என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகை வாலிபர் மர்மச்சாவு
- மதுபான கடைக்கு மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.
- தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் அந்தனப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 21). இவர் தனது நண்பர்க ளோடு காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினத்திற்கு உள்ள தனியார் மதுபான கடைக்கு மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவருடன் உடன் சென்ற நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் கோகுலை நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கோகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வாலிபரின் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை யில் சேர்த்த அவரது நண்பர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நண்பர்களோ டு மது அருந்த சென்ற 21 வயது வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் அவரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது. கோகுல் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இறந்தாரா, அல்லது வேறு காரணமாக என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்