search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரியமாதா தேர்பவனி
    X

    சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய மாதா.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரியமாதா தேர்பவனி

    • உத்திரிய மாதா ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரை மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா கோவில் ஆண்டு திருவிழா கடந்த 6, ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மாதா கோவிலின் முக்கிய திருவிழாவான தேர்பவனி நேற்று விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.

    தேரானது வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபொழுது இருபுறமும் நின்றிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித உத்திரியமாதா,செபஸ்தியர், அந்தோணியர் ஆகிய தேர் மீது மலர்களை தூவி தங்க ளுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

    தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    Next Story
    ×