என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • விழா பள்ளியின் தலைமையாசிரியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
    • முன்னதாக ஆசிரியர் வேம்பையன் அனவைரையும் வரவேற்றார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பன்னாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா பள்ளியின் தலைமையாசிரியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

    தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை வில்லவன் கோதை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக ஆசிரியர் வேம்பையன் அனவைரையும் வரவேற்றார்.

    கலை இலக்கிய, பண்பாட்டு பயிற்றுநர் தென்னடார் அம்பிகாபதி சிறப்புரையாற்றினார்.

    இதில் ஆசிரியர் ரமேஷ் குமார், தர்மதுரை, யூடஸ் சுகிலா, வீரமணி, சித்ரா, பிரதீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • நாய் அப்புவிற்கு பிடித்த பிரியாணி, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் படையல் இடப்பட்டது.
    • கால்நடை டாக்டர்கள், உதவியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் வருகை தந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் வசிப்பவர் தர்மலிங்கம் (வயது 46). அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி அமுதா (40).

    இந்த தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் அவர்கள் அப்பு என்ற நாய்க்குட்டியை குழந்தை போல் பாசமாக கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்றுகொண்டிருந்த நாய்க்குட்டி மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனை கண்ட தர்மலிங்கமும், அவரது மனைவியும் கதறி அழுதனர்.

    பின்னர், நாய் அப்புவின் உடலை அவர்களது தோட்டத்திலேயே புதைத்து மனிதர்களுக்கு செய்வது போல் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இறந்த நாய்க்கு படத்திறப்பு விழா நடத்த முடிவு செய்து, விழா அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் 'வாட்ஸ்-அப்'-பில் அனுப்பினர். இந்நிலையில், நேற்று நாய் அப்புவிற்கு படத்திறப்பு விழா நடந்தது.

    அப்புவின் உருவபடத்தை கருப்பம்புலம் அரசு கால்நடை தலைமை மருத்துவர் மீனாட்சி சுந்தரம் திறந்து வைத்து மாலை அணிவித்தார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் அப்புவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    நாய் அப்புவிற்கு பிடித்த பிரியாணி, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் படையல் இடப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி கால்நடை டாக்டர்கள், உதவியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் வருகை தந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 7-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் வேதநாயகி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    • மக்காத குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
    • மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 'என் குப்பை எனது பொறுப்பு' விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் சுதா, கணேஷ், வனிதா, சதீஷ், கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் குப்பைகளை கையாளும் முறைகள் குறித்தும், மக்காத குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் மாணிக்கம் நன்றி கூறினார்.

    • தீபக் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
    • தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் மேலக்காடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் தீபக் (வயது 16).

    இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு ஐ.டி.ஐ-யில் சேர்ந்துள்ளார்.

    இவர், அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரிடம் பேசி, பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று தீபக் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதை பார்த்த பெண்ணின் பெற்றோர் தீபக்கை திட்டி கண்டித்ததாக தெரிகிறது.

    இதில் மனமுடைந்து வீட்டிற்கு திரும்பிய தீபக், தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தீபக்கின் தந்தை குமார் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டா் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தண்ணீர் வாய்க்காலில் புகுந்து வயல்களில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
    • நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரை ஊராட்சி தென்கரை வழியாக தென்கரை பாசன வாய்க்கால் வடக்கு புத்தாறு ஆற்றில் இருந்து பிரிந்து செல்கிறது.இந்த வாய்க்காலின் மூலம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.

    இந்த நிலையில் தென்கரை பாசன வாய்க்காலில் தலைப்பில் உள்ள மதகில் உள்ள கதவனை சேதமடைந்து உள்ளது.இதனால் விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் தண்ணீரை திறந்து தேவையற்ற நேரத்தில் அடைத்து வைக்க முடியாத நிலை உள்ளது.மேலும் மழை வெள்ள காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களிலும் தண்ணீர் வாய்க்காலில் புகுந்து வயல்களில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

    இதனால் விவசாய நிலங்கள் பாதிப்பு க்குள்ளாகும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த வாய்க்கால் கதவணையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுபான கடைக்கு மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.
    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் அந்தனப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 21). இவர் தனது நண்பர்க ளோடு காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினத்திற்கு உள்ள தனியார் மதுபான கடைக்கு மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அவருடன் உடன் சென்ற நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் கோகுலை நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கோகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வாலிபரின் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை யில் சேர்த்த அவரது நண்பர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    இச்சம்பவம் குறித்து காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நண்பர்களோ டு மது அருந்த சென்ற 21 வயது வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் அவரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது. கோகுல் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இறந்தாரா, அல்லது வேறு காரணமாக என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • ஒரு லட்சம் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • முன்னதாக பள்ளி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரயும் வரவேற்றார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் வேம்பதேவன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தனவதி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரயும் வரவேற்றார்.வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் ராமமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயந்தி, கிராம தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
    • சோதனையில் ஏட்டு கோடீஸ்வரன் மது அருந்தி இருப்பது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு ஒரு பயணி நின்றார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட வெளிப்பாளையம் போலீஸ் ஸ்டேசன் ஏட்டு கோடீஸ்வரன்(33) அந்த பயணியிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏட்டு கோடீஸ்வரன் அந்த பயணியை லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் அந்த பயணியை லத்தியால் தாக்கி யது சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் பயணியை தாக்கியது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்கிற்கு தகவல் தெரிந்தது. உடனே இரவு ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜிடம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ய எஸ்பி உத்தரவிட்டார். இதன்பே ரில் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் போலீஸ் காரர் பயணியை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஏட்டு கோடீஸ்வரனை சோதனை செய்ய நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் குழுவினர் சோதனை செய்ததில் ஏட்டு கோடீஸ்வரன் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் மது அருந்தி ஒழூங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஏட்டு கோடீஸ்வரனை சஸ்பெ ண்ட் செய்து எஸ்பி ஹர்ஷ்சிங் உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

    • குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமையான இன்று மனுக்கள் அளிப்பதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் குவிந்து இருந்தனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக 3-வது தளத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ விபத்தை பார்த்தவுடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்பட்டு, அலுவலக தரைத்தளம் உள்ளிட்ட மூன்று தளங்களில் இருந்த அனைவரும் பாதுகாப்பு கருதி அலுவலகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

    விரைந்து வந்து நாகை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

    தீ விபத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலக சேமிப்பு கிடங்கு அறையில் வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த சுமார் 5000 செட்டாப் பாக்ஸ் கருவிகள் பெரும்பாலானவை எரிந்து நாசமானது.

    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அலுவலகத்தை பூட்டிவிட்டு ஓடிய அதிகாரிகளும், மனு அளிக்கவந்த பொதுமக்களும் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. இது குறித்து ேபாலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • சுவாமி, நந்திக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த நாலு வேதபதியில் ஆனந்த வள்ளி சமேத அமராபதீஸ்வரர் கோவில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆனி மாத சனிப்பிரதோஷத்தை யொட்டி சுவாமிக்கும், நந்திக்கும் மஞ்சள், பால், இளநீா், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், சுவாமி, நந்திக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    முன்னதாக புனிதநீர் அடங்கிய கடங்கள் பூஜையில் வைக்கப்பட்டு ஆனந்த சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, கடங்கள் எடுத்து வரப்பட்டு சுவாமி, நந்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இதுகுறித்து ஆனந்த சிவாச்சாரியார் கூறிய தாவது:-

    உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசையிலும், தட்சணா யன புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசையிலும், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையிலும் நமது முன்னோர்களை நினைத்து வீட்டிலேயோ, தீர்த்த கரையிலோ தர்ப்ப ணம் செய்து வழிபட வேண்டும்.

    பின், வீட்டில் சமையல் செய்து காக்கைக்கு உணவு அளித்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினால் நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிப்பார்கள்.

    ஒவ்வொ ருவரும், அமாவாசையில் இந்த காரியங்களை செய்து வழிபட்டால் அவரது குடும்பம் செழிப்படையும் என்றார்.

    இதேபோல், சனி பிரதோ ஷத்திலும் கோவிலுக்கு சென்று சுவாமியையும், நந்தியையும் அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து வழிபட்டால் குடும்பம் விருத்தியடையும் என்றார்.

    முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பொருப்பாளர்கள் செய்திருந்தனர்.

    ×