என் மலர்
நாகப்பட்டினம்
- மதுபான கடைக்கு மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.
- தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் அந்தனப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 21). இவர் தனது நண்பர்க ளோடு காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினத்திற்கு உள்ள தனியார் மதுபான கடைக்கு மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவருடன் உடன் சென்ற நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் கோகுலை நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கோகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வாலிபரின் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை யில் சேர்த்த அவரது நண்பர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நண்பர்களோ டு மது அருந்த சென்ற 21 வயது வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் அவரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது. கோகுல் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இறந்தாரா, அல்லது வேறு காரணமாக என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- ஒரு லட்சம் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
- முன்னதாக பள்ளி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரயும் வரவேற்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் வேம்பதேவன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தனவதி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரயும் வரவேற்றார்.வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் ராமமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயந்தி, கிராம தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
- சோதனையில் ஏட்டு கோடீஸ்வரன் மது அருந்தி இருப்பது தெரியவந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு ஒரு பயணி நின்றார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட வெளிப்பாளையம் போலீஸ் ஸ்டேசன் ஏட்டு கோடீஸ்வரன்(33) அந்த பயணியிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏட்டு கோடீஸ்வரன் அந்த பயணியை லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அந்த பயணியை லத்தியால் தாக்கி யது சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் பயணியை தாக்கியது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்கிற்கு தகவல் தெரிந்தது. உடனே இரவு ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜிடம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய எஸ்பி உத்தரவிட்டார். இதன்பே ரில் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் போலீஸ் காரர் பயணியை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஏட்டு கோடீஸ்வரனை சோதனை செய்ய நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் குழுவினர் சோதனை செய்ததில் ஏட்டு கோடீஸ்வரன் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் மது அருந்தி ஒழூங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஏட்டு கோடீஸ்வரனை சஸ்பெ ண்ட் செய்து எஸ்பி ஹர்ஷ்சிங் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
- குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
- நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமையான இன்று மனுக்கள் அளிப்பதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் குவிந்து இருந்தனர்.
இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தை பார்த்தவுடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு, அலுவலக தரைத்தளம் உள்ளிட்ட மூன்று தளங்களில் இருந்த அனைவரும் பாதுகாப்பு கருதி அலுவலகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
விரைந்து வந்து நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.
தீ விபத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலக சேமிப்பு கிடங்கு அறையில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த சுமார் 5000 செட்டாப் பாக்ஸ் கருவிகள் பெரும்பாலானவை எரிந்து நாசமானது.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அலுவலகத்தை பூட்டிவிட்டு ஓடிய அதிகாரிகளும், மனு அளிக்கவந்த பொதுமக்களும் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. இது குறித்து ேபாலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- சுவாமி, நந்திக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த நாலு வேதபதியில் ஆனந்த வள்ளி சமேத அமராபதீஸ்வரர் கோவில் உள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆனி மாத சனிப்பிரதோஷத்தை யொட்டி சுவாமிக்கும், நந்திக்கும் மஞ்சள், பால், இளநீா், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின், சுவாமி, நந்திக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
முன்னதாக புனிதநீர் அடங்கிய கடங்கள் பூஜையில் வைக்கப்பட்டு ஆனந்த சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, கடங்கள் எடுத்து வரப்பட்டு சுவாமி, நந்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதுகுறித்து ஆனந்த சிவாச்சாரியார் கூறிய தாவது:-
உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசையிலும், தட்சணா யன புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசையிலும், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையிலும் நமது முன்னோர்களை நினைத்து வீட்டிலேயோ, தீர்த்த கரையிலோ தர்ப்ப ணம் செய்து வழிபட வேண்டும்.
பின், வீட்டில் சமையல் செய்து காக்கைக்கு உணவு அளித்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினால் நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிப்பார்கள்.
ஒவ்வொ ருவரும், அமாவாசையில் இந்த காரியங்களை செய்து வழிபட்டால் அவரது குடும்பம் செழிப்படையும் என்றார்.
இதேபோல், சனி பிரதோ ஷத்திலும் கோவிலுக்கு சென்று சுவாமியையும், நந்தியையும் அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து வழிபட்டால் குடும்பம் விருத்தியடையும் என்றார்.
முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பொருப்பாளர்கள் செய்திருந்தனர்.
- பொதுமக்களுக்கு ஈ.சி.ஜி. மற்றும் பொது மருத்துவம் அளிக்கப்பட்டது.
- 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்ட வன் முன்னிலை வைத்தார் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல்,இரத்த அழுத்தம் கண்டறிதல், ரத்தக்கொதிப்புக்கான சிகிச்சைகள், தைரா ய்டு,ஆஸ்துமா, சுவாசக் கோளாறு சிகிச்சைகள், தலைவலி, உடல் வலி,காய்ச்சலுக்கான சிகிச்சைகள், உடல் பருமன் அளவீடு, ஈசிஜி மற்றும் பொது மருத்துவம் செய்யப்பட்டது.
இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன்,ஒன்றிய பொறியாளர் செந்தில், ஒன்றிய குழு உறுப்பினர் பேபிசரளா பக்கிரிசாமி,ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் திருப்புகலூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன் 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்
- தங்கசாமியை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
காரைக்கால் துறை முகத்திலிருந்து கடந்த 14 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்ப டையில் மோகன், இளையராஜா,ரகு, மணி, குமார் உள்ளிட்ட 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக நாகை நம்பியார்நகரை சேர்ந்த தங்கசாமி என்பவர் படையிலிருந்து நிலை தடுமாறி மாமல்லபுரம் அருகே 12 நாட்டிக்கல் மயில் தொலைவில் கடலில் விழுந்ததார்.
இதனையடுத்து சக மீனவர்களும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் மாயமானதால் உடனடியாக காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் கிராம நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து காரைக்காலில் துறைமுக த்திலிருந்து 12 விசை ப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கசாமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசு சார்பில் விமானம் மற்றும் கப்பல் மூலமும் தேடும் பணியை தொடங்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
- மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிகாலையிலேயே அதிகளவில் திரண்டனர்.
- கடந்த வாரம் ரூ.500-க்கு விற்ற சங்கரா மீன் ரூ.400 விற்பனையாகி உள்ளது.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் புஷ்பவனம், கோடியக்கரை, உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசை படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன்வர்கள் இன்று ஞாயிற்று கிழமை என்பதால் அதிகாலை கரை திரும்பினர். மீன்களை வாங்குவதற்கு மீன்பிரி யர்கள், மீன் வியாபாரிகள் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் நாகை துறைமுகத்தில் திரண்டனர்.
ஒரு சில விசை படகுகளில் அதிக அளவில் கனவா மீன்களும் ஏற்றுமதிக்காக இறால் நண்டுகள் என கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் கூட, நாளை ஆடி அமாவாசை என்பதால் விற்பனை சற்று மந்தமாக இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதாவது கடந்த வாரம் ரூ500 விற்ற சங்கரா 400 க்கு விற்பனையாகி உள்ளது.
கேரள மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இரண்டு மாதம் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் அதிக அளவில் கேரள மீன் வியாபாரிகள் மீன்கள் வாங்குவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக முகாமிட்டு இன்று மீன்களை அதிக அளவில் வாங்கி கொண்டு கனரக வாகன மூலம் கேரளாவுக்கு செல்கின்றனர்.இதே போல் திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன் வியாபாரிகள் மீன்கள் வாங்க வந்துள்ள நிலையில் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மீன் பிரியர்கள் ஏராளமானோர் துறைமுகத்தில் குவிந்துள்ளதால் நாகை மீன்பிடித் துறைமுகம் களைக்கட்டி உள்ளது.
மீன்களின் விலையை பொருத்தவரை வஞ்சரம் ஒரு கிலோ 650- 900, பாறை 350 முதல் 450,சீலா 400 முதல் 450,கண்ணாடி பாறை 400 முதல் 450,இறால் 400 முதல் 500 க்கும் விற்பனையாகிறது
- உத்திரிய மாதா ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தேரை மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா கோவில் ஆண்டு திருவிழா கடந்த 6, ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மாதா கோவிலின் முக்கிய திருவிழாவான தேர்பவனி நேற்று விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.
தேரானது வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபொழுது இருபுறமும் நின்றிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித உத்திரியமாதா,செபஸ்தியர், அந்தோணியர் ஆகிய தேர் மீது மலர்களை தூவி தங்க ளுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.
தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
- பாலத்தை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
- வெள்ளையாற்றில் படகு குழாம் அமைத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்.
நாகப்பட்டினம்:
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முரு கன் தலைமையி லான தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி, பழனியாண்டி, மோகன், ராமலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி செருதூர் மீனவ கிரா மத்தின் இடையே வெள்ளையாறில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது வெள்ளை யாற்றை தூர்வாரி தரைதட்டாமல் படகுகள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கிராம மீனவர்கள் கோரிக்கைமனு அளித்தனர்.
மேலும் வெள்ளையாற்றில் படகு குழாம் அமைத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டுமென மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கோரிக்கை குழுவினருக்கு விடுத்தார்.
தொடர்ந்து வெள்ளப்ப ள்ளம் மீனவ கிராமம், நாகை ஆதிதிராவிட நல விடுதி, நாகை அரசு மருத்துவமனை, நாகை புயல் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இதில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பின்னல் ஜடைகளுடன் போஸ் கொடுத்து மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.
- தேர்வு செய்யப்படுகின்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
நாகப்பட்டினம்:
பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கத்தின் சார்பாக நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான நடனம் மற்றும் பல்வேறு போட்டிகள் நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி உள்ள ஆண்டவர் கல்லூரியில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் புதுக்கோட்டை தஞ்சாவூர் மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து 12 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கல்வி மற்றும் பிற செயல்பாடுகளில் மாணவிகள் மேலோங்கி வர மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஊக்குவிப்பு தொடர்பான பாடல்கள் முதல் பின்னல் கோலாட்டம் என வித்தியாசமான மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வை யாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
தொடர்ந்து 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகளுக்கு இடையில் நடைபெற்ற சிகை அலங்கார போட்டியில் வித்தியாசமான முறையில் பின்னல் ஜடைகளுடன் போஸ் கொடுத்து மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.
இதைப்போல சுற்றுச்சூழல் மாசுபடுதல், இயற்கை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை தங்களின் முகங்களில் வரைந்து முக ஓவிய போட்டியில் வண்ணமயமான முகங்களுடன் மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற மெஹந்தி போட்டியில் கை முழுவதும் மருதாணிகள் போட்டு தங்களுடைய திறமைகளை நர்சிங் கல்லூரி மாணவிகள் வெளிப்படுத்தினர்.
மண்டல அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்படுகின்ற மாணவிகள் அடுத்த மாதம் மாநில அளவில் சேலத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
- பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றம் அமைக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி அளவில் விளையாட்டு விழா நடத்த வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிஷாந்தி தலைமை தாங்கினார்.
முன்னதாக ஆசிரியர் மாணிக்கம் அனைவரையும் வரவே ற்றார். தலைமை யாசிரியர் தெட்சணாமூர்த்தி கூட்டப் பொருள் குறித்து பேசினார்.
துணை தலைவர் உமா மகேஸ்வரி, கல்வியாளர் ஆர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் அம்சவல்லி, அனீஸ் பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றம் அமைப்பது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி அளவில் விளையாட்டு விழா நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.
முடிவில் பள்ளி ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.






