    சொத்து பிரச்சினை தொடர்பாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
    • முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். கடந்த செப். 2-ந்தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.15-ல் இருந்த 15 பைசா குறைக்கப்பட்டு ரூ. 4.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 20 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.20ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    முட்டை விலை குறைந்ததால், ஒரு சில பண்ணைகளில் வியாபாரிகள் என்இசிசி விலையை விட மைனஸ் விலைக்கு முட்டையை கேட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் மூலம் பல லட்சம் முட்டைகள் என்இசிசி விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் முட்டை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

    என்இசிசி விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 475, பர்வாலா 477, பெங்களூர் 460, டெல்லி 483, ஹைதராபாத் 440, மும்பை 485, மைசூர் 460, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 420, கொல்கத்தா 555.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 122 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் நகரை பொறுத்த வரை கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்கங்களில் மழைநீர் தேங்கியது.

    கொசுப்புழு ஒழித்தல்

    இதையடுத்து நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    மேலும் வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தல், கொசுப்புழு ஒழித்தல் உள்ளிட்ட பணிகளில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி வாரம் தோறும் வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தினமும் 45 பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட 12 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் உத்தரவின்படி நகராட்சி பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், வீடுகளின் முன்புறம் உள்ள தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.

    டெங்கு

    இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திருமூர்த்தி கூறுகையில் மழைக் காலங்களில் கொசுவால் ஏற்படும் நோய்களை தடுக்க நகராட்சி பகுதியில் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் டெங்கு பரவலை தடுக்க முடியும் என்றார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.
    • நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், பழி பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அசைவ பூஜை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு சங்கிலி கருப்பண்ணசாமி, பொன்னாச்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தக் குடங்களுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து பச்சை பூஜையும்,அபிஷேக ஆராதனையும் நடைபெ ற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், பழி பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அசைவ பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கிலி கருப்பண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்புணிகுழு, குடிப்பட்டு மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வேகமாக ஓடி உள்ளார்.
    • வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது 3 பவுன் தங்கச் செயின், 2 பவுன் தங்க கைச்செயின் என மொத்தம் 5 பவுனை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் எம். ராசாம்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் பாவாயி (57).இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி அன்று இரவு 9 மணி அளவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வேகமாக ஓடி உள்ளார்.

    அதை பார்த்த பாவாயி திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடி மறைந்து விட்டார். பாவாயி வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது 3 பவுன் தங்கச் செயின், 2 பவுன் தங்க கைச்செயின் என மொத்தம் 5 பவுனை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து பாவாயி மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் சதீஷ்குமார் (31) என்பவரை கைது செய்து ஏற்கனவே சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் தீவிர விசாரணை நடத்தியதில் மற்றொரு குற்றவாளியான நாமக்கல் வீசாணம் வீனஸ் காலனியைச் சேர்ந்த சக்திவேல் மகன் மணிபாரதி (24) என்பவரை நேற்று கைது செய்து அவரிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • குழுக்கூட்டத்திற்கு விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், உழவனின் நண்பர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.
    • துறை சார்ந்த பயிற்சிகள், இடுபொருள் குறித்தும், உழவர் சந்தை, சேமிப்பு கிடங்கு குறித்தும் வருகை புரிந்த விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கும் உழவனின் நண்பர்களுக்கும்விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு, மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.

    நாமக்கல் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலை வகித்தார்.

    விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பழனிவேல், தலைமைவகித்தார். குழுக்கூட்டத்திற்கு விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், உழவனின் நண்பர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் செயல்பாடுகள் திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும், பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

    மேலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, பட்டுவளர்ச்சித் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின் மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் வழங்கப்படும் தடுப்பூசி முகாம்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள். துறை சார்ந்த பயிற்சிகள், இடுபொருள் குறித்தும், உழவர் சந்தை, சேமிப்பு கிடங்கு குறித்தும் வருகை புரிந்த விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கும் உழவனின் நண்பர்களுக்கும்விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நாமக்கல் வட்டார வேளாண்மை அலுவலர் மோகன், கால்நடை உதவி மருத்துவர், வெள்ளைசாமி, பட்டு உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி, ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த மானியத்திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.

    மேலும் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் அட்மா திட்ட பணியின் முன்னேற்றம் குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், உழவன் செயலி செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

    • நாமக்கல் மாவட்டம் வளப்பூர் நாடு பஞ்சாயத்து பகுதியில் ஆகாய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
    • கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    கொல்லிமலை:

    கொல்லிமலை ஆகாய நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் வளப்பூர் நாடு பஞ்சாயத்து பகுதியில் ஆகாய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.

    இது கடல் மட்டத்திலிருந்து 1350 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1200 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும்.

    தற்போது கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

    • கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளு படி செய்து கடந்த 2021 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
    • பேளுக்குறிச்சி கூட்டுறவு சடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் காரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கண்டறியப்பட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கர்ணன், கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது-

    சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கோவிந்தராஜ் (55) என்பவர் கடந்த 2021 ஆண்டு முதல் பொறுப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளு படி செய்து கடந்த 2021 ல் தமிழக அரசு உத்தரவிட்டது. 2021 மார்ச் 31-ந் தேதி வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் இந்த சலுகை என அரசு அறிவித்திருந்தது.

    பேளுக்குறிச்சி கூட்டுறவு சடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் காரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கண்டறியப்பட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் செயலாளராக (பொறுப்பு) பணியாற்றிய கோவிந்தராஜ் சங்க உறுப்பினர் யுவராணியிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அவரது பெயரில் 29.1.2021 ந் தேதியில் 30 கிராம் தங்க நகையை வைத்து பெறப்பட்ட 99 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்து தருவதாக கூறி உள்ளார். மேலும் அதே சங்கத்தில் நகை கடன் பெற்றிருந்த கீர்த்தனா, சீனிவாசன், சந்திரா, பெருமாள், மற்றும் சிலம்பரசன் ஆகியோரிடமும் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் கந்த சாமி என்பவரிடம் நகைக்கடன் தள்ளுபடி செய்ய கடந்த 28.3.2022 அன்று ரூ.1500 லஞ்சமாக பெற்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த புகார் குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சுபாஷினி விசாரணை நடத்தினார். இதையடுத்து கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கி உள்ளனர். 

    ×