search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
    X

    விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

    அரசு பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

    • மக்காத குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
    • மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 'என் குப்பை எனது பொறுப்பு' விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் சுதா, கணேஷ், வனிதா, சதீஷ், கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் குப்பைகளை கையாளும் முறைகள் குறித்தும், மக்காத குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் மாணிக்கம் நன்றி கூறினார்.

    Next Story
    ×