என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம் நடந்தது.
ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
- முகாமில் மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- முடிவில் ஆசிரியை கற்பகவல்லி நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட தேசிய பசுமை படை பொறுப்பாசிரி யர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நாகூர் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை சுற்றுச்சூழல் துறை கிரேடு எப் தொண்டு நிறுவனம் , நாகூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய பயிற்சி முகாமை முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் ராமநாதன், நாகூர் ரோட்டரி கிளப் செயலர் ரமேஷ், பொருளாளர் கரிகாலன், தலைவர் இமையாத் அலி கிரெசென்ட் பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் சியாமளா , பானு , மாலதி, பணி நிறைவு நகர் நல அலுவலர் அறிவழகன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
கருத்தாளர்களாக தோட்டக்கலை துறை சந்தோஷ், ஊட்டச்சத்து உணவு முறை துறை பேராசிரியர் ரிபாத் நிஷா, சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
அமிர்தா வித்யாலயா மற்றும் வித்யாஷ்ரம் மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக நாகை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கி ணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார்.
முடிவில் ஆசிரியை கற்பகவல்லி நன்றி கூறினார்.






