search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "booze"

    • கீழ்வேளூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

     நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்

    வேளூர் அருகே ஆழியூர் பிரிவு சாலையில் சிக்கவலம் தோப்பு தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 42), சிக்கல் அய்யனார்

    கோவில் தெருவில் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நல்லபிள்ளை மனைவி போதுமணி (55)

    ஆகிய 2 பேரும் சாராயம் விற்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • பிஞ்சியூர் பகுதியில் சாராயம் விற்ற செல்லத்துரை கைது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் போலீசாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருத்துறைப்பூண்டி அருகே அருகே சாராயம் விற்ற நந்திமாங்குடி பகுதியை சேர்ந்த செல்வராஜ்(வயது58), பிஞ்சியூர் பகுதியில் சாராயம் விற்ற செல்லத்துரை(48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    திருக்கோவிலூர் அருகே விளைநிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மேலப்பழங்கூர் கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான விளை நிலத்தில் பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவமாக திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மேலப்பழங்கூருக்கு விரைந்து வந்து, விளை நிலத்தில் சோதனை நடத்தியதில், நிலத்தில் தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 18 பிளாஸ்டிக் கேன்களில் 630 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து போலீசார் எரிசாராய கேன்களை பறிமுதல் செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதேஊரை சேர்ந்த சூசைராஜ், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் எரிசாராயத்தை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து எரிசாராயத்தை பதுக்கி வைத்ததாக சூசைராஜ்(வயது 39), மணிகண்டன்(39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள். 
    ×