search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free sarees"

    • அறிவழகன் அகல்யா அறக்கட்டளையை நடத்தி வருகிறார்
    • தீபாவளி முன்னிட்டு பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் 25-வது வார்டு கவுன்சில் கோடியக்காடு, கோடியக்கரை பகுதியை உள்ளடக்கியது.

    இந்த வார்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த அறிவழகன் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இவர் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் துணை பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார்.

    இவர் தான் ஏற்படுத்தி உள்ள அகல்யா அறக்கட்ட ளையின் சார்பில் அப்பகுதி மக்களுக்கு தீபாவளி முன்னிட்டு குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு கோடியக்காடு கிராமத்தில் உள்ள 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்.

    கோடியக்கரை கிராமத்திற்கு விரைவில் அங்கு உள்ள குடும்ப பெண்களுக்கு இலவச சேவைகள் வழங்கப்படும்.

    முன்னதாக வேதாரண்யம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவரும், 25 வது வார்டு வேதாரண்யம் ஒன்றிய கவுன்சிலருமான அறிவழகன் சட்டமன்ற உறுப்பினரை சால்வை அணிவித்து வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கிரிதரன், நாகை அ.தி.மு.க. பிரமுகர் சிவபெருமான், கோடியக்காடு அதிமுகவை சேர்ந்த தமிழ்வாணன், பக்கிரிசாமி மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

    • காமராஜர் பிறந்தநாளில் ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளை மதுரை மேயர் இந்திராணி வழங்கினார்.
    • அறநிலையத்தின் பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.

    மதுரை

    பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலையம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா, தெப்பக்குளம் காமராஜர் அறநிலையத்தில், நடந்தது.

    அறநிலையத்தின் தலைவர் ஜெமினி எஸ்.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் முன்னிலை வகித்தார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் வி.பி.மணி, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் மற்றும் பொறுப்பு செயலாளர் பி.தர்மராஜ், துணைத்தலைவர் சி.பாஸ்கரன், துணைச்செயலாளர் பி.செந்தில்குமார் விடுதிக்குழு செயலாளர் பி.குமார் ஆகியோர் பேசினர்.

    மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் 1500 இலவ சேலைகளை ஏழை பெண்களுக்கு வழங்கினார். மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் எம்.முகேஷ் சர்மா, அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக் குழு தலைவர் மு.சிதம்பர பாரதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அறநிலையத்தின் பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.

    ×