என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.
    • வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சி கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது.

    இந்த ஆகாயத்தாமரையினால் வடகிழக்கு பருவமழையையொட்டி மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள்புகும் அபாயம் உள்ளது.

    எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் பொதுத்துறையினர் ஈடுப்பட்டனர்.

    இந்த பணியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது நாகை மாலி. எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • குளத்தில் முதலை இருப்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது.
    • 6 மாதமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வேம்பதேவன்காடு பகுதியில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அதே பகுதியில் உள்ள புதுக்குளத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் சுமார் 6 மாத்திற்கு முன்பு இந்த குளத்தில் முதலை இருப்பது பொது மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இது குறித்து கோடியக்கரை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தலைமையில் வனக்காவலர்கள் குளத்திற்கு சென்று முதலையை தேடிப்பார்த்தனர். அப்போது முதலை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் குளத்தின் கரையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. பின்னர் குளத்தில் வலைகள் வைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலையில் பொது மக்கள் அந்த வழியாக நடந்து சென்றனர். அப்போது வலையில் முதலை சிக்கியது தெரியவந்தது. இதைத் தொடந்து பொது மக்கள் கோடியக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனக்காவலர்கள் மற்றும் தீயணைப்புதுறையினர் அங்கு சென்று வலையில் சிக்கிய சுமார் 5 அடி நீள 30 கிலோ எடையுள்ள முதலையை பிடித்தனர். பின்னர் பிடிப்பட்ட முதலை கும்பகோணம் அணைக்கரை பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 6 மாதமாக பொது மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரையாற்றினார்.
    • பேரணியானது திருமருகலில் தொடங்கப்பட்டு திட்டச்சேரியில் முடிவடைந்தது.

    நாகப்பட்டினம்:

    பெருகிவரும் வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளிலில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

    திட்டச்சேரி(ப.கொந்தகை) கடை வீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர் திட்டச்சேரி (ப.கொந்தகை) கடைவீதியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி திருமருகல் கடைவீதியில் முடிக்கப்பட்டு பின்பு பொது மக்கள் மத்தியில்தலை க்கவசம் உயிர்க்கவசம் என்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விழிப்புணர்வு உரையாற்றினார்.

    மீண்டும் பேரணியானது திருமருகல் கடைவீதியில் இருந்து தொடங்கப்பட்டு திட்டச்சேரி காவல் நிலை யத்தில் முடிக்கப்பட்டது.

    • காயமடைந்தவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை தெற்கு பகுதியை சேர்ந்தவர் ராமையன் (வயது 82).

    இவர் தனது மகன் சுப்பிரமணி யனுடன் (53) மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் பகுதிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்திருந்த ராமையன் மயக்கம் ஏற்பட்டு தவறி கீழே விழுந்து விட்டார்.

    இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ராமையன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • முகாமில் பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
    • பயிற்சியில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், உணவு பாதுகாப்பு மேற்பார்வை யாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமைதாங்கினார்.

    தனியார் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த கார்த்திக் நாகப்பட்டினம் நகரம் மற்றும் வட்டாரத்தில் ஹோட்டல், இனிப்பகம் மற்றும் பேக்கரியில் பணிபுரிபவர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி வழங்கினார்.

    நாகப்பட்டினம் நகர ஹோட்டல், தேநீர் மற்றும் இனிபக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் இரா.முருகையன் மற்றும் நாகூர் நகர வர்த்தகர் சங்க நிர்வாகி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உணவு தயாரிப்பின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தரமான மூலப்பொருட்களை பயன்படுத்துவது, தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை பாது காப்பாக வைத்திருப்பது, பரிமாறுவது உட்பட அனைத்து உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    பின்னர் பங்கேற்பாளர்கள் சந்தேகங்க ளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் 80-க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர்.

    முடிவில் கீழ்வேளூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனிபிரபு நன்றி கூறினார்.

    • காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • 2 சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து டீசல் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்க்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் நாகூர் அருகே வெட்டாறு பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த 2 சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    இதில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு உரிய அனுமதியில்லாமல் 5ஆயிரத்து 100 லிட்டர் டீசல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் நாகூர் பண்டகசாலை தெருவை சேர்ந்த அரவிந்த்குமார், நாகை தோள்கிடங்கு மெயின் ரோட்டை சேர்ந்த செல்லப்பாண்டி என்பது தெரியவந்தது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 5100 லிட்டர் டீசலையும், 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்து, அரவிந்தகுமார், செல்லப்பாண்டி, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • தெரு விளக்கு எரியாததால் அதை பழுது நீக்கம் செய்ய கூறியுள்ளனர்.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வடுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் ( வயது 22). இவர் வேளாங்கண்ணி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் லைன் மேனாக பணியாற்றி வந்தார்.

    சம்பவதன்று பேரூராட்சியில் பணியாற்றி விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் தண்ணிலப்பாடி கிராமத்தில் தெரு விளக்கு எரியாததால் அதை பழுது நீக்கம் செய்ய கூறியுள்ளனர்.

    அதை தொடர்ந்து மின்கம்பத்தில் ஏறிய போது எதிர்பாராத விதமாக வெற்றிவேலை மின்சாரம் தாக்கியது.

    இதில் அவர் மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மின்சாரம் இறந்த வெற்றிவேலுக்கு திருமணமாகி 4 மாத பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகள் ஏதேனும் ஒன்றில் பிரிமியம் செலுத்தி பயன் பெறலாம்.
    • திருமருகல் ஒன்றியத்தில் சம்பா, தாளடி சாகுபடி தொடங்கி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது:-

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் சம்பா,தாளடி சாகுபடி தொடங்கியுள்ளது.நெற்பயிர்களை இயற்கை இடர்பாடுகள், மழை,வெள்ளம் மற்றும் பூச்சி நோய் தாக்கப்பட்டால் விவசாயிகளை பாதுகாப்பதற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல் பயிர்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு 1.5 சதவிகித பிரிமியத்தொகை ரூ.539 மட்டும் செலுத்தி விண்ணப்பம்,முன்மொழிவு படிவம்,வங்கி கணக்கு புத்தகம்,ஆதார் நகல்,சிட்டா அடங்கல் ஆவணம் ஆகியவற்றை வரும் 15-ம் தேதிக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகள் ஏதேனும் ஒன்றில் பிரிமியம் செலுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போதை பொருட்கள் விற்பதை நிறுத்திவிட்டு உணவு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
    • முடிவில் துணை தலைவர் காசி அறிவழகன் நன்றி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் திருமருகல் வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் உணவு பாதுகாப்பு பதிவு,உரிமம் பெறும் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு திருமருகல் வர்த்தக சங்க தலைவர் ஜெயபால்சங்கர் தலைமை வகித்தார்.

    முன்னாள் வர்த்தக சங்க தலைவர் தியாக சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.முன்னதாக வர்த்தக சங்க செயலாளர் காமராஜ் வரவேற்றார். இதில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ், திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அந்தோணி பிரபு ஆகியோர் கலந்துக் கொண்டு உணவு பாதுகாப்பு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், குட்கா,பான் மசாலா போன்றவற்றை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு,அரசின் விதிப்படி உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என பேசினார்.

    இதில் வர்த்தக சங்க பொருளாளர் அ.ஹரிஹரன்,வர்த்தக சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைவர் காசி அறிவழகன் நன்றி கூறினார்.

    • பராம்பரிய இயற்கை சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
    • பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருக்குவளையில் தேசிய அளவிலான 17-வது நெல் திருவிழா நடைபெற்றது.

    கிரியேட் நமது நெல்லை காப்போம் மற்றும் சேவாலயா ஏரொட்டி வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் நிறுவனம் இணைந்து நடத்திய நெல் திருவிழாவில் பராம்பரிய இயற்கை சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    மேலும் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மாப்பிள்ளை சம்பா, தங்கச்சம்பா, சீரக சம்பா, தூயமல்லி போன்ற பாரம்பரிய நெல் விதைகள் 100 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், கிரியேட் -நமது நெல்லை காப்போம் திட்ட இயக்குனர் சுரேஷ் கண்ணா, சேவாலயா தொண்டு நிறு வன தலைவர் முருகப்பெருமாள், திருக்குறளை ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன், நமது நெல்லை காப்போம் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமருகலில் தேசிய மையமாக மாற்ற வங்கி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கோபுரஜபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒன்றியத்தில் செயல்படுத்த ப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் கோபுரஜபுரம் ஊராட்சியில் மகளிர் குழு கட்டிடம்,சமுதாய கூடம், அங்கன்வாடி கட்டிடம், கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டித் தர வேண்டும், தரம் உயர்த்தப்பட்ட திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும்.

    54 வருவாய் கிராமங்களை கொண்ட திருமருகலில் தனி சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

    திருமருகலில் தேசிய மையமாக மாற்ற வங்கி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பெற்றுக் கொண்ட முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், இளஞ்செழியன், ஆரூர் மணிவண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் நன்றி கூறினார்.

    • தீ விபத்தின் போது தற்காத்து கொள்வது எப்படி?
    • தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் நேற்று ஆய்வு செய்தார்.

    திருமருகல் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் திலக்பாபு தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மழை, வெள்ளம் வரும்போது கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்களை பாதுகா த்துக் கொள்வது, மற்றவ ர்களை காப்பா ற்றுவது குறித்து செயல்முறை நடத்தி காண்பிக்கப்பட்டது.

    மேலும் தீ விபத்தின் போது தற்காத்து கொள்வது குறித்தும், தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், கலைவாணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×