search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம்
    X

    விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம்

    • குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்பட்டது.
    • 43 கிராமங்களில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டது.

    நாகப்பட்டினம்,

    நாகப்பட்டினம் கீழ்வேளூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமை தாங்கினார்.

    வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன் முன்னிலை வகித்தார். கீழ்வேளூர் வட்டார அளவில் 43 கிராமங்களில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் 20 விவசாயிகளுக்கு யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், பேரூராட்சி மன்ற தலைவர் இந்திராகாந்தி, துணைத் தலைவர் சந்திரசேகரன், ஆத்மாகுழு உறுப்பினர்கள் பழனியப்பன், அட்சயலிங்கம், துணை வேளாண்மை அலுவலர் பிரான்சிஸ், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×